மோகமுள்

This entry is part 2 of 6 in the series 30 ஜூன் 2024

  

தி.ஜா.வின் மனதிலே 

குடமுருட்டி ஆற்றங்கரை 

வாழை,பலா,மா தோட்டங்கள் 

சத்திரம், பிள்ளையார் கோவில்.

வலப்பக்கம்  அக்ரஹாரம் 

இடப்பக்கம் வேளாளர் தெரு 

மேற்கே காவிரி 

கிழக்கே அரிசன தெரு 

இத்தனை அழகோடு  கீழவிடயல் 

அவரோட மனதினிலே 

அழியாக்கோலங்கள். 

நதியோடு விளையாடி 

ராகங்கள் பலபாடி 

மோகமுள் படைத்துவிட்டார்.

காலமெனும் நதியினிலே 

காவியப்படகில் ஏற்றிவிட்டார். 

காதலையும், காமத்தையும் 

கணக்கோடு கலந்துவிட்டார். 

இனிவரும் தலைமுறைக்கும்

மோகதீப தரிசனத்தை

காலவெளியில் கலந்துவிட்டார். 

ஜெயானந்தன்.

Series Navigationஎன் தாய் நீகவிதைகள்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *