குருதி சுவைக்கும் வாழ்வு எனக்குறியது.

This entry is part 23 of 31 in the series 19 பிப்ரவரி 2012

கிண்ணியா இஜாஸ்

குருதி தோய்ந்த முகத்துடன் நாளைய

நகர்வுக்கான தடம் பதித்தல் பற்றி

சிந்திக்கையிலும் நேற்றைய நினைவுகள்தான்

என் ஈரமாகிப் போன மனதை முத்தமிடுகின்றன.

பிஞ்சு மனதில் விதைக்கப்பட்ட நஞ்சுகள்

கொஞ்சம் கொஞ்சமாய் பெருப்பிக்கப்பட்டு

இன்று காற்றுடைந்த பலூனாய்ப் பரவிப்

போய்க் கிடக்கிறது. எதுமே செய்ய

இயலாது போகையிலும் உண்மையின்

உறைவிடம் இன்றும் அநாதரவற்ற

நிலையில் இருக்கையிலும்

அடிமைப் படுத்தப்பட்ட வாழ்வுக்கும் மீழ்தழின்றி

தவிக்கும் பொழுதுகளிலும் மெழுகு பூசப்பட்ட

வாழ்வுக்கான போர்கைள் கைகளில்

சிக்கிக் கொள்ள எத்தனிக்கையிலும்

நரம்புடைக்கப்பட்ட நாட்கள்தான் என்றுமே

எல்லையில்லாமல் விழிப்புக்குள்ளாகிறது.

மொழிதலுக்கும் மொழி பெயர்ப்புச் செய்து விட்டதும்

எழுந்த ஆக்ரோஷங்கள் இன்னும்

அமைதிப் படாததல்தானா

இன்னும் என் ஆன்மா

இருள் பற்றலுக்குள்ளாகிறது.

எண் திசைகளிலும் எமை நோக்கும் தோட்டாக்கள்

எம்மைக் குறி வைத்தாலும் நியாயம் தேடிய தராசுகள்

தாறுமாறாய் உயர்கையிலும் ஊதிச்சுருங்கும்

இதயத்தின் சுற்றோட்டத்தை சீர் படுத்த யாருமற்ற

அநாதையாய் நான் தவிக்கையிலும்

சரிதலுக்குள்ளாகும் எண்ணம் மட்டும் உப்புக்கரிக்கப்பட்டு

நாளைய வாழ்தளைக் கசிப்புக்குள்ளாகி விடுகிறது.

நம்பிக்கையில் பற்றிப் பிடித்த கயிறுகளும்

மூன்று சாண் அளவில் அறுக்கப் பட்ட போதிலும்

அதை இறுக்கக் கட்ட முன் வரும் உள்ளங்களோடுதான்

பயணப்பட்டு விடுகிறது என் மனதும்.

நிச்சயம் பயணப்பட இருக்கும் வாழ்தலைத்

தடை செய்ய கொளுத்தப் பட்டு விடும்

நெருப்புக்குள் குளிர்காயும் காலம்

நல்ல கைகோர்ப்பினால் வளப்படுத்தப்பட்டு

விடுகிறது ஒவ்வொரு செயற்பாடுகளிலும்.

தற்போதுகளில்

இருள் நீங்கிய நாளைய வாழ்தல் எப்படியும்

நாளைக்கு எமக்கு வசப்படத்தான் போகிறது.

Series Navigationஇஸ்லாத்தின் உடனான மார்க்ஸிய உரையாடல்ஐங்குறுப் பாக்கள்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *