வாளி கசியும் வாழ்வு

This entry is part 3 of 11 in the series 11 ஜூன் 2023

கோவிந்த் பகவான்.

மூதாதையரின் தொன்ம கிணற்றிலிருந்து

நீர் இறைத்துக்கொண்டிருக்கிறாள் ஒருத்தி.

அடி ஆழம் வரை தொங்கும் கயிறு

பல நூற்றாண்டுகளின் நீளம்.

மூச்சிரைக்க அவள் இறைக்கும்

வாளி நீரிலிருந்து

கொஞ்சம் கொஞ்சமாய்

வழிந்து கொண்டிருக்கிறது

இப்பெரும் வாழ்வு.

    -கோவிந்த் பகவான்.

Series Navigationபார்வை ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -2 காட்சி 1 பாகம் -6

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *