ஒற்றை மெழுகுவர்த்தி பிரகாசமான சுடர். . காற்றின் அசைவுக்கு சுற்றி சுழன்று அணைகிற போக்கில் சப்பனமிட்டு -பின் நிலைபடுத்தி நெடுநெடுவென்று அலைஅலையாய்… வாழ் சூட்சம நெளிவுகள் . . சூட்சமங்களின் அவசியமற்று மெழுகுவர்த்தியின் காலை சுற்றி வட்டமாய், நீள்வட்டமாய்,நெளிநெளியாய் மோன நிலையில் அசைவற்று – படுவேகமாய்,படுவேகமாய், உருமாறி திளைப்பில் துள்ளுகிறது நெருப்பின் நிழல். . அணைந்த நெருப்பு, தன் மரணத்திற்கு ஒப்பாரி வைக்கிறது கருகிய வாசனையுடன் மெலிந்த புகையுடன். . மறைந்த […]
கிறுக்கலற்ற வெண்தாளை கண்டதும் வரைய தோணுவதை போல .. . கறைகளற்ற அடுப்பறையை கண்டதும் சமைக்க தோணுவதை போல .. . பறக்க தோன்றவில்லை, களங்கமற்ற வானத்தை கண்டதும் ! . ஏனோ தெரியவில்லை!! அக்கணத்தில் , அவ்வொரு பார்வையில் .. சிலிர்க்க வைக்கும் மத்தாப்பு பூக்கள் தெரித்தது உடலெங்கும்.. . தெரித்தது தளும்ப தொடங்க .. மொட்டை மாடியிலிருந்து தடதடவென்று கீழிறங்கி குழந்தையை கட்டி முத்தமிட்டு நிலை பற்றாமல் சுற்றினேன் அங்குமிங்கும்.. . ஏனோ தெரியவில்லை!! […]
மலர் கண்காட்சியில் சிவப்பு நிறத்தில் சின்னதாய் வெள்ளை நிறத்தில் வெகுளியாய் மஞ்சள் நிறத்தில் மகிழ்வாய் … அத்தனையும் அழகு !! எதை பார்ப்ப்து எதை விடுவதென்ற தவிப்பை தவிர்க்க தெரியாமல் லயிக்க நேரமும் இல்லாமல் … கால்பாத வளைகுழியில் பிடிக்க நினைத்தும் கடல் அலை இழுக்க … உருளை உருளையாக நகரும் மணல் துகல்கள் வியப்பான கிச்சுகிச்சு … பிடிக்க நினைத்த தருணங்கள் உருளையாக கிச்சுகிச்சு மூட்டாமல் விசுக் […]
ரோட்டோர பிளாட்பாரத்தில் ஒரு தொழுநோயாளனும் ஒரு தொழுநோயாளியும் அவர்களைத் தாண்டி கால்கள் போகிற போது கைகளை நீட்டி பிச்சை கேட்கிற நேரம் தவிர சுவாரஸ்யமான சம்பாஷனை ஒயாமல்.. பிச்சை விழும் காசில் போட்டியில்லை – எனில் தம்பதியனரோ ? ஓப்பந்தமின்றி சேர்ந்து உள்ளனரோ ? நோய் சந்தித்த பின்பா ? முன்பா ? பின் எனில் உன்னிடமிருந்து தொற்றியதென்ற குற்றபதிவு கண்களிலில்லை முன்பே எனில் ஒருவருக்கொருவர் ஆறுதலோ ? ஆறுதலோ ஆர்வமோ அகநானூறு படலங்களை தீர்மானிப்பது […]