நிறைய பள்ளிக்கூடங்களில் மிகக்குறைவான கவனிப்பையும் பராமரிப்பையும் பெறுவது கழிப்பறையாகவே இருந்துவருவது கண்கூடு. அல்லது, ஆசிரிய ஆசிரியைகள் பயன்படுத்தும் கழிப்பறை மட்டும் ஓரளவு சுத்தமாக இருக்கும். வகுப்புநேரத்தின்போது சிறுநீர் கழிக்கவேண்டும் என்றோ, மலம் கழிக்கவேண்டும் என்றோ குழந்தைகள் கேட்பதற்கே இகவும் பயந்துகொண்டிருப்பதும், கேட்டால் ஆயாவிடம் அல்லது […]
இந்த நாடகத்தை தி.நகரிலுள்ள வாணிமகால் அரங்கில் நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. (வீணைக் கலைஞர், அமரர் எஸ்.பாலச்சந்தரின் மகன் எஸ்.பி.எஸ்.ராமன் இயக்கியுள்ள இந்த நாடகத்தில் பாரதியாக ’இசைக்கவி’ ரமணன் நடிக்கிறார். நாடக வசனங்கள் எழுதியவரும் அவரே.) நாடகத்தில் எனக்குப் பிடித்திருந்த அம்சங்கள். 1.பாரதியாரின் பல கவிதைகளை நாடகம் முன்னிலைப்படுத்தியிருந்தது. 2.பாரதியார் புதுச்சேரிக்குப் போனதால் அவர் கோழை என்று சிலரால் முன்னிறுத்தப் படும் வாதம் பொய் என்று காட்டியது. 3.பாரதியாரின் […]
_ லதா ராமகிருஷ்ணன் நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்? திரு.மாரிதாஸின் நூல் – கிழக்கு பதிப்பக வெளியீடு (பக்கங்கள் : 256 / விலை ரூ.225 – தொடர்புக்கு: 044 4200 9603 / maridasm@gmail.com நூல் குறித்த ஒரு சிறு அறிமுகம் கேப்டன், உலகநாயகன், தளபதி, கவிப்பேரரசு போன்ற அடைமொழிகளை வெகு இயல்பாகப் பயன்படுத்தும் அறிவுசாலிகளுக்குக் கூட இந்தியாவின் தற்போதைய பிரதமர் திரு. நரேந்திர மோதி வெறும் மோதி அல்லது வக்கிர வசைகளுக்குரிய மோதியாகவே […]
லதா ராமகிருஷ்ணன் (* முன்குறிப்பு: நியாயமான, தகுதிவாய்ந்த விமர்சகர்கள் என்றுமே மதிக்கப்பட வேண்டியவர்கள்; மதிப்புக்குரிய வர்கள். இலக்கியம் சார்ந்த, மொழிபெயர்ப்பு சார்ந்த உண்மையான அக்கறையோடு அவர்கள் விமர்சனத்தை கண்ணியமாக முன்வைக்கும் விதமே வேறு. இந்தக் கட்டுரை அவர்களுக்கானதல்ல) மொழிபெயர்ப்பாளர்களின் 300 பக்கங்களில் 3 தவறுகளை, அதுவும் தப்புத்தப்பாய், சுட்டிக்காட்டுவதன் மூலமே மேதகு மொழிபெயர்ப்பு விமர்சகர்களில் முக்கியமான ஒருவராக வலம்வந்துகொண்டிருக்கும் பெருந்தகை ஒருவர் விரைவிலேயே மொழிபெயர்ப்பு தொடர்பான பல Ten Commandments – பிறப்பிக்கும் வாய்ப்புகள் தெளிவாகவே தெரிகின்றன. […]
பள்ளிப்பருவத்தில் பாடங்களை உரக்க வாசித்து உள்வாங்கிக் கொள்ளும் வழக்கம் நம்மில் பலருக்கு இருந்ததுண்டு. இலக்கியக் கூட்டங்களில் உரையாற்றுபவர் பலரின் சிந்தனையோட்டங்களை சரிவர பின் தொடரமுடியாமல் போவதுண்டு. எழுத்தாளர் விமலாதித்த மாமல்லனின் சமீபத்திய ’புனைவு என்னும் புதிர் என்ற தலைப்பிட்ட நூலில் இடம்பெறும் கதைகளையும் அவை எப்படி இலக்கியப் படைப்புகளாகின்றன என்று எழுத்தாளர் அடர்செறிவாக முன்வைக்கும் கருத்துகளையும் என் தோழி பத்மினி கோபாலனுக்காக படித்துக்காட்டும்போது என்னாலும் சிந்தனையைச் சிதறவிடாமல் நூலில் ஒன்றிவிட முடிந்தது. [புதுமைப்பித்தனின் உபதேசம், கி.ராஜநாராயணனின் ’மின்னல்’, […]
