Posted in

ஓர் இரவின் கீழ் சில நிலாக்கள்..

This entry is part 8 of 46 in the series 26 ஜூன் 2011

வானெங்கும் கருந்திரள்கள்
நிறைத்திடும்
இரவொன்றின் நேர்க்கோட்டில்
அசையும் வளைவுகளென
நெளிகின்றன இதயத்துடிப்புகள்..

நெற்றி வகிடின் இறுக்கத்தினில்
செவ்வானம் ஒன்றை
எழுதிடச் சொல்லி நிற்கையிலே
அறைமுழுதும் வெளிர்மஞ்சள் ஒளியில்
சிறகு விரிக்கின்றன
வண்ணத்துப்பூச்சிகள் சில..

வானவில்லின் நீளத்தில் பேசி தீர்க்க
ஆயிரம் இருப்பினும்
ஒற்றை வெட்கம்
சூடும் உன்னழகினை
யாதென்று எழுதி வார்க்க?

ஒவ்வொரு வார்த்தையையும்
கோர்த்தெடுத்து உறக்கத்திற்கு
பதில் உரைக்கிறேன் நான்..
நிலாக்களைச் சிதறடித்து
விளக்குகளைத்
தனிமையின் இருப்பில் விட்டு
அருகருகே அமர்ந்திருக்கிறோம்,
இரு இணை விழிகளில்
ஒற்றைக்காதலுடன்..

– தேனு [thenuthen@gmail.com]

Series Navigationகாற்றும் நானும்சமன் விதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *