கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மது விலக்கு ஏன் ? (கவிதை -51 பாகம் -2)

This entry is part 26 of 37 in the series 23 அக்டோபர் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

குருநாதரின் ஞான ஒளி
பொழியும் போது
கூட இருந்த குறை அறிவாளி
பேசி மகிழ்ந்து
பெருமிதம் அடைவான் !
பிறகு விரைவில் தாறுமாறாய்
ஒழுக்க மற்று
உரக்க அலறுவான் !
பிரச்சனை இதுதான்
தன்மான மற்ற ஒருவனுக்கு
விரைவில்
வருவ திப்படி மதுவால் !
குடிகாரனுக்குப் பரிவு உள்ளம்
இருக்குமே ஆயின்
அதனைக் காட்டுவான்
குடித்த பிறகு !
ஒளிந்துள்ள சினமும்
அகந்தை, ஆணவம் இருக்கு மாயின்
அவையும் வாயில் வெளிவரும் !
மக்களில் பெரும் பாலோர்
அப்படித் திரிவதால்
மது விற்பது விலக்கப் படும்
எல்லாருக்கும் !

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (October 12, 2011)

Series Navigationமென் இலக்குகள்கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் ! (கவிதை – 50 பாகம் -1)
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *