This entry is part 1 of 17 in the series 2 மே 2021
ஸ்ரீரங்கம் சௌரிராஜன்
 
நடைப்பயிற்சியின் போது
அவன் இடது கையில் இருந்த
அரைக்கீரை கட்டைப்
பார்த்தது
அந்தக் கருப்பு வெள்ளை ஆடு
 
அதன் பக்கத்தில்
நின்று கொண்டிருந்தது
கருப்பு வெள்ளைக்குட்டி
 
அம்மா ஆட்டின் கண்களில்
யாசித்தல்
ததும்பி நின்றது
 
ஒரு கணம் யோசித்த அவன்
நொடிப் பொழுதில்
கீரைக்கட்டின் நாரை 
அவிழ்த்து உதற
அவை தின்னத் தொடங்கின
 
அவன்
நாளை
கீரை உண்டால் என்ன ? 
 
                 ++++++++++++
Series Navigationசைனா புதிய தனது விண்வெளி நிலையம் அமைக்க முதற் கட்ட அரங்கை ஏவி உள்ளது