லதா ராமகிருஷ்ணன் தன்னளவில் சிறந்த வாசகராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் இருக்கும் நம் நட்புவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் சுப்பிரமணியன் ஆங்கிலத்திலிருந்து தமிழிலும் தமிழிலிருந்து ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்புகள் செய்துவருகிறார். அவருடைய ஃபேஸ்புக் பக்கத்திலும் அவ்வப்போது தன் மொழிபெயர்ப்புகளைப் பதிவேற்றிவருகிறார். அவருடைய சமீபத்திய பதிவு ஒன்று கீழே இடம் பெற்றுள்ளது. பாரதியாரின் கவிதை ஆங்கிலத்தில்: (மொழியாக்கம்: ராஜேஷ் சுப்ரமணியன் ) A tiny ball of ember A tiny ball of ember that I […]
லதாராமகிருஷ்ணன். கொங்குதேர் வாழ்க்கை என்ற தமிழ்க் கவிதைத் திரட்டின் முதல் பிரசுரத்தில் தமிழின் குறிப்பிடத்தக்க கவிஞர்கள் சிலர் விடுபட்டிருந்தது குறித்து அந்த சமயத்தில் சர்ச்சை எழுந்தது நினைவிருக்கிறது. ஒரு கவிதைத்திரட்டில் சில கவிஞர்கள் விடுபடுவது வழக்கமாக நடப்பது. எந்தக் கவிஞரும் கவிதைத்திரட்டில் இடம்பெறவேண்டும் என்பதற்காக கவிதை எழுத ஆரம்பிப்பதில்லை; எழுதுவதில்லை. ஆனால், அப்படி விடுபட்டதற்கான காரணமாய் ஒரு கவிஞர் எழுதுவது கவிதையே யில்லை என்பதாய் தொகுப்பாசிரியர் சில கருத்துகளைப் பொதுவில் வைக்கும்போது அந்தக் கருத்திற்கான […]
லதா ராமகிருஷ்ணன். தனது தவளை வீடு தொகுப்பின் மூலம் தமிழின் குறிப்பிடத்தக்க கவிஞராக கவனம் பெற்றுள்ள திரு. பழனிவேளின் கஞ்சா என்ற தலைப்பிட்ட மற்றொரு தொகுப்பு ஆலன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. (64 பக்கங்கள், 50 கவிதைகள். விலை ரூ.100 தொடர்புக்கு – palanivelrayan@gmail.com. தொலைபேசி 8973228830.) புத்தகத்தை வெளியிட்டுள்ள திரு.ராஜகோபால் தமிழ்ச் சிறுபத்திரிகைவெளியில் நன்கு பரிச்சயமானவர். இந்தக் கவிதைத்தொகுப்பை நேர்த்தியாக வெளியிட்டுள்ளார். கஞ்சா கவிதைத்தொகுப்பு குறித்து தனது அறிமுக உரையில் கீழ்க்கண்டவாறு […]
(எதிர் வெளியீடு. முதல் பதிப்பு டிசம்பர் 2016. பக்கங்கள் 318. விலை – ரூ290. தொடர்புக்கு: 04259 226012, 99425 11302. மின்னஞ்சல்: ethirveliyedu@gmail.com இலக்கியத்திற்கான நோபெல் விருது, புக்கெர் விருது போன்ற விருதுகள் அறிவிக்கப்பட்டதும் விருது பெற்ற படைப்பாளியின் ஒருசில எழுத்தாக்கங்கள் மொழிபெயர்க்கப்படுவதும், இலக்கிய இதழ்களில் வெளியாவதும் வழக்கமாக இருந்துவருகிறது.. அப்படியில்லாமல் தொடர்ந்த ரீதியில் உலக இலக்கியங்கள், இலக்கியப் போக்குகளைப் பரிச்சயப்படுத்திக்கொள்பவர்களை, தான் பெற்ற அந்த அறிவை, அனுபவத்தை தமிழிலக்கிய வாசகர்களும் அறிந்துகொள்ள […]
லதா ராமகிருஷ்ணன் வைதீஸ்வரன் கவிதைகள் 1961 – 2017… அநாமிகா ஆல்ஃபபெட்ஸ் வெளியீடு முதல் பதிப்பு : செப்டெம்பர் 2017 விலை : ரூ 450 சமகால தமிழ்க் கவிதை வெளியில் கவிஞர் வைதீஸ்வரனுடைய பெயர் புறமொதுக்க முடியாத ஒன்று அவருடைய கவிதைகள், கதைகள், கட்டுரைகள் தமிழ் இலக்கிய நூல்களில், குறிப்பாக இலக்கியத்திற்கான மாற்றிதழ்களில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தமிழின் குறிப்பிடத்தக்க பதிப்பகங்கள் மூலம் அவருடைய எழுத்தாக்கங்கள் நூல்வடிவம் பெற்றுள்ளன; வாசகர்களிடையே நல்ல […]