ரிஷ்வன் ஏதோ பொத்தென்று என் மேல் விழ போர்வையை விலக்கி என்னவென்று பார்த்தேன்… அணில் ஒன்று ‘கீச் கீச்’ என்ற சத்தத்தோடு ஜன்னல் திரையை விலக்கி வந்த வழியே ஓடியது என் கண்ணில் பட்டது… என் போர்வையிலோ பாதி தின்ற கொய்யாப் பழம் விழுந்து கிடந்தது… என்ன நடந்தது என்று என்னால் ஓரளவு ஊகிக்க முடிந்தது… ஜன்னலோடு ஒட்டிய வேப்ப மரத்திலிருந்து அணில் உள்ளே நுழைய அந்த நேரம் பார்த்து காற்று பலமாய் அடித்திருக்க வேண்டும்… காற்றிலே […]
பூங்காவனம் ஒன்பதாவது இதழ் மீது ஒரு பார்வை எம்.எம். மன்ஸுர் – மாவனல்லை பூங்காவனத்தின் 09ஆவது நுழைவாயிலால் உள்ளே நுழைந்தால் உங்களுடன் ஒரு நிமிடம் எனும் பக்கத்தில் மனித இனத்தின் அறிவு முன்னேற்றத்தின் பிரதிபலனாக விளங்கும் கணினி, கைத்தொலைபேசி, தொலைக்காட்சி என்பன மனிதனுக்கு அன்றாடத் தேவைகளாகிவிட்ட அத்தியாவசியப் பொருட்களாகிவிட்டாலும், அதன் அடுத்த பக்கம் என்றொரு தீமை பயக்கக்கூடிய ஒரு பக்கமும் உள்ளது என்பதை தெட்டத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். அதாவது பேஸ்புக்கிலும், மெகா சீரியல்களிலும், தெலைபேசி நீண்டநேர உரையாடல்களிலும் […]
விஜே.பிரேமலதா கறுத்துப் போன தேகத்தோடு, வியர்வை வழிய நெற்றியிலிருந்த நாமம் வழிந்து மூக்கைச் சிவப்பாக்கியிருந்தது. அதை அறியாமல், ஒருவித தளர்வோடு முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார் பெரியாழ்வார். கூடத்துத் திண்ணையில் தோழியரோடு மாலை கட்டியபடி அனுமன் பற்றிய கதையைச் சொல்லிக்கொண்டிருந்த கோதை தலைநிமிர்ந்தாள். ஆண்டாளின் கதை நின்றதை அறிந்த தோழியர் பெரியாழ்வாரின் முகத்தைப் பார்த்தளவில் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு வாய்ப் பொத்தி அவரவர் வீட்டிற்குப் பறந்து போயினர். தந்தையின் வருகை அகத்தில் மகிழ்ச்சியைத்தர, துள்ளிக்குதித்தபடி அன்றலர்ந்த […]
நெய்தல் வெளி – தமிழ்நாடு கடற்கரை எழுத்தாளர்கள் வாசகர் சந்திப்பு Nenlthal 3 (1)
தொலை பேசி அடர்த்தி வளர்ச்சி: இந்தியாவின் தொலை தொடர்பு வளர்ச்சி வேகவேகமான வளர்ச்சி. அதை ஒரு எக்ஸ்பொனென்ஷியல் வளர்ச்சி என்று சொல்லலாம். எளிதான முறையில், எக்ஸ்பொனென்ஷியல் வளர்ச்சி என்பதை x, x2, x3 ……..என்ற வீதத்தில் வளர்வது என்று வரையறுக்கலாம். எக்ஸ்பொனென்ஷியல் வளர்ச்சியைக் குத்து வேக வளர்ச்சி என்று தமிழாக்கம் செய்யலாமா? கீழிருக்கும் வரைபடம்1 இந்தியாவின் தொலை தொடர்பு வளர்ச்சியைக் காட்டும். தொலை தொடர்பு வளர்ச்சிக்கான அலகாக தொலைதொடர்பு அடர்த்தி என்ற கருத்தாக்கம் பயன்படுத்தப்படுகிறது. தொலை தொடர்பு அடர்த்தி என்பது 100 […]
முகில் தினகரன் நகரின் அந்த பிரதான சாலை ஜன சமுத்திரமாய்க் காட்சியளித்தது. எங்கும் பெண்கள் கூட்டம். பேரணி துவங்கியதும் அதைத் தலைமையேற்று நடத்தும் மாதர் சங்கத் தலைவி சுஜாதா தேவநாதன் முன் நடக்க ஆயிரக்கணக்கிலான பெண்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். ‘பெண் குல எதிரி ‘நிலாஸ்ரீ’….ஒழிக” ‘கேள்…கேள்…மன்னிப்புக் கேள்” ‘தமிழ்ப் பெண்களைக் கேவலமாய்ப் பேசிய தரங்கெட்ட நடிகையே…உடனே ஓடு..உன் மாநிலத்திற்கு” ‘துரத்துவோம்…துரத்துவோம்…தமிழச்சியை இழிவ படுத்திய வட இந்திக்காரியைத் துரத்துவோம்…துரத்துவோம்” ஆவேசப் பெண்களின் ஆக்ரோஷ கோஷம் ஆகாயம் வரை […]
மதி பேருந்திற்காய்க் காத்திருக்கிறேன். சட்டை போடாத ஒரு சிறுவன் கையைச் சுரண்டி காசு கேட்கிறான். வழமை போல் மறுக்கிறேன் சில்லறை இல்லை என்று பொய் சொல்கிறேன். கூச்சம் கழிவிரக்கம் வறுமை வருத்தம் ஏமாற்றம் எள்ளல் கோபம் யாசகம் இவை ஏதும் அற்ற ஒரு வெற்றுப் பார்வையை என் தட்டில் இட்டு நகர்கிறான் அவன். பயம் வருகிறது. gomskgs@gmail.com
நாடறிந்த தமிழ் எழுத்தாளரும் புத்திலக்கிய விமர்சகருமான முனைவர் ரெ.கார்த்திகேசுவின் இரு புதிய நூல்கள் தலைநகரிலும் கெடா மாநிலத்தில் லுனாசிலும் வெளியீடு காணுகின்றன. தமிழ்ப் புத்திலக்கியத்தை உலக அளவில் கவனித்து விமர்சித்து வரும் அவருடைய சமுதாய, இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் அடங்கிய நூல் “விமர்சன முகம் 2”. அவருடைய அண்மைய சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு நூல் “நீர் மேல் எழுத்து”. இதில் அவர் மலேசிய இதழ்களிலும், இணைய இதழ்களிலும் எழுதிய புதிய கதைகளும் ஒரு குறுநாவலும் உள்ளன. […]
ஆழி பப்ளிஷர்ஸ் நூல் வெளியீட்டு விழா கீரனூர் ஜாகிர்ராஜா தொகுத்த இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா இடம் – டிஸ்கவரி புக் பேலஸ் எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம், முனுசாமி சாலை, மேற்கு கே.கே நகர், சென்னை – 600078. தமிழ்நாடு. இந்தியா (பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்) நேரம் மாலை 5.00 மணி, ஆகஸ்ட் 19, 2012, ஞாயிற்றுக்கிழமை அழியாத கோலங்கள் தமிழின் தலைசிறந்த காதல் சிறுகதைகள் தொகுப்பாளர் – கீரனூர் ஜாகிர்ராஜா வெளியிடுபவர் […]
வீரபாண்டி நீங்கள் மூன்றாம் உலகப் போர் என்று சமூக அக்கறையுடன் எழுதுவதால் இந்தக் கடிதம். உலக இலக்கியம் உங்களுக்குத் தெரியாததல்ல… மக்களை சுருட்டிப் போடும் திரைச்சுருளை தீக்குச்சிக்கு தின்னக் கொடுப்போம் என்ற நீங்கள், இன்று தின்னும் ஒவ்வொரு பண்டத்திலும் அந்த திரைச்சுருள் அள்ளித் தந்தது இருக்கிறது. புலவன் என்றால் பஞ்சபரதேசி, கடனாளி, கைகட்டி யாசகம் பெறுபவன் என்ற குறியீட்டை மாற்றினீர்கள், அதற்கு நிச்சயம் யாவரும் வந்தனம் சொல்ல வேண்டும். ஆனால், புலவனுக்கும், கவிஞனுக்கும் வேறுபாடு […]