லதா ராமகிருஷ்ணன் (புத்தனின் விரல் பற்றிய நகரம், கவிஞர் அய்யப்ப மாதவனின் தேர்ந்தெடுத்த கவிதைகள் அடங்கிய தொகுப்பு. தோழமை பதிப்பக வெளியீடு நூல் வெளியீட்டுவிழா குறித்த சில மனப்பதிவுகள்) பலவகையான ’ஆட்கழிப்பு’ உத்திகளைப் பயன்படுத்தி இந்தியாவின் பிற பகுதிகளிலும், கடல் கடந்த நாடுகளிலும் நவீன தமிழின் தனிப்பெருங் கவியாய்த் தங்களை அடையாளங்காட்டிக்கொள்ள அலைக்கழிந்துகொண்டிருக்கும் சிலரைத் தாண்டிய அளவில், தற்காலத் தமிழில் குறிப்பிடத்தக்க கவிஞர்கள் கணிசமாகவே உண்டு. சமீபத்தில் தோழமைப் பதிப்பக வெளியிட்டுள்ள கவிஞர் அய்யப்ப மாதவனின் தேர்ந்தெடுத்த […]
_ லதா ராமகிருஷ்ணன் 38வது சென்னைப் புத்தகக் கண்காட்சி ஆரம்பமாகிவிட்டது! கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக மாற்றிதழ், நவீன இலக்கியம் மீது கொண்ட ஆர்வம் காரணமாக முதலில் பன்முகம் என்ற காலாண்டிதழையும் இப்போது புதுப்புனல் என்ற மாத இதழையும் எத்தனையோ இடையூறுகள், பொருளாதார நெருக்கடிக்கு இடையில் தொடர்ந்து நடத்திக்கொண்டுவரும் புதுப்புனல் பதிப்பகத்தார் தோழர் ரவிச்சந்திரன் – சாந்தி தம்பதியர் 152 _ 153 என்ற இரண்டு அரங்குகளில் தங்களுடைய வெளியீடுகளையும், குறிப்பிடத்தக்க சமூக, இலக்கிய நூல்களையும் […]
ந.பெரியசாமி(1971) பெரம்பலூர் மாவட்டம் பசும்பலூர் கிராமத்தில் பிறந்தவர். தற்சமயம் ஓசூரில் தனியார் நிறுவனமொன்றில் பணி. 2003களிலிருந்து எழுதிவருகிற இவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘நதிச்சிறை’ 2004இல் வெலியானது. ஓசூர் தமுஎகச கிளைப் பணிகளில் பங்கேற்பது. ஓசூர் குறிஞ்சி ஃபிலிம் சொசைட்டி நண்பர்களுடன் இணைந்து மாற்று சினிமா திரிஅயிடுவது. புதுவிசை இதழின் நிர்வாகப் ஒறுப்பு என தனது தொடர்ந்த செயல்பாடுகளால் பரவலாக அறியப்பட்டவர். _ ‘மதுவாகினி’ தொகுப்பிலிருந்து. “ஆசைகொண்டு வாங்கிய மூன்று சக்கர […]
மழை மியூசியம் பிரதாப ருத்ரனி’ன் கவிதைத் தொகுப்பு [வெளியீடு: புது எழுத்து, ஜூன் 2014, பக்கங்கள் 48. விலை ரூ: 70] நூல் குறித்து சில எண்ணப்பதிவுகள்_ லதா ராமகிருஷ்ணன் [பிரதாப ருத்ரன் ( 1979 _ ) ”இது இவரது முதல் கவிதைத் தொகுதி. ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பிரதாப ருத்ரனின் இயற்பெயர் முனிராசு. தர்மபுரியில் ஒரு கிராமத்தில் வசிக்கிறார். சூழலியலில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். இவர் கவிதைகளை எழுதி வெளியிட்ட காலம் பொதுவான […]
மலாய்-தமிழ் கவிஞர்கள் சந்திப்பு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டுவிழா அரங்கில் ஜூன் 10, 11 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற நிகழ்வு -லதா ராமகிருஷ்ணன் சொல்லவேண்டிய சில….. வாழ்க்கைக்குக் கவிதை தேவையா? வாழ்க்கைக்குக் கவிதையால் என்ன பயன்? வாழ்க்கைக்கும் கவிதைக்கும் என்ன தொடர்பு? கவிதையைப் படிப்ப தால் என்ன கிடைக்கிறது? கவிதை எழுதுவதால் என்ன கிடைக்கிறது _ இவற்றிற்கும் இவையொத்த பிறவேறு கேள்விகளுக்கும் நம்மிடம் உள்ள ஒரே பதில் […]
வாட்டர்கேட் ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் ஊழல், 2ஜி ஊழல் – இப்படி நம்மைச் சுற்றி எத்தனையோ ஊழல்கள். அவற்றில் குப்பை ஊழலும் ஒன்று. ஆம், நம் நாட்டின் நகரங்களில் சேரும் குப்பைகளை அகற்று வதில் நடைபெற்றுவரும் ஊழல் பற்றி 16.03.2014 அன்று நடிகர் அமீர்கானின் தயாரிப்பு-இயக்கத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுவரும் சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் தமிழ் ஒளிபரப்பில் அறியக்கிடைத்தபோது அதிர்ச்சியாக இருந்தது. நம் நாட்டின் ஒவ்வொரு நகர்ப்புறத்திலும் தினசரி வெளியேற்றப்படும் திட, திரவ, மக்கும் மக்காக் […]
[முன்னாள் இயக்குநர், ஆசிய வளர்ச்சி வங்கி கவிதா வெளியீடு. முதல் பதிப்பு : அக்டோபர் 2013. பக்கங்கள் 192. விலை: 125 ஒரு சிறு அறிமுகம் ஒருவர் தன்னுடைய வாழ்க்கை சார்ந்து முக்கிய நிகழ்வுகளை, அனுபவங்களைக் கட்டுரைக ளாக்கும்போது பிரக்ஞாபூர்வமாகவோ அல்லது தன்னையுமறியாமலோ தன்னைப் பற்றிய ஒருவித கதாநாயகத்தனமான, மிகைப்படுத்தப்பட்ட, ‘Tragic Hero’ பாவந் தாங்கிய பிம்பத் தைத் துருத்திக்கொண்டு நிற்கச் செய்வது பெரும்பாலான நேரங்களில் நேர்ந்து விடுகிறது. இந்த ‘மிகைப்படுத்தல்’ பேசப்படும் நிகழ்வு […]
நியூ செஞ்சுரி பதிப்பக வெளியீடு _ஒரு சிறு அறிமுகம். ஒரு பத்திரிகையாளரின் பணி சவால்களும் சிக்கல்களும் நிறைந்தது. இதன் காரணமாக இதழியலாளர்கள் படைப்பாக்கத்திறன் பாதிக்கப்படுவதுண்டு. வெறும் வாழ்க்கைத் தொழிலாக மட்டுமே பாவித்து இதழியலாளர்களாக இருப்பவர்களும் உண்டு. மிகுந்த ஆர்வமும் இலட்சிய வேட்கையுமாக பத்திரிகைத் துறையை விரும்பித் தேர்ந்தெடுத்துக்கொண்டவர்களும் உண்டு ஜி.மீனாட்சி இரண்டாம்வகை இதழியலாளர். பல வருடங்களாக தினமணி நாளிதழில் பணியாற்றிய பின் தற்சமயம் புதிய தலைமுறை இதழில் என்றுமான உத்வேகத்துடன் இயங்கிவரும் ஜி.மீனாட்சியின் இரண்டு சிறுகதைத் […]
எழுத்தறிவித்தல் நாடு முழுவதும் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் 7 லட்சத்துக் கும் அதிகமான ஆசிரியப் பணியிடங்கள் காலியாக இருக்கிறது என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டதாக 24.11.2012 தினமணி இதழில் செய்தி வெளியாகியிருந்தது. நன்கொடை பெற்றது, போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் விளக்கம் கேட்டு 31 பள்ளிகளுக்கு மத்திய மேல்நிலைக் கல்வி வாரியம் [ஸிபிஎஸ்ஸி] இந்த ஆண்டில் 31 பள்ளிகளுக்கு நோட்டீச் அனுப்பியுள்ளதாக மனிதவள மேம்பாட்டுத் துறை இணைய மைச்சர் சசி […]
கடந்த 55 ஆண்டுகளாக கவிதை எழுதிவருகிறவர் கவிஞர் நீலமணி. தமிழ் சிறுபத்திரிகைகளுக்கு நன்கு அறிமுகமானவர். சமூகவுணர்வு மிக்க அதேசமயம் கவித்துவம் குறையாத கவிதைகளை கணிசமான எண்ணிக்கையில் எழுதியிருப் பவர். அவருடைய கவிதைகளில் நிறைய நீள்கவிதைகளும் உண்டு. தமிழ் வளர்ச்சிக் கழகம் விருது, பாவேந்தர் நூற்றாண்டு விழாவில் வழங்கப்பட்ட பாவேந்தர் விருது ஆகிய விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருக்கிறார். இவருடைய வலைப்பூ தமிழ்க்கடலில் கவி அலைகள். www.kavineelamani.blogspot.com ஆங்கிலமொழியிலும் தேர்ச்சிபெற்றவரான அவர் நேரடியாக ஆங்கிலத்திலேயே எழுதிய கவிதைகள் அடங்கிய […]