அயலக இலக்கியம் : சிங்கப்பூரிலிருந்து சித்துராஜ் பொன்ராஜ் படைப்பிலக்கியச் சாதனை சமீபத்திய இரு நூல்களை முன் வைத்து …

This entry is part 9 of 13 in the series 6 செப்டம்பர் 2020

1.அயலக இலக்கியம் : சிங்கப்பூர் நாவல்   சுப்ரபாரதிமணியன்

மரயானை சித்துராஜ் பொன்ராஜ் நாவல்

ஏறத்தாழ மூன்று  முதியோர்களை பற்றிய நாவல் இது என்று சொல்லலாம். ஒருவர் சுகவனம் என்ற பள்ளி ஆசிரியராக இருந்தவர். இன்னொருவர் சோமசுந்தரம் என்ற கொஞ்சம் வசதியான தமிழர். இன்னொருவர் சீனக்காரர் .பள்ளி முகப்பில் குழந்தைகளுக்கான ஐஸ்கிரீம் போன்றவற்றை விற்பவர், இந்த மூன்று பேரும் ஒரு பூ இதழின் அடிப்படை மடிப்புகளாக  இந்நாவலில்  இருக்கிறார்கள் .இவர்களைத் தாண்டி நூற்றுக்கணக்கான சிங்கப்பூரின்கள் வெவ்வேறு விதமாக இதில் பரிணமித்து ஒரு வனப்புமிக்க பூவை வடிவமைப்பது  போல இந்த நாவல் அமைந்திருக்கிறது .

 பல்வேறு கலாச்சாரமும் மொழித் தன்மையும் வாழ்வியல் சூழலும் கொண்ட இவர்களின் வாழ்க்கையை முன்னிறுத்தி சிங்கப்பூரின் ஓரளவு சரித்திரத்தையும் சிங்கப்பூரின் ஒரு முக்கியப்  பகுதியான புக்கிட் பஞ்சாங் பகுதியைப் பற்றியும் விரிவாக சொல்லப்பட்ட ஒரு நாவல் என்று சொல்லலாம் .இதில் வருகிற சுகவனம்  கல்வியாளர் ….ஒரு தலைமுறைக்கு  உதாரணம்.  மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்த குடும்பத்தில் முதலாய் உயர்கல்வியை பெற்றுக்கொண்டவர். .இதனால் அவர் அமைப்புகளின் சேவகர் …அமைப்புகளும் அவற்றின் விதிகளும் அவரை எளிதில் பயமுறுத்தும் ஆற்றல் வாய்ந்தவை. சுகவனம் போன்றவர்கள் அந்த சமூகத்தை சமூக ஒழுக்கம் என்று அழைப்பார்கள் .சோமசுந்தரம் சுகவனத்தின் பள்ளியில் ஒன்றாக படித்த கணேசனின் தந்தை .கணேசன் இப்போது தாய்லாந்தில் தலைமையகத்தை கொண்டிருக்கும் அமெரிக்க மென்பொருள் நிறுவனத்தில் கணினி கட்டமைப்பு பொறியாளராக வேலை செய்பவர் .பள்ளிகளுக்காக சமூகத்தில் பெரிய மனிதர்களிடம் நன்கொடைகள் வாங்கி தருவதில் சோமசுந்தரம் சாமர்த்தியசாலி. பல இந்துக் கோயில்களின் நிர்வாகப் பொறுப்பில் பொறுப்புகளில் இருந்தவர். சுகவனம் ஒருநாள் யாருடையதோ இப்படி வாழ்வதற்கும் மிரட்டலுக்கும் பயந்து அந்த நகரம் தன்னை விழுங்கி செரித்து விடக்கூடும் என்று ஆழமான நம்பிக்கையில் இருப்பவர். பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தபோது சுகவனத்திற்கு டைகர் என்ற ரகசிய பட்டப்பெயர் இருந்தது உண்மையிலேயே தன்னை  புரியாத தான பல விஷயங்கள் ஆக்கி வைத்திருக்கின்றன என்று அவர் நினைப்பவர். அவர் பின்னால்  இளைஞர்களால் தாக்கப்படுகிறார் அது அவருடைய வாழ்க்கையின் முக்கிய நிகழ்வாக இருக்கிறது. தன்னை சரி செய்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கிறது உங்களுக்குள்ளேயே காட்டிக் கொடுப்பதை விட மோசமான குற்றம் வேறு எதுவும் இல்லை என்று அவரும் நிற்கிறார் .அந்த அடிபட்ட தருணங்கள் அவருக்கு பல விடயங்களை கொண்டுவருகின்றன. இதற்கு முன்னால் சில தமிழ் இளைஞர்களை சீனர்கள் அடிப்பது பற்றிய குறிப்புகளும் நாவலில் உள்ளன . இவ்வகை  வன்முறைகள் முதியோர்ர்க்கு சங்கடமளிப்பவை..சுகவனத்திற்கு வெளிநாடு என்பது மலேசியா தான் .ஆனால் அவரின் மனைவி ஜெயக்கொடி புற்று நோய் காரணமாக இறந்து விடுகிற போது சோமசுந்தரம் அவரை ராமேஸ்வரம் சென்று சடங்குகள் செய்து வருமாறு வலியுறுத்துகிறார். ஆனால் அவர் செல்ல விரும்பினாலும் தாமதமாகிக் கொண்டிருக்கிறசூழல். இந்த நிலையில் சீனக் கிழவர் தான் செய்கிற ஐஸ் விற்கும் தொழிலில் எப்படி தன்னை திருப்தி படுத்திக் கொள்கிறார். வாழ்க்கையின் சதுர விதிகளை மீறிச் சுயநிறைவு , மனநிறைவு கொள்கிறார் என்பதை சுகவனம் அறிகிறார். எளிய மனிதன் கற்றுக்கொடுக்கும் பாடம். அவரின் அன்பான உலகம்  கண்டுணர்ந்து  ராமேஸ்வரம் சென்று சடங்கு செய்யும் கட்டாயத்தை விலக்கி வைக்கிறார் .. சுகவனத்தின் மனைவி ஜெயக்கொடி பற்றிய முழுமையான சித்திரம் அருமையாக வரையப்பட்டிருக்கிறது. கண்கள் வழியாக அவர் உயிர் போயிருக்கும் என்று சிலர் சொல்கிறார்கள் .டாக்டர் வந்து கண்களை மூடினால் போதும் என்று கூட  யோசித்து வைத்துக் கொண்டிருக்கிறார் சுகவனம் . வேட்டி கட்டுவதில் கூட அவர் சிரமப்படுகிறா.ர் புத்தக வாசிப்பில் அக்கறை உள்ளவராக ஜெயக்கொடி இருக்கிறார் .அதேபோல இசை சார்ந்தும் நாட்டியம் சார்ந்தும் அக்கறை கொள்பவராக இருக்கிறார்.  ஆனாலும் இசை கூடங்களில் பணத்தை செலவழித்தால் கதை கந்தலாகி விடுமென்று அவர் கருத  வேண்டியிருக்கிறது. ஜெயக்கொடி நடனத்திற்கு போவதில் பல சிரமங்கள். சுகவனமும் ஒரு மாதிரி தடை விதிக்கிறார். அப்படி இல்லாமல் அவரை செல்ல அனுமதித்திருக்கலாம் என்ற குற்றவுணர்வு ஜெயக்கொடி இறந்தபின் சுவ்வனத்தின் இதயத்தில் குறுகுறுக்கிறது.  சக்திவாய்ந்த மருந்துகளை கொடுத்து கொஞ்சம் வாழ அனுமதிக்கிற சூழலில் அவரின் புற்றுநோய் நான்காவது கட்டத்தை தாண்டி இருக்கிற காரணத்தினால்  சுகவனம் ஜெயக்கொடியைத் துன்புறுத்த  விரும்பவில்லை.

 சிங்கப்பூர் என்ற மாபெரும் நாடு பற்றிய முழுமையான சரித்திர குறிப்புகளும் சூழலும் பல இடங்களில் சிறப்பாக சொல்லப்பட்டிருக்கின்றன .அதுவும் சவுத் பிரிட்ஜ்  சாலையிலுள்ள மாரியம்மன் கோயில் மிகவும் பழமையான கோயில் சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்த நாகர்கோவில் கடலூர் தமிழர்களால் கட்டப்பட்டது போன்ற விவரங்கள் முதல்கொண்டு பல விஷயங்கள் இந்த நாவலில் விரிவாக சொல்லப்படுகின்றன .ஊர்ஊராக சுற்றுலாத்தலமாகப் போய்  வரலாம் என்பதை அவர் மனதில் பதிந்தாலும் அவர் வெளிநாடு எல்லாம் போகும்  வாய்ப்பை அமைத்துக் கொள்ளாமல் சிங்கப்பூரை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு இருக்கிறார் .சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து இடம் பெயர்ந்து  கதையும் சிங்கப்பூர் ராணுவப்படை உருவாக்கப்பட்டு சிங்கப்பூர் குடிமக்கள் எல்லோருக்கும் அது தேசிய சேவை கட்டாயம் ஆக்கப்படுவதும் அது சார்ந்த சில கதாபாத்திரங்களும் இந்த நாவலில் சரியாக சொல்லப்பட்டிருக்கின்றன, உடல்நிலை மிக சரியாக இருப்பவர்கள் பாவம் செய்யாதவர்கள் தேசிய சேவை  நேரத்தில் அவர்கள் முகாமிலேயே கடினமான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும், ராணுவத்தில் நீ என்னவாக போகிறாய் என்ற கேள்வி அங்கு பலர் எழுப்பப்படுகிறது ,சமையல்காரன் ஓட்டுநர்  எழுத்தர் என்று பலருடைய கனவுகள் அல்லது விருப்பங்கள் இருக்கின்றன. இந்த வாழ்க்கையையின் ஒரு வகைப் பரிமாணத்தை இந்த நாவல் சொல்கிறது.

 யாரிடமும் பங்கு போட்டுக்கொள்ள முடியாது குற்ற உணர்வுக்கு ராமேஸ்வரம் தான் பதில் சொல்லக்கூடும் என்பது கூட சுகவனத்தின் கற்பனைக்குள் இருக்கிறது .பல்வேறு மொழிகள் பேசும் மக்களும் கலாச்சார பாதிப்பு உள்ள மக்களும் என்று எந்த ஒரு நாட்டின் தன்மையை பல கதாபாத்திரங்கள் விளக்குகின்றன உதாரணத்திற்கு சுகவனத்தின் மகளான நீலா ஒரு நைஜீரிய கணவானை மணந்து கொள்கிறாள் ஆனால் அவனுடைய நிலையும் வேலையை தக்க வைத்துக் கொள்ளாத முடிவுகளும் அவர்களை அலைக்கழிக்க வைக்கின்றன .இதுபோல  குடும்ப உறவை சார்ந்த பல கதாபாத்திரங்கள் சிங்கப்பூர் வாழ்க்கையின் பல கலாச்சார அம்சங்கள் சார்ந்த விஷயங்களை வெளிக்கொணர பயன்பட்டிருக்கின்றன. இந்த நாவலின் களமாக சிங்கப்பூரின் புகிட் பஞ்சங் பகுதி இடம்பெற்று ஒரு இமாலய தன்மையுடன் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ” ரயில் கம்பியைத் தாண்டிவிட்டால் முழு பக்கம் காடுதான் .பெரும் கம்பம் .அங்க வீடு வாங்கு .இல்லைனா குழந்தை பெத்துக்கமாடேன்னு சொல்வது சுத்த முட்டாள்தனம் ” என்று கூட கட்டாயங்கள் எழுகின்றன .அப்படி இருந்த இடம் ஒரு பெரும் நகரமாக பின்னால் மாறிவிடுகிறது. அந்த மாநிலத்தின், நகரத்தின்  இயல்பு பற்றி விளக்கமாகவே சொல்லப்பட்டிருக்கிறது சிங்கப்பூரின் பிரதான புக்கிட் தீமா சாலையின் பகுதிகள் உட்பட பல மழைக்காலங்களில் வெள்ளத்தில் மூழ்கியது சிரமப்படுவது முதற்கொண்டு அந்த பகுதியின் தன்மை உருவாக்குவது நாவலில் தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது ,நிலவெளி பற்றிய விஸ்தாரண்மாக அது விரிந்திருக்கிறது .

சுகவனத்தின் உரையாடல்களும் நட்பும் அவருக்கு சில வழிகளை காட்டுகிற அந்த சீன கிழவனுக்கு போட்டியாக பேரனின் பள்ளிக்கூட முகப்பிலேயே ஐஸ்கிரீம் விற்க அவருக்கு ஆசை வருகிறது .அதற்கு முன் பேரனுடன் ஒரு தடவையாவது கால்பந்து விளையாடணும் என்று கூட சொல்லிக் கொள்கிறார் .நிலம் சார்ந்த அனுபவங்கள் ஒரு மனிதனை எப்படி நிர்ணயம் செய்கின்றன என்பதை பழைய புக்கிட் பஞ்சாங் பகுதியும் சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளும் அவை சார்ந்த சரித்திர குறிப்புகளும் அவற்றுடன் தொடர்புடைய மனிதர்களின் முகங்களும் கதைகளும் சுகவனதுக்குள் இருக்கிற போது அதை சுமந்து கொண்டு தெரிகிறார் ,அது அவருக்கு சுகமாக இருக்கிறது

ஒருவகையில் ஒரு சிறுகதை ஆரம்பிக்கிற இடம், அதுவே  முடிகிற இடம் என்று ஒரே களத்தை வைத்துக்கொண்டு இந்த நாவல் முன்னும் பின்னுமாக நகர்கிறது அல்லது ஒரு குறுநாவல் தன்மையில் ஆரம்பமும் முடிவும் நிலை பெறுகின்றன. ஆனால் இவற்றுக்கு 300 பக்க நாவலில் நாவல் தன்மையை கொண்டு வந்திருப்பது சித்தராஜின் சித்து விளையாட்டாக இருக்கிறது .ஒரு நாவல் என்பது பெரிய கால அளவை கொண்டிருக்க வேண்டும் என்ற அடிப்படையை  எல்லாம் இந்த நாவல் தகர்த்து கால அளவை மீறி மனிதர்கள் பற்றிய சித்தரிப்புகளும் அவர்களின் வாழ்வை  முழுமையாகத் தரிசனமாகக் கொண்டு வந்துவிட முடியும் என்பதை இந்த நாவலில் சித்துராஜ் நிரூபித்து  இருக்கிறார்.

ஏதோ ஒரு வடிவத்தை எடுத்துக் கொண்டு உணர்வுகளால் நிரப்பும் எழுத்தாளன் போட்ட முடிச்சை அவிழ்க்கிற முயற்சியில் ஏதேதோ வித்தை செய்ய வேண்டியிருக்கிறது. அந்த வித்தையில் கொஞ்சம் மகிழ்விக்கவும் வேண்டியிருக்கிறது. அந்த முடிச்சுகள் அவிழும் பருவங்களால் இந்நாவலின் நிலம் அமைந்திருக்கிறது. எழுத்தாளனுக்குள் அமிழ்ந்து கிடக்கும் மகிழ்ச்சி,இருட்டு சோகம் என்பதெல்லாம் பிரதிபலிக்கும் பிம்பங்களாக கதாப்பாத்திரங்கள் நடமாடுகின்றன பலரின் நிழல்களாக…  இதிலும் நிழலும் இருட்டும் மனித வாழ்வின் சாரம்சங்களைக் கோடிட்டுப் போகிறது.

இதற்கு முந்தின இவரின்  ” விளம்பர நீளத்தில் ஒரு மரணம் என்ற நாவலில் சிங்கப்பூரின் பன்முக கலாச்சார தன்மையை அடிப்படையாகக்கொண்ட மேல்தட்டு மக்களுடைய வாழ்க்கையை சொன்ன விதத்தில் சிக்கல்களும் சிடுக்கும் நவீனத்துவமும் என்று அமைந்திருந்தது .ஆனால் இந்த நாவலில் மிக எளிமையான கதைசொல்லல் மூலமாக வேறொரு இடத்தை சித்துராஜ் அடைந்திருக்கிறார் .இது திரும்பவும் . தொடர்ச்சியாகவும்  எழுதி கை சுகம் காணக்கூடிய நாவலாசிரியரின் சிறப்பான இடமாக அமைந்திருக்கிறது

300 பக்கங்கள்  ரூ .280 வம்சி வெளியீடு திருவண்ணாமலை

சிறுகதைத் தொகுப்பு :

2. கடல் நிச்சயம் திரும்ப வரும் சித்துராஜ் பொன்ராஜ் சிறுகதைகள்.. சுப்ரபாரதிமணியன்

 சித்துராஜ் பொன்ராஜ் அவர்களின் சிறுகதைகளை அவற்றின் தீவிரமும் ஆழமும் மற்றும் வெவ்வேறு கணங்களையும் கொண்டு உலகசிறுகதைகள் என்று சாதாரணமாக சொல்லிவிடமுடியும். வெவ்வேறு நாடுகளில் நிகழும் கணங்கள் என்பது ஒரு சாதாரண அடிப்படையான தகவல்.ஆனால் அந்த கதை மாந்தர்கள் உலக மாந்தர்களாகவும்  அதன் கூறுகளோடும் கலாச்சாரத்  தன்மையோடும் இணைந்து சரளமாக இருப்பதுதான்அவருடைய கதையை எனக்கு சுகமாக அப்படி ஒரு முத்திரையை தர ஏதுவாகிறது.. பெரும்பான்மையான எழுத்தாளர்கள் அவர்களின் களங்கள்மாறுபடாமல் திரும்பத்திரும்ப தங்களை பாதித்த இடங்களை, களங்களை, ஊர்களை பற்றி  மட்டுமே கொண்டு காலங்காலமாக எழுதப்படுகிறசூழலில் சித்துராஜ் பொன்ராஜ் அவர்களின் கதைகளின் விரிவான களங்கள், கணங்கள் ஆச்சரியப்படுத்துகின்றன. அதற்கு காரணம் அவரின்தீவிரமான உலக இலக்கிய வாசிப்பும் வெவ்வேறு இடங்களில் ,நாடுகளில் அவர் பயணித்து அந்த விபரங்களை உள்வாங்கி சுலப்மாக அந்தக்கதைகளை மையமாகக் கொண்டிருக்கச் செய்வதாலும் ஆகும்.

இந்த தொகுப்பின் முதல் கதையே கொஞ்சம் அதிர்ச்சி தருகிறது  சுற்றுச்சூழல் என்ற முறையில் இந்த கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.பூஜ்ஜியத்தை கண்டுபிடிப்பவர்களுக்கு காமத்தில் பூஜ்ஜியமாக இருப்பதால் விளைவோ என்னவோ ஒரு பெரும் வன்முறை அவர்களால்எழுதப்படுகிறது .எண்ண முடியாத வெறுமைக்கு எழுத்து வடிவம் கண்டு எல்லா லாபத்தை காணப் போகிறாய் என்ற விவாதங்கள் இருந்தாலும்அவர்கள் சென்றடையும் இடம் அதிர்ச்சி தருகிறது.

 பல கதைகள் இரண்டு மூன்று தளங்களைக் கலந்து கலந்து கதை சொல்லும் இயல்பில் புதிய வடிவங்களாக மாறிவிடுகின்றன .மகள் பிரிவும் லாரிபிரச்சனையும் என்று எடுத்துக் கொள்கிற ஒரு கதையை அப்படிச் சொல்லலாம் .ஒரு கதையில் அதுமட்டுமல்ல எல்லா பொம்பளையும் தான்அடிமைத்தனமும் சொல்றியா இல்ல அலங்காரம் உங்களுக்கு மட்டுமல்ல .. வயிறு பின் பக்கம் தொடையெல்லாம் அலங்காரம் தான்.. அலங்காரம்என்பது பற்றிய ஒரு வளமான விஷயமாக இக்கதையில் இருக்கிறது. விரல்களை வெட்டி அர்ப்பணம் செய்யும்  ஒருவனின்   மனநிலை பாதிப்புஎன்று இதை எடுத்துக் கொள்ளலாம். மனநிலை பாதிப்பான மனிதர்கள் பல கதைகளில் தென்படுகிறார்கள்

  மாணவர் என்ற கதையில் இத்தாலியை கிழவருக்கு பாலியல் ரீதியாக சிறுவனிடத்தில் ஈர்ப்பு ஏற்படுகிறது .ஓடிப்போன பெற்றவர்கள் .அந்தகிழவன் ஒரு சிறுவனை அதற்காக வைத்துப் படுத்துகிறான் ஆனால் அந்த சிறுவனின் நிராகரிப்பு அந்தக் கணவானை சாதாரணமாக குப்புறதள்ளிவிடுகிறது. இந்த தொகுப்பின் தலைப்பு உள்ள கடல் நிச்சயம் திரும்ப வரும் என்ற கதை ஒருவகையான கற்பனையும்  தொன்மமும் கலந்தஉலகமாக மாற்றப்பட்டுள்ளது .கடலுக்கு அடியில் ராஜராஜன் உலகம் இருப்பதாக சொல்லப்படுகிறது .கடல் மாசும் வேறொரு கோணத்தில்அலசப்படுகிறது .இதில் காட்டப்படும் அதிகாரத்தின் பன்முகத்தன்மை அதிர்ச்சியை தருகிறது.  நான்கு ஆண்டுகளாக கடுமையான கட்டாயகருத்தடை அமலில் இருந்தது அப்படியும் ஆலயத்தின் அறிவுறுத்தலை மீறி பெறப்பட்ட குழந்தைகள் பிறந்தவுடன் நகரத்துக்கு வெளியே கடலைநோக்கி நின்றுகொண்டு இருந்த 15 அடி கம்பங்களில் கயிற்றால் ஏற்றி வைக்கப்பட்டு சாகடிக்க பட்டனர் என்ற விவரங்களில் அதிர்ச்சி தருகின்றன.இக்கதையில் வரும் மணிமேகலை தெய்வம் வேறு ஒரு வகை படிமமாக விழுந்து வைக்கிறது .இன்னொரு கதையில் நீலப்படம் நடிக்கும் பெண்அவனின் இருப்பு சார்ந்த நிறைய கேள்விகள் எழுப்பப்படுகின்றன .அதுபோல் நீலப்படம் பார்க்கிற மனிதர்களும்  அவர்களின் விசித்திர உணர்விலும்சில கதைகளில் சொல்லப்படுகின்றன .மூன்று லாரி வீடு என்ற கதையில் வரும்  கிழவர் ஒரு துன்பமாகவே மாற்றப்படுகிறார் .மாந்திரீக தாந்திரீகசெயல்களால் அவர் அலைக்கழிக்கிறார். அதிர்வு ஏற்படுத்துகிறார். அம்மா கள்ள உறவு கொண்டிருக்கிறாள் அதை சின்ன வயதில் பார்த்த பாதிப்புதொடர்ந்து கொண்டே இருக்கிறது. திரைப்படம் பார்த்தாலும் அது ஒரு கதாபாத்திரமாக மாறி ஆசுவாசம் பெறுவதும் அந்தக் கிழவருக்குசாதாரணமாக இருக்கிறது .வாழ்க்கையில் மிகவும் தாழ்மையான நிலைக்கு தள்ளப்பட்ட அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யத் துணிவார்கள்ஏனென்றால் அவர்கள் விழுவதற்கு அதிக தூரம் இல்லை. அப்படி இருந்தாலும் அது அவ்வளவாக படாது அந்த துணிச்சலை ஒருவகையில்மந்திரம் போல் செயல்பட்டு அற்புதங்களை நிகழ்த்தி விடுகிறது என்பதற்கு சாட்சியாக கதாபாத்திரங்கள் இந்த கதைகளில்லாம் தென்படுகின்றன.குண்டு பொம்பளை உடல் குறைய பிரயத்தனப் படுவதும் அவள் அப்படி ஆவதற்கு பின்னணியிலுள்ள விஷயங்களும் ஒரு பன்னாட்டுஉணவுப்பொருள் உடைய பிரயோகத்தில் இருக்கும் கபட தன்மையில் காட்டப்படுகிறது .தனக்கு பிடித்த எழுத்தாளர்களில் விரல் துண்டுகளைகொண்டு வருகின்ற பெண் கூட அப்படித்தான்.

 இந்த சிறுகதைகளில் பல தொன்மக் கதைகள் தொடர்ந்து துரத்திக் கொண்டே இருக்கின்றன ஒ.ரு கதையில் வருகிற பரிஷத் என்ற அரசன்அவனுக்கு ஏழு நாட்களில் பாம்புகளால் மரணம் சம்பவிக்கும் என்ற சாபம் ஏற்படுகிறது. இதுபோல் பல்வேறு சாதனைகளையும் பல்வேறுதொன்மக் கதைகள் மூலம் சொல்லி அதிலிருந்து விழுவதற்கான கதாபாத்திரங்கள் தவிப்பும் சொல்லப்படுகிறது .மிகக் கவனமாக கையாளப்படவேண்டிய பட்டம் பெண்ணும் கால்களுக்கிடையில் மெல்ல தவிக்கும் உள்ளூரில் சுகம் இவ்வளவு அருமை வாய்ந்த மனிதரையும் வழக்கு செய்யக்கூடியது என்று ஒரு கதையில் ஒரு பகுதி இருக்கிறது அந்த ஆசை அலைக்கழிக்கிற் மனிதர்களைப் பற்றிய பல கதைகள் உள்ளன. ஒரு கதையில்விவாகரத்து கோருகிறார் ஒரு பெண். தம்பதி தொடர்ந்து ஒரே அறையில் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள் .ஆனால் அந்தப் பெண் அவனை இருப்பைநிராகரிப்பதற்கான காரணமாய் அவனுக்கு ஒரு நிலத்தைக்  கண்டுபிடித்து அதை நிறைவேற்ற முயற்சிக்க…… இந்த சிக்கலை மிக நுணுக்கமாகசொல்வதில் ஒரு பெண்ணை அன்பாக வைத்து குடும்பம் நடத்துவதில் உள்ள இமாலய சிக்கல்கள் எல்லாம் சாதாரணமாக சொல்லிப் போகிறார்.

.சில  கதைகளில் தன்னிலை விளக்க வடிவம் சிறப்பாக இருக்கிறது. வெவ்வேறு வடிவங்களாக கதைகள் சொல்லப்படும் வேண்டும் என்பதில்சியோல் கதையும் வெவ்வேறு vaடிவங்களை நிரப்பி கொண்டு போவதும் ஒரே கதையை வெவ்வேறு தளங்களை மாறிமாறி உபயோகிப்பதும்கதைகளின் சுவாரசியமான வாசிப்புக்கு பயன்படுகின்றன .அவற்றில் தேக்கமென்ற எந்த தடையும் ஏற்படுவதில்லை .

இந்தக் கதைகளின் ஊடாக பிராமண வாழ்க்கை சார்ந்த வார்த்தைகள் ,பழம் இலக்கிய வாசிப்பில் ஊறிப்போன வார்த்தைகள் போன்ற எல்லாம்சுலபமாக வந்துவிடுகின்றன, இந்த பாதிப்பை பலத் தலைப்புகளில் கூட பார்க்க முடிகிறது .பல இடங்களில் மீன் சார்ந்த வெவ்வேறு வர்ணனையைவாழ்க்கையோடு ஒப்பிடுவதும் அதிகமான மனமும் பாதிக்கப்பட்டவர்களும் புற்றுநோய்க்கு ஆளானவர்களும் வந்தபோதும் கதைகளில் இயல்பாகஇருக்கிறது .விதவிதமான மையங்களை எடுத்துக்கொண்டு அவற்றில் பல்வேறு கலாச்சார சூழலும் பல்வேறு நாடுகளின் அனுபவக்  களங்களில் இக்கதைகளை எழுதுவதற்கு தேவையான வாசிப்பும் பயணமும் ஆழ்ந்த அனுபவங்களும் ஒரு சாதாரண எழுத்தாளனுக்கு என்றைக்கும்வாய்க்காது. (  ரூபாய் 230 பக்கங்கள் 250 திருவண்ணாமலை வம்சி வெளியீடு )

Series Navigationநகுலனிடமிருந்து வந்த கடிதம்தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – -9 குளிர், 10 வேண்டாம் பூசனி
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *