நூலேணி பதிப்பகம், அமெரிக்கத் தன்முனைக் கவிதைக்கூடம் இணைந்து நடத்திய நூல் வெளியீட்டில்
அமெரிக்கா, தமிழ்நாடு கவிஞர்களின் தன்முனைக் கவிதை நூல்கள் வெளியீடு
நூலேணி பதிப்பகம், அமெரிக்கத் தன்முனைக் கவிதைக்கூடம் இணைந்து நடத்திய நூல் வெளியீடு 22-12-2025 திங்கட்கிழமை மாலை சென்னை, மேடவாக்கத்தில் கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் தன்முனைக் கவிதைகள் நூலகத்தில் நடைபெற்றது.

கவிஞர் கன்னிக்கோவில் இராஜா-வின் ‘தன்முனைக் கவி கார்த்திகை’, கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி-யின் ‘தன்முனைத் தளிர் கார்த்திகை’, பாவலர் கல்லை மலரடியானின் ‘தன்முனை மலர் கார்த்திகை’ நூல்களை கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் (நிறுவனர், தன்முனைக் கவிதைகள் குழுமம்) அவர்கள் வெளியிட, கவிஞர்கள் புதுகை ஆதீரா, அகவலன், வேலாயுதம்.ந ஆகியோர் பெற்றுக் கொண்டார். அருகில் கவிஞர் கண்மணி கண்ணன் மற்றும் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா
இந்நூலின் வெளியீட்டு விழாவில் கவிஞர் கண்மணி கண்ணன், திருமதி. அருள் சக்தி, கல்யாணசுந்தரம், திருமதி. விஜயலட்சுமி, கவிஞர் டாடோ செ.க.சந்திரகலா கவிஞர் குணசேகரன் கவிஞர் புதுகை ஆதீரா, கவிஞர் அகவலன், கவிஞர் வேலாயுதம்.ந, உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியைக் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ஒருங்கிணைத்தார். தன்முனைக் கவிதை வரலாற்றில் மாதம் ஒருநூல் வரிசையில் ‘கார்த்திகை’ மாதத்தின் நூல்கள் வெளியீடு சிறப்புற நடைபெற்றது.
- அமெரிக்கா, தமிழ்நாடு கவிஞர்களின் தன்முனைக் கவிதை நூல்கள் வெளியீடு
- அன்பு என்ற விதை….
- கலைகின்ற பொய்கள்
- மழை புராணம் – 13
- முடியாமையில் முகர்ந்த வாசனை
- ஜாலம்
- இரை
- பெர்ட்ராண்ட் ரஸ்ஸலின் ‘தி காங்க்வெஸ்ட் ஆஃப் ஹாப்பிநெஸ்’ நூலின் – அத்தியாயம் 6
- பச்சா பாசி – அத்தியாயம் ஆறு