வால்ட் விட்மன் வசனக் கவிதை – 68 ஆதாமின் பிள்ளைகள் – 3

This entry is part 2 of 22 in the series 30 மார்ச் 2014

 (Children of Adam)

(Whoever You are Holding Me Now in your Hand)

 

இப்போது உன் கரத்தால் என்னைப்

பற்றி கொண்ட நீவீர் யாராயினும் !

 

 (1819-1892)

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன்கனடா

 

 

 

 

இப்போது உன் கரத்தால்

என்னைப் பற்றிக் கொண்ட நீவீர்

யாராயினும்,

எல்லாம் பயனற்றுப் போகும்

ஒன்று மட்டும்

இல்லாமல் போயின் !

மேலாக உமக்கு

முன் எச்சரிக்கை விடுப்பேன் 

மேற்கொண்டு நீவீர்

முயல்வ தற்கு முன்பு !

நீவீர் நினைப்பது போல்

நானில்லை !

வேறானவன் நான் !

யாரென்னைப் பின்பற்ற வருபவன் ?

என் அன்புக்கு உரியவனாய்

முன்வந்து முத்திரை இடுபவன்

யாரென்று சொல் !

 

 

உன் பாதை ஐயப்பாட்டுக்கு

உரியது !

அதன் விளைவு 

உறுதிப்பாடு இல்லாதது !

ஒருவேளை

அழிவுக்குச் செல்வது !

இல்லை யென்றால் நீ

எல்லா வற்றையும் கைவிட்டுத்  

துறக்க வேண்டும்.

நான் மட்டும் நீ

எதிர்பார்க்கும் 

ஏற்புடை தனிவிதி யென

எண்ணிக் கொள் !

உன் புதுப்

பருவ காலம்

வருவதற்கு நெடுங்காலம்

நீடித்துக்

களைப்புண் டாக்கும் !

 

 

கடந்த காலத்தில் நிகழ்ந்த

உன் வாழ்க்கை

வரலாற்றுக் கொள்கை முழுதும்,

உன்னைச் சூழ்ந்தோர்

வாழ்வுகளையும்

கைவிட வேண்டும் நீ !

ஆதலால்

விடுவிப்பாய் என்னை

இப்போது, மேலும்

உன்னைத் துயர்ப்படுத்தும்

முன்பு,

எடுத்து விடு

உனது ரங்களை

எனது தோள் மீதிருந்து !

என்னைக் கீழிறக்கி விட்டுப்

போய்விடு

உன் பாதையில் !

 

 

+++++++++++++++++++++++

    

தகவல்:

1.      The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

2.       Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley  [First 1855 Edition] [ 1986]

3.      Britannica Concise Encyclopedia [2003]

4.      Encyclopedia Britannica [1978]

5.      http://en.wikipedia.org/wiki/Walt_Whitman  [March 26, 2014]

Series Navigationவாழ்க நீ எம்மான் (2)அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் – தி.க.சி. அஞ்சலிதொடுவானம் 9. ஒளித்து வைத்த ஓவியங்கள்சீன மரபு வழிக்கதைகள் – 1.மெங்கின் பயணம்பட்டறிவுகளின் பாடங்கள் – [எஸ்ஸார்சியின் ‘தேசம்’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து]மூத்த – இளம்தலைமுறையினர் ஒன்று கூடிய பிரிஸ்பேர்ண் கலை – இலக்கிய சந்திப்பு அரங்குமருத்துவக் கட்டுரை டிங்கி காய்ச்சல்ராதாதினமும் என் பயணங்கள் – 10திண்ணையின் இலக்கியத் தடம் – 28ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-37அன்னம் விருது பெறும் எழுத்தாளர் சங்கரநாராயணன்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *