“அவர் தங்கமானவர்”

1
0 minutes, 0 seconds Read
This entry is part 33 of 45 in the series 2 அக்டோபர் 2011

நாய்க் கொரு நண்பகலில்
வாய்த் ததொரு தெங்கம்பழம்
தா னுண்ணத் தெரியாமலும்
தரணிக் குத் தராமலும்
உருட்டியும் புரட்டியும்
ஊர்சுற்றி ஊர்சுற்றி
ஓய்ந்து போனதந்த நாய்

தமக்கும் வாய்த்தது
தங்கமானவர் எனும் பட்டம்
தரங் கெட்ட தலைக்குப் பின்
தெளிவான ஒளிவட்டம்
சோளக் காட்டு பொம்மைக்கு
சேலையில் பரிவட்டம்

சோற்றுக்கு வழி யில்லை
மாற்றுக்குத் துணியில்லை
இற்றுப்போன கூரை வேய
கீற்றுக்கும் காசில்லை

தகரத்தின் தரம்கூட
தமக்கில்லை என உணர்ந்து
தங்கமானவர் எனும் பட்டம்
துறக்கவும் முடியவில்லை

தங்கம் அடகு பிடித்து
தணம் தரும் வங்கியரே
தம்மை அடகுப் பிடித்து
தம் குடும்பப் பசிக்கு
தம்பிடி உணவு கேட்கும்
தங்கமானவருக்கு
தருவீரோ தயைகூர்ந்து?

Series Navigationநினைவு நதிக்கரையில் – 1வார்த்தைக்குள் அகப்படவில்லை..!!
author

சபீர்

Similar Posts

Comments

  1. Avatar
    அபுஇபுறாஹிம் says:

    //தகரத்தின் தரம்கூட
    தமக்கில்லை என உணர்ந்து
    தங்கமானவர் எனும் பட்டம்
    துறக்கவும் முடியவில்லை//

    மிகச் சரியே !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *