நாக்குள் உறையும் தீ

This entry is part 9 of 24 in the series 13 செப்டம்பர் 2015

பத்மநாபபுரம் அரவிந்தன்
padmaarav
சில நாக்குகள் கனலை
சுமந்து திரிகின்றன

சில நாக்குகள் சதா
ஜுவாலையை உமிழ்கின்றன

சில நாக்குகள் கனல்
சுமக்க எத்தனிக்கின்றன

சில நாக்குகள் பிற நாக்குகளின்
கனலை ஊதி நெருப்பாக்குகின்றன

சில நாக்குகள் கனலை
அணைப்பதாய் எண்ணி
தவறிப் போய்
பெரும் நெருப்பை வருத்துகின்றன..

சில நாக்குகள் தீயை
உமிழ முடியாமல் விழுங்கி
தம்மையே எரித்துக் கொள்கின்றன

மொத்தத்தில் எல்லா நாக்குகளிலும்
உறைந்து கிடக்கின்றது தீ …
—————————-

Series Navigationகுப்பிகண்டெடுத்த மோதிரம்
author

பத்மநாபபுரம் அரவிந்தன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    தமிழ்த்தாசன் தாணு கோலப்பன் says:

    13.9.15.’திண்ணை’இதழில் வெளியான “நாக்குள் உறையும் தீ”கவிதையில் தீ,நெருப்பு, கனல், ஜுவாலை என்ற நான்கு சொற்களை வைத்து நடனமாடியிருக்கிறாா் கவிஞர். நாக்குகளில் உருவாகும் வாக்குகள் தாம் எத்தனை விதம் என்பதை நாசூக்காய் நவின்றிருக்கிறாா்.நல்ல ஒரு கவிதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *