தில்லியில் ஓடும் பேருந்தில் நடந்த பாலியல் வன்முறை இந்தியாவை மட்டு மல்ல, உலகத்தையே உலுக்கியது எனலாம். அந்த ஃபிஸியோதெரபி மாணவி யின் அக புற வலியை எண்ணியெண்ணி அலைக்கழிந்தது மனம். அவளைக் காப்பாற்றவியலாத கையறுநிலையில் அவளுடைய தோழனின் மனம் எப்படி யெல்லாம் தவித்திருக்கும். இப்போது, ஐந்து வயதுச் சிறுமி தில்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறாள். இத்தகைய சமூகச் சீர்கேடுகளை எதிர்த்து பொதுமக்கள் அணிதிரண்டு போராட முன்வருவது நல்ல அறிகுறி. ஆனால், வட […]
வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ் பக்கங்கள் 150, விலை : ரூ60 எந்தக் காலத்திலும், எந்த மொழியிலும் இயற்கையின் வண்ணங்கள் வடிவங்கள், அர்த்தப்பரிமாணங்களால் ஆட்கொள்ளப்படாத, இயற்கை சார்ந்த உவமான உவமேயங்கள், உருவகங்கள், குறியீடுகளைக் கையாளாத கவிஞர்களே இல்லையெனலாம். இயற்கையை அதன் அழகுக்காக ஆராதிப்பவர்கள் உண்டு. இயற்கைக் காட்சிகள், நிகழ்வுகள், சுழற்சிகளிலிருந்து வாழ்க்கைத் தத்துவங்களை உள்வாங்கிக்கொண்டவர்கள் உண்டு. வாழ்வில் வரவாகும் காயங்களுக்கெல்லாம் வலிநிவாரணியாக இயற்கையைத் தஞ்சமடையும் நெஞ்சங்களும் உண்டு. சில கருப்பொருள்களைக் கையாண்டால் உடனடி தனிக்கவனம் கிடைக்கும். […]
குழந்தைகளின் கல்விபெறும் உரிமை மதிக்கப்படுகிறதா? மீறப்படுகிறதா? ASER [Annual Status Of Education Report] 2012] வருடாந்தர கல்விநிலை ஆய்வறிக்கை – தமிழ்நாடு நிலவரம் – சென்னை, மியூஸிக் அகாதெமியில் 8.02.2013 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பெறப்பட்ட தகவல்கள் _லதா ராமகிருஷ்ணன் [1] ஆரம்பக் கல்வி என்பது ஒருவருடைய வாழ்க்கையில் நிலைத்த தாக்கம் ஏற்படுத்தக்கூடியது. கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி எட்டாம் வகுப்பு வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைக்கச்செய்ய வேண்டி […]
குழந்தைகளின் கல்விபெறும் உரிமை மதிக்கப்படுகிறதா? மீறப்படுகிறதா? ASER [Annual Status Of Education Report] 2012] வருடாந்தர கல்விநிலை ஆய்வறிக்கை – தமிழ்நாடு நிலவரம் – சென்னை, மியூஸிக் அகாதெமியில் 8.02.2013 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பெறப்பட்ட தகவல்கள் _லதா ராமகிருஷ்ணன் [11] முனைவர் வசந்திதேவி தன்னுடைய உரையில் தனிநபரையும், சமூகத்தையும் மேம்படுத்துவதில் கல்விக்குள்ள முக்கியப்பங்கை வலியுறுத்திப் பேசினார். அதிலும் ஆரம்பக்கல்வியின் மேலதிக முக்கியத்துவம் இன்னும் அதிகம் என்று குறிப்பிட்டவர் ஆனால், […]
வித்துவான் க.கதிரேசன், M.A., B.Ed [குன்றக்குடி ஆதீனப்புலவர், சைவத்தமிழ்மணி, சித்தாந்தச்செல்வர், அலுவலகத்தில் பணிசெய்த நாட்களிலும் சரி, விருப்ப ஓய்வில் வெளிவந்து இன்று எட்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டபோதும் சரி, ஏதாவது சமூகப் பணி செய்யும் ஆர்வத்தில் நிதியுதவி கேட்கும்போதெல்லாம் உதவ முன்வரும் முதல் நபராக இருப்பவர் என் மதிப்பிற்குரிய அலுவலகத்தோழி குமாரி. அவ ரும், அவருடைய கணவர் சுந்தரேசனும் அடிக்கடி திரு.கதிரேசன் என்ற தமிழறி ஞரைப் பற்றி மிகுந்த மதிப்போடு பேசக்கேட்டிருக்கிறேன். தமிழாசிரியராக திரு.கதிரேசன் அர்ப்பணிப்போடு […]
-லதா ராமகிருஷ்ணன் அசோகமித்திரனுடைய எழுத்துகள் அடிமனதைத் தொடாத வாசகர் எவரேனும் இருக்க முடியுமா? உலகளாவிய அளவில் தரமான எழுத்தாளர்கள் வரிசையில் இடம்பெறத்தக்கவர் அவர் என்பதை நிரூபிக்கும் அவருடைய படைப்புகளைப் பட்டியலிட்டால் அதன் நீளம் அதிகமாகவே இருக்கும். மேலோட்டமாகப் பார்க்கையில் எளிய நடையில் எழுதப்பட்டதாய், தினசரி வாழ்க்கையைப் படம்பிடித்துக்காட்டுவதாய், சாதாரண மனிதர்களே கதாபாத்திரங்களாய் அமைந்துள்ளதாய் காணப்பெறும் அவருடைய படைப்புகள் உண்மையில் வாழ்க்கை குறித்த நம் பார்வையை விசாலப் படுத்துவதாய், வாழ்க்கையின் பல பரிமாணங்களை, நுட்பங்களை மிகை யுணர்ச்சி […]
நிறுவனர்-தலைவர், வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட்(WELFARE FOUNDATION OF THE BLIND) [ஓய்வுபெற்ற பேராசிரியர், ஆங்கிலத்துறை, கிறித்துவக்கல்லூரி, தாம்பரம், சென்னை 13.05.1934 – 25-09.2012 * அதிராத குரல், நிதானம் தவறாத அணுகுமுறை, எல்லோரையும் அரவணைத்துக் கொண்டு போகும் பாங்கு, பார்வையற்றவர்களுடைய உரிமைகளுக்காகவும், நலவாழ்வுக்காகவும் ஓயாமல் உழைக்கும் ஆர்வம், மன உறுதி, பார்வையுள்ளவர்கள் பார்வையற்றவர்களுக்கு எதிரி என்று பாவிக்காத மனத்தெளிவும், புரிதலும் கொண்ட பண்பு, அறிவைப் பெருக்கிக்கொள்வதில் சலிக்காத தேடலும் ஆர்வமும், எல்லோரிடத்தும் அன்பு […]
கண்ணாடி வீட்டிற்குள்ளிருந்து எத்தனை லாவகமாக, தங்களுக்கு எந்தவிதச் சேதார முமில்லாமல் கல்லெறிந்துகொண்டிருக்கிறார்கள் என்று வெகுஜன ஊடகங்கள், குறிப்பாக, தொலைக்காட்சி நிறுவனங்களைப் பார்த்து வியக்காமலிருக்கமுடியாது. இப்படிச் சொல்வது நிச்சயம் வஞ்சப்புகழ்ச்சி என்பதில் யாருக்கும் சந்தேகம் ஏற்படத் தேவையில்லை. பெண்ணை நுகர்பொருளாகவும் இரண்டாந்தரப் பிரஜையாகவும் 24×7 நேரமும் காட்டி யவாறே, இவ்வாறான பல வழிகளில் பெண்ணிடம் உருவேற்றப் பட்டுள்ள, உருவேற்றப்பட்டுவருகிற பெண்பிம்பங்களுக்காக, பெண்ணைப் பற்றிய எதிர்மறைக் கருத்தாக்கங்களுக்காக பெண்ணுரிமை பற்றியெல்லாம் ஓங்கிக் குரலெடுத்துப் பேசுவதையும் வெகு விமரிசையாக செய்துவருகி […]
பசும்புல்வெளியும் மலையும் ஓடையுமாய் பார்க்க அத்தனை இதமாக இருந்தது சுவற்றில் மாட்டப்பட்டிருந்த அந்த இயற்கைக்காட்சி! அடர் தேன்நிறத்தில் சட்டமிடப்பட்டிருந்த அந்த ஓவியத்தில் காணப்பட்ட பொன்னிறச் சூரியவொளியின் இளஞ்சூட்டை உணரமுடிந்தது என்றுகூடச் சொல்லலாம். Seeing is Believing! அதை வரைந்தவர் ஓவியர் தர்மேஷ். கெல்சன் என்கிற பெயரில் கடந்த பதினைந்தாண்டுகளாக நிலக்காட்சிகளை மட்டுமே ஓவியங்களாகத் தீட்டிவருகிறார். ஏன் இயற்கைக்காட்சிகளை மட்டுமே ஓவியமாகத் தீட்டுகிறீர்கள்? ”ஒன்று, இயற்கைக்காட்சிகள் மனதை அமைதிப்படுத்தும். இரண்டாவது, எனக்கு அதுதான் வரையத்தெரியும்” _வெகு இயல்பாக உண்மைபேசுகிறார் […]
வணக்கம், கட்டுரையாளர் ‘நானும் பிரபஞ்சனும்’ என்று தனது கட்டுரைக்குத் தலைப்பிட்டிருக்கிறாரே தவிர கட்டுரையில் அது குறித்துப் பேசியிருப்பது சொற்பமே. ”மௌலிக்கு ஒரு திறமை உண்டு.. அவருடைய நண்பர்கள், அல்லது தெரிந்த படைப்பாளிகள் வேலை செய்யும் அலுவலகங்களில் ஒரு சனிக்கிழமை மாலை இடம் காலியானவுடன் கூட்டம் போட்டு விடுவார். எனக்குத் தெரிந்து தேவநேயப்பாவாணர் பேரரங்கையோ சிற்றரங்கையோ ( வாடகை வெறும் ஐம்பது ரூபாய்தான்) எடுத்ததாக எனக்கு நினைவில்லை..” என்கிறார் கட்டுரையாளர்.விருட்சம் சார்பில் எழுத்தாளர் அழகியசிங்கர் நிறைய […]