This entry is part 4 of 8 in the series 15 பிப்ரவரி 2026

லாவண்யா சத்யநாதன்

மருத்துவனையொன்றில் 

ஸ்பெஷல் வார்டில் 

சேர்க்கப்பட்டிருப்பதாய் நீ

அனுப்பிய புலனத் தகவல் பார்த்து

என் காதல் மணல்வீடாகிவிடுமோவென்ற 

பதற்றத்தில் ஓடோடி வந்தேன்,

உன் தந்திரம் புரியாமல்

சிரித்த முகத்தோடும் 

குழைந்த சொற்களோடும் 

முரட்டு வலிமையோடும் . 

என் கன்னிமையைக் களவாடினாய்.

பிந்தைய சந்திப்பில் மணமுடிக்கலாமென்றேன்.

தலைமறைவானாய்.

ஏமாளியானேன் என்று தெரிந்தும் 

எனைக் காண வருவாயென்று காத்திருக்கிறேன்

நப்பாசையோடு.

—-லாவண்யா சத்யநாதன்.

.

Series Navigationஅன்பைப் பரிமாறும் தினம்வேர்களின்றி வளரும் விருட்சங்கள்