லாவண்யா சத்யநாதன்
மணிப்புறாக்களின்
மிடுக்கான நடையழகும்
அணில்கள் கால்களை கைகளாக்கி
உணவுண்ணும் அழகும்
வாசலில் முகம் மலர
வருவோரை வரவேற்கும்
செம்பருத்திப் பூவழகும்-
எங்கே மறைந்திருந்தன?
தானொரு மினி புலியெனும்
திமிரோடு நடந்துவரும்
திருட்டுப் பூனை எப்படி நுழைந்தது?
என் கவிதைகளில்.
—-லாவண்யா சத்யநாதன்.