Posted in

நானின்றி வேறில்லை

This entry is part 5 of 11 in the series 20 ஜூன் 2021

 

உமா சுரேஷ்

நீ முன் செல்ல

நொடிப் பொழுதும் பிரியாமல்

உனை

தொடர்ந்து வரும்  நிழல்

நானின்றி வேறில்லை

 

நீ தனிமையில் தவிக்கையில்

தனிமைச் சிறை தகர்க்க

உனை

வருடும் பூங்காற்று

நானின்றி வேறில்லை

 

நீ வெம்மையில் வாடும்போது

தேகம் குளிர்விக்க

உனை

சிலிர்க்க வைக்கும் மழைச்சாரல்

நானின்றி வேறில்லை

 

காண நினைக்கும் பொழுது

கண் முன் விரியும்

தொடு வானமும்

நானின்றி வேறில்லை 

 

கதைக்க நினைக்கும் காலம்

செவி வழி நுழையும்

குயிலோசையும்

நானின்றி வேறில்லை 

 

என் சுவாசம் வேண்டும்போது

உன் நாசி நுழையும்

மலர் வாசம்

நானின்றி வேறில்லை

 

விடியல் தேடும் நேரம்

கண் முன் விரியும்

புதுப் பாதையும்

நானின்றி வேறில்லை

 

கண் அயரும்

அந்திவேளை

கனவிலும் துணை வருவது

நானின்றி வேறில்லை 

 

          -உமா சுரேஷ்

Series Navigationவிரக்தியின் விசும்பல்கள்சிகப்பு புளியங்கா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *