This entry is part 33 of 46 in the series 26 ஜூன் 2011

சுத்தமாய் வெள்ளைத்தாள்
சிதறிய கிரெயோன் கலர்கள்
இரண்டு கோடுகள்
ஒரு கோணல் வட்டம்
நம்பிக்கையோடு
யானைக்கும் தும்பிக்கையும் ஆயிற்று

குழந்தைக்கோ கர்வம்
ஊதா நிற யானையுடன் ஊர்ந்து போயிற்று.

யானைக்கு ஊதாநிறமா?
அதிருப்தியோடு கேட்டார் ஆசிரியை
இரண்டு கால் யானை எங்குள்ளது
அடித்துத் திருத்தினார்

குழந்தையின் ஊதா யானை ஊனமுற்றுப்போக
அதன் மனசின் மேலே தன் செருப்பு சப்திக்க
நடந்து போனார் ஆசிரியை.

சமீலா யூசுப் அலி
மாவனல்லை
இலங்கை

Series Navigationவாழ்தலை மறந்த கதைஇருட்காட்டுக் கபுறுக்குள் அமைதியாய் உறங்கும்