வளவ. துரையன்
சொர்க்க ரதமொன்று
மெதுவாகப் போகிறது.
சோக முகத்துடன்
பின்னால் ஒரு சிலர்
இப்பொழுதெல்லாம்
தீச்சட்டிக்காரரும்
வண்டியின் உள்ளேதான்;
பின்னால் வாகனங்கள்
மனிதரை இழுத்துப் போகின்றன.
நடந்து செல்பவர்
மிகக் குறைவு.
உடன்பால்தானே
நாளைக்கெல்லாம்
விடுமுறை போட முடியாது.
சீக்கிரம் முடிஞ்சு
ரயிலைப் புடிக்கணும்;
கொடுத்த கடனைப்
புள்ளகிட்ட சொலி இருப்பாரோ?
வயசான சாவுனா
கல்யாண சாவுதாப்பா
அழுகையே இல்ல பாரு;
எல்லாவற்றையும் கேட்டு
பிய்த்துப் போட்ட
பூக்கள் சிரிக்கின்றன.
- சிரிப்பு
- எத்தனை நாளைக்கு?
- வாழ்வு நிகழ்ச்சிகளின் வடிவங்கள் – [சசிகலா விஸ்வனாதனின் சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து]
- கைக்குள்…
- மழை புராணம் – 22
- நூறு குடம்
- தி. ஜானகிராமன் – ஜெயகாந்தன்
- கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், சார்வாகன் எழுதிய “நாதப்பிரும்மம்” சிறுகதை
- நடுவில் சிக்கிய சாதாரண வாழ்க்கை