புலித்தோல்

This entry is part 4 of 6 in the series 20 ஆகஸ்ட் 2023


வளவ. துரையன்

என் நட்புக் கோட்டைக்குள்
சில துரோகிகள்
ஊடுருவி விட்டார்கள்.
பசுத்தோல் போர்த்திய புலிகள்
எல்லாம் அந்தக் காலம்.
இப்பொழுது
புலித்தோலைப் போர்த்திய
பசுக்கள் உலவுகின்றன.
ஆனால்
பசுக்களின் பார்வையும்
பண்பும் கொண்டதாகப்
பச்சைப்பொய் பேசுகின்றன.
பார்வையில் பாசிபோல்
தெரிந்தாலும் விலக்கினால்
பாதாளத்தில் சுறாக்கள்.
குளக்கரையில் கசிவு
ஏற்படாமல் காப்பதிலும்
கோட்டைச் சுவர்களில்
விரிசல் விழாமல்
பார்த்துக் கொள்வதிலும்தான்
வாழ்க்கையின்
சாமர்த்தியம்
இருக்கிறதாம்.

Series Navigationரஷ்யாவின் நிலவுத் தளவுளவி லூனா -25 பழுது ஏற்பட்டு நிலாத் தளத்தில் விழுந்து முறிந்ததுநாவல்  தினை              அத்தியாயம்    28
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *