டாக்டர் ஜி.ஜான்சன் நான் மூன்றாம் ஆண்டு மருத்துவம் பயின்றபோது விடுமுறையில் சிங்கப்பூர் சென்றேன்.அங்கு அப்பா பாரதிதாசன் தமிழ்ப் பாடசாலையில் ஆசிரியராகப் பணி புரிந்தார். பிரிந்து வந்த பால்ய நண்பர்களுடன் மீண்டும் ஒன்று கூடி இரண்டு வாரங்கள் மகிழ்ந்திருந்தேன்.தினமும் இரவில் நண்பர்களுடன் சீனர் சாப்பாடும் டைகர் பீர்தான் ( Tiger Beer ) என் நண்பர்களில் மூவரை நான் குறிப்பிட்டே ஆகவேண்டும். அப்போது எங்களுக்கு இருபத்தோரு வயதுதான்.இந்த மூவரும் பிற்காலத்தில் சிங்கப்பூரில் பெரும் சாதனைப் புரிந்துவிட்டனர். நா. […]
அன்பார்ந்த பாரதி அன்பர்களுக்கு, வணக்கம். நமது பாரதி இணையதளத்தில் ‘பாரதியைப் பயில…’ http://www.mahakavibharathiyar.info/puthiyavai.htm வழக்கம்போல நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இத்தகவலை பகிர்ந்துகொள்ளவும். நன்றி. அன்புடன், வீ.சு.இராமலிங்கம் தஞ்சாவூர்
இரா. கௌரிசங்கர் “இந்த ரோட்டிலயா போகப் போற” என்றேன் அஜய்யைப் பார்த்து. நான் இராகவன் – அஜய் என்னுடன் ஒன்றாக ‘ராம்ஸ்’ நிறுவனத்தில் மேனேஜராக வேலைப் பார்க்கிறான். நான் பைனான்ஸ் மேனேஜர். அஜய் டெக்னிகல். இருவரும் சம வயதுகாரர்கள். நண்பர்கள். நாங்கள் இருவரும் ஒரே பகுதியிலிருந்து அலுவலகத்திற்கு வந்தாலும் அவரவர் காரில் தான் தினமும் வருவோம். அன்று என்னுடைய காரை சர்விஸ் விட்டிருந்ததால், அஜய் எனக்கு லிப்ட் கொடுத்திருந்தான். நாங்கள் செல்லும் பாதையில் ஒரு குறுக்கு வழி […]
கி.சுப்பிரமணியன் (ஐயா, நான் தற்போது ’வள்ளுவம் அல்லது வாழ்க்கையே வழிபாடு’ என்ற நூலினை எழுதி வெளியிட்டு உள்ளேன், அந்நூலுக்கு கோவை ஐகேஎஸ் என்று அழைக்கப்படும் பேராசிரியர் முனைவர் கி.சுப்பிரமணியன் அவர்கள் எழுதி உள்ள அணிந்துரையை இத்துட்ன் இணைத்துள்ளேன். அதனை தங்களது இதழில் வெளியிட்டு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். அவர் வள்ளலாரைப்பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தம்முடைய ஆய்வை ’நீர்மேல் மலர்ந்த நெருப்பு’ என்ற நூலாக வெளியிட்டு உள்ள அவர் இராமலிங்கரையும் இராமகிருஷ்ணரையும் ஒப்பிட்டு மேலாய்வு செய்து […]
தாரமங்கலம் வளவன் எப்படியாவது இந்த கபடி விளையாட்டு வீரர்களை செல்வத்துடன் மோத வைத்து, செல்வத்தை அடக்க வேண்டும் என்று நினைத்த பக்கிரி, வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தான். கிராமத்து மக்களோடு ஒன்றாக தரையில் உட்கார்ந்து கொண்டிருந்த பக்கிரி, செல்வதை சீண்டி விட வேண்டும் விட வேண்டும் என்ற எண்ணத்துடன் தரையிலிருந்து ஒரு சிறு கல்லை எடுத்து செல்வத்தின் மேல் எறிந்தான். உடனே “ யாருடா அது… கல் எடுத்து அடிச்சது..” என்று செல்வம் ஒவ்வொருவராக […]
ஜயலக்ஷ்மி ”திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்” என்ற இனிமையான பாடலை நாம் நிறையவே கேட்டிருக்கிறோம். ஆம் திருப்புகழைப் பாடினால் வாய் மணக்கும் கேட்டாலோ மனத்தை உருக்கும். காரணம் அவற் றின் சந்தம். பாடுவதற்குக் கொஞ்சம் கடினமாக இருந்தாலும் கூட அவற்றின் தாளமும் ஓசையும் மிகவும் இனிமை யானவை. முருகனின் புகழ் பாடும் இப் பாடல்களை இயற்றியவர் அருணகிரிநாதர். இன்றைக்குச் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அருணகிரி நாதர் ஒரு நிலையில் வாழ்க்கையில் வெறுப்புற்றுத் […]
டாக்டர் ஜி.ஜான்சன் நான் தொடர் வண்டியில் ஏறிய போது து இரவு பத்து மணி. அது மாயவரம் சந்திப்பு. முன்பதிவு செய்யாததால் விரைவாக நுழைந்து சன்னலோரம் காலியாக இருந்த இடத்தைப் பிடித்துக்கொண்டேன். அந்த இடம் கிடைத்தது அதிசயம்தான்.நல்ல வேளையாக அதில் அமர்ந்து வந்தவர் மாயவரத்தில் இறங்கினார். அது ரேணிகுண்டா துரித பிரயாணி தொடர் வண்டி ( fast passenger ). . நான் வேலூர் சென்று கொண்டிருந்தேன். மருத்துவக் கல்லூரி விடுமுறை முடிந்து திரும்பி […]
டாக்டர் ஜி. ஜான்சன் கொழுப்பு என்று தமிழில் சொல்வது பல பொருள்களைக் குறிக்கிறது. உணவில் கொழுப்பு நிறைந்தது என்று சிலவற்றைக் கூறுகிறோம். அதிக கொழுப்பு உட்கொண்டால் உடல் பருமன் கூடிவிடும் என்கிறோம். ஒருவன் வீண் வம்புக்குப் போனாலும் அவனுக்கு கொழுப்பு அதிகம் என்கிறோம். இதை ஆங்கிலத்தில் FATS என்கிறோம். ஆனால் மருத்துவத்தில் பொதுவாக கொழுப்புச் சத்து அதிகம் என்று கூறினாலும், கொழுப்பை பல பிரிவுகளாகப் பிரிக்கலாம். இவற்றுக்கு தமிழில் இன்னும் பொருத்தமான கலைச் சொற்கள் […]
-நீச்சல்காரன் “தம்பி கொஞ்சம் வாங்களேன்” என்று சுருள் பாக்கு போட்டுக்கொண்டே மாப்பிள்ளையோட அப்பா நம்ம கைய பிடிப்பாரு. நாமகூட மாப்பிள்ளை தோழனா கூப்பிடுறாரோனு கொஞ்சம் சட்டைக் காலரை திருத்திக் கொண்டு முகத்தைத் துடைத்துக் கொண்டு “அங்கிள், கேமிராக்காரர் வந்துட்டாரா?” என்போம். “அதோ சாப்பிட்டுக் கொண்டிருக்காரு குமாரு! ” என்று வழிந்து கொண்டிருந்த வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டே “சாப்பிட்டையா!” […]
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் 1977-ல் பிறந்த இசை (இயற்பெயர்: ஆ.சத்தியமூர்த்தி) கோவை மாவட்டத்துக்காரர். இவர் ஒரு மருந்தாளுநர். ‘உறுமீன்களற்ற நதி’ இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு. இதில் 63 கவிதைகள் உள்ளன. எளிமை, நல்ல வாசிப்புத்தன்மை, கவனமீர்க்கும் தலைப்புகள், புதிய சிந்தனைகள் ஆகியவை இவர் கவிதை இயல்புகள். சக மனித விமர்சனம், யதார்த்தம், கனவுத்தன்மை, சொல் நேர்த்தி ஆகியவையும் ரசிக்கத் தக்கன. குழந்தைகள் பற்றிய பதிவு பெரும்பாலும் சோடை போவதில்லை. ‘சௌமி குட்டி சௌமியா […]