This entry is part 4 of 32 in the series 13 ஜனவரி 2013

அன்புடையீர்,

வணக்கம்.. சென்னை நநதனத்தில் நடந்து கொண்டிருக்கிற 2013ம் ஆண்டின் புத்தகக் கண்காட்சியில் கடை எண்: 488 மற்றும் 489 ’கோனார் மாளிகை’ பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தாரின் கடைகளில் என்னுடைய 4 புத்தகங்கள் வெளியாகி உள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர்கள் இயன்றால் சென்று வாங்கிப் படித்து தங்களுடைய மேலான கருத்தைப் பகிர்ந்து கொண்டால் நன்றியுடையவளாக இருப்பேன். இதில் பெரும்பாலான கதைகள் நம் திண்ணையில் வெளியானது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நூல்களின் விவரம் வருமாறு:

(1) விடியலின் வேர்கள் – பேராண்மைமிக்க பெண் சாதனையாளர்கள்

(2) கனலில் பூத்த கவிதைகள்! – சிறுகதைத் தொகுப்பு

(3) கனவு தேசம் – சிறுகதைத் தொகுப்பு

(4) நம்பிக்கை ஒளி! – 2 குறுநாவல்கள்

நன்றி.

அன்புடன்
பவள சங்கரி

Series Navigation‘எனது பர்மா குறிப்புகள்’ ‍பற்றிய ஒரு வாசகனின் சில‌ குறிப்புகள்மெய்ப்பொருள்