This entry is part 11 of 51 in the series 3 ஜூலை 2011

வெள்ளுடை
தேவதைகளையும்
செவ்வுடை
சாமிகளையும்
மஞ்சளுடை
மாட்சிமைகளையும்
பச்சை உடை
பகைமைகளையும்

படிமங்களாய்ப்
புதைத்தவற்றை
வர்ணாசிர தர்மமாய்
வெளியேற்றும்
ப்ரயத்னத்தில்..
ப்ரக்ஞையோடு
போராடித்
தோற்கிறேன்..

விளையாட்டையும்
வினையாக்கி
வெடி வெடித்துத்
தீர்க்கிறேன்..
எப்போது உணர்வேன்
வண்ணங்களை..,
அழுக்கேறாத
ஆன்மாவின் உடைகளாய்..

Series Navigationபாராட்டுவதற்கு ஏதுமற்றவரா கருணாநிதி?எனது இலக்கிய அனுபவங்கள் – 5 விமர்சனமும் எதிர் வினையும்