This entry is part 5 of 5 in the series 5 ஜூலை 2026

நேற்று நீ

கேணியில் நீர் இறைக்கும் போதுதான் தெரிந்தது. 

உனக்கு 

வயோதிகம் வந்துவிட்டது. 

திண்ணையில் 

உட்கார்ந்து 

இத்தனை வருடம் தின்ற எனக்கு 

வரும்போகும் மனிதர்களிடம் 

பேசியது போதும்.

இனி 

என்னிடம் கொடு 

வடக்கயிறை. 

ராட்டினம் பழசாகி 

போனது போல் 

நீயும் தான்.

Series Navigation‘சினிமாவின் ஆன்மா’ – சீனு ராமசாமியின் சமீபத்திய நூல்