This entry is part 1 of 13 in the series 30 ஆகஸ்ட் 2015

 

கோலெடுத்தான்

குரங்காட்டி

ஆடியது குரங்கு

கர்ணம் போட்டது

காவடி எடுத்தது

தங்கச்சி பொம்மையைத்

தாலாட்டியது

இரண்டு கால்களால் நின்று

இசைக்கு ஆடியது

கைகளை ஏந்தி

காசு கேட்டது

குடும்பம் நடந்தது

குரங்காட்டிக்கு

ஒரு நாள்

மனம் மாறினான்

குரங்காட்டி

ஒரு குரங்கால்

நம் குடும்பம் நடப்பதா?

வெட்கம்

குரங்கை காட்டிலே விட்டு

வீடு ஏகினான்

பாவம் குரங்கு

அதற்கு சுதந்திரம்

புரியவில்லை

செடிகளிடமும்

சில்லரை மிருகங்களிடமும்

காசு கேட்டுத்

திரிகிறது.

அமீதாம்மாள்

Series Navigationஇசை – தமிழ் மரபு – 3