அந்த நொடி எப்போதும் நிரப்பபடாமலே உள்ளது அந்த நொடி எதை கொண்டு நிரப்ப அதை நிரம்பிவழியும் எனது நினைவுகளைகொண்டு அதன் முனையை கூட நிரப்ப முடிவதில்லை கதைகளையும் கவிதைகளையும் ,வார்தைஜாலங்கலையும் கொண்டு நிர்ப்பிவிடலமா? மழையையும் வண்ணத்தையும் கொண்டாவது! பதற்றமான பல பொழுதுகளில் உன்னை நிரப்பும் அந்த நொடியை நினைத்தே மலைத்து போகிறேன் தேடிய பொழுதுகள் உன்னை நிரப்ப போவதில்லை தேடாத பொழுதுகlaal உன்னை நிரப்ப சாத்தியம் இல்லை களவாடவும் முடியாது போனதால் எப்போதும் என்னை பின்தொடர்கின்றது அடர்ந்த […]
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “உனக்கொரு பிரச்சனை இருப்பது தெளிவாகத் தெரிந்தால் உறுதியோடு நீ அதை தீர்வு செய்ய முனைந்திடு ! அதுவே வல்லமை படைத்தோர் செய்வது. முதியோர் ஆலோசனையைக் கேட்டுக் கொள் மேலும்.” கலில் கிப்ரான் (ஞானியின் பொன்மொழிகள்) +++++++++++ திருமணப் பாதையில் ! திருமணப் பேச்சு துவங்கும் முதல் விழி நோக்கோடு ! முதல் முத்த மோடு ! காதலன் காதலி இருவரின் முதல் நோக்கு […]
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா குருநாதரின் ஞான ஒளி பொழியும் போது கூட இருந்த குறை அறிவாளி பேசி மகிழ்ந்து பெருமிதம் அடைவான் ! பிறகு விரைவில் தாறுமாறாய் ஒழுக்க மற்று உரக்க அலறுவான் ! பிரச்சனை இதுதான் தன்மான மற்ற ஒருவனுக்கு விரைவில் வருவ திப்படி மதுவால் ! குடிகாரனுக்குப் பரிவு உள்ளம் இருக்குமே ஆயின் அதனைக் காட்டுவான் குடித்த பிறகு ! ஒளிந்துள்ள சினமும் அகந்தை, […]
__ரமணி ஓர் இனிப்பைச் சுவைப்பது போல என்னைத் திட்டிக்கொண்டிருந்தான் என் உயர் அதிகாரி. என் இயலாமையின் மீது விளையாடிக்கொண்டிருந்தது அவன் மூர்க்கம். பதிலடி கொடுப்பதின் இழப்புச் சுமை வாழ்க்கையை நசுக்கிவிடும் என்பதாலேயே என் சுயம் நெடுஞ்சாலையில் நசுங்கிய தவளையைப்போலக் கால் பரப்பி உறைந்திருந்தது. எனக்கு என் மனைவி அவன் மனைவிக்கு அவன் என்ற தொடர்ச்சியில் அவனுக்கு நான் வன்மையின் வடிகாலாவது சரிதானென்று சமாதானம் கொண்டது மனம்.
Bala S ( tssbala) உன்னிடம் அடிமை என்று பத்திரம் நீட்டுகிறாய், அலைக்கழித்து ஏமாற்றுகிறாய் , பல ஊரில் பல உருவில், தள்ளிச் சென்றேன் துரத்தி பிடித்தாய், பிடிக்க முயன்றேன் உரு மாறிவிட்டாய் விளக்க முயன்றேன் வெறும் வார்த்தை என்றாய், அழகே !!! நான் சரணடைகிறேன், என்னை விட்டு விடு. கண்டேன், புரிந்து கொண்டேன்!!! விளக்க முயன்றேன் , ஓடிவிட்டாய் , உண்மையே !!! என் அறிவிற்கு உன் வேகம் கிடையாது, என்னை விட்டுவிடு.
நடைப்பாதைப் பயணத்தில் வெள்ளையடிக்கப்பட்ட மதகடியில் ஓய்ந்தமர்ந்தேன். கரண்டுக் கம்பங்களில் காக்கையும் மதகடி நீரில் கொக்கும் வயல் வரப்புக்களில் நாரையும் நெத்திலிகள் நெளிந்தோட குட்டிச் சோலையாய் விளைந்து கிடந்தது வாய்க்கால். தேன்சிட்டும் மைனாவும் ரெட்டை வால் குருவியும் குயிலோடு போட்டியிட்டு தட்டாரப்பூச்சிகளும் வண்ணாத்திப் பூச்சிகளுமாய் நிரம்பிக்கிடந்தது மாமரம். மஞ்சள் வெயில் குடித்து பச்சை இலையாய்த் துளிர்த்துக் கிடந்தது நிலம். நெடுஞ்சாலை அரக்கனாக ஒற்றை லாரி என்னைப் புகையடித்துக் கடந்து செல்ல அள்ளியணைத்த அனைத்தையும் அனாதையாய்ப் போட்டுவிட்டு பயணத்தைத் தொடங்கினேன். […]
எங்கோ ஒரு சிறுமி மறைமுக பாலியல் துன்பியலில் பயந்து நடுங்கிக் கிடக்கிறாள். நெடுஞ்சாலை ஓர குத்துப் புதருக்குள் காதலனை சந்திக்க சென்றவளின் பிணம். மிதவாதியா அல்லவா பிரிக்கத் தெரியாமல் சூலுற்றவளுக்கு சிறையில் பிரசவம். காதுகள் மடக்கியும் கண்மூடி மூக்கைப் பிடித்தும் கலங்கும் நெஞ்சடக்கியும் முன்னேறுகிறீர்கள்.. உங்கள் பயணம் உங்களுக்கு.. உங்கள் சிகரம் உங்களுக்கு. எதையும் யாரையும் கண்டிக்கவோ கண்டனம் செய்யவோ துணிவதில்லை நீங்கள். உங்கள் குழந்தைகளை அணைத்தபடி மேலேறுகிறீர்கள். பத்திரமாய் சேர்ந்தது குறித்து மகிழ்கிறீர்கள். தகுதியுள்ளது தப்பிப் […]
உயர்ந்திருக்கும் அம் மலையின் உச்சி மீது வெற்றுப் பார்வையுடன் ஒரு பெண் அவளது இரு புறமும் சிறு குழந்தைகளிரண்டு கீழே முற்புதர்கள் கற்சிதறல்கள் நாகம், விரியன், மலைப்பாம்புகள் நிறைந்திருக்கும் பாதாளம் அகன்ற வாயைத் திறந்துகொண்டு அவளது தலைக்கு மேலே இரவின் கனத்த இருட்டு ஊளையிடும் மழையும் கோடை இடியும் வெற்றியுடன் ஒன்றிணைந்து ஏற்றி விட்டவர் எவரோ இவளை இந்த மா மலை மீது மெதுவாகக் காலடியெடுத்து வைத்தபடி கீழ் விழிகளால் இருபுறமும் பார்த்தபடி அவளைக் கைவிட்டு அவர்களெல்லோரும் […]
மாரியாத்தா…. சந்திகால வேளையில், ஓடி சென்று நெய்வேத்யத்தை கொரித்துக் கொண்டே சிவனிடம் அன்று நடந்தவைகளை பகிர தோன்றியது இல்லையோ ? மகிசாசுரன்களை வதம் செய்கையில், அசதியாக சாய சிவன் தோளை காணாது துவண்டது இல்லையோ ? பக்தர்கள் வரம் நிறைவேறி ஆனந்திக்கையில் நெகிழந்து ,அழுத்தி பிடிக்க சிவன் கரம் தேடாதோ? ஆர்த்தியின் பின்னொளியில் கண்டோம், உன்னை அம்மை தடுப்பவளாய் மட்டும் தனித்து இயங்கும் திடமான உன் ஆளுமையை பிரசாதமாக ,ஒரு துளியை சுவைத்திருந்தாலும் இந்த கதி வந்திருக்குமா […]
பேன்ட் சட்டை அணிந்த அனைவருமே அவன் கண்களுக்கு கோடீஸ்வரர்கள் தான் நானும் அப்படித்தான் தெரிந்திருக்கக் கூடும்! நான் அவனைக் கடந்துபோன அந்த சில நொடிகளில்… நடைபாதையில் அமர்ந்திருந்தான் அவன் கைகளை நீட்டி என்னிடம் எதையோ எதிர்பார்த்தபடி… நிச்சயமாய் என்னிடம் அவன் பணத்தையோ உணவையோ தான் எதிர்பார்த்திருக்கக் கூடும் கல்வி வணிகமாகிப் போன எங்கள் பண(ஜன)நாயக நாட்டின் விலைவாசி ஏற்றத்தால் இப்பொழுதெல்லாம் நானுங்கூட அவனைப்போல் ஒரு நாளைக்கு ஒருமுறையோ இரு நாட்களுக்கு ஒருமுறையோ தான் அரைகுறை வயிறோடு உணவருந்துகிறேன் […]