எடை மேடை

This entry is part 23 of 41 in the series 25 செப்டம்பர் 2011

தன்னைத்தானே நீதிமானாகக் கற்பித்துக் கொள்ளும் ஒருவன் பார்க்கும் அனைத்தையும் எடையிட்டுக் கொண்டிருக்கிறான். கடந்து செல்லும் ஒரு பெண்ணை உற்று நோக்குகிறான். அவள் திரும்பப் பார்த்தால் மகிழ்வடைகிறான். பிடித்தமானவள் என்றோ உத்தமி என்றோ குறியீடு இடுகிறான். அவள் அசட்டையாய்க் கடந்தால் திமிர்பிடித்தவளாகிறாள் வேறு யாரையும் நோக்கிப் புன்னகைத்தால் அவன் கணிப்பில் வேசையாகிறாள்.. குழந்தையைப் போலக் கடக்கும் சிலரை என்ன செய்வது என்று தெரியவில்லைஅவனுக்கு.. அதுபோல் அவனைக்கண்டு வினையற்றுக் கடக்கும் அவனுடைய மனைவியையும்.. அதிர்ச்சியடையும் அவன் கணிக்கும் கண்களை மூடி […]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (மெக்காவை நோக்கி) (கவிதை -49)

This entry is part 22 of 41 in the series 25 செப்டம்பர் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கண்களின் வேலை முன்னுள்ளதைக் காண்ப தற்கு. ! ஆத்மா இருப்பது தனது ஆனந்தத் திற்கு ! மூளையின் பயன் இதுதான் மெய்யாய் ஒருத்தியை நேசிப்ப தற்கு ! கால்களின் பணி காதலியின் பின்னே செல்வது ! +++++++++++++ வான வெளியில் காதல் காணாமல் போகும் ! என் மனது ஓடிப் போனது, மனிதர் ஏது செய்வார் என்ன முயல்வார் என்றறிய ! புதிர்கள் […]

பசி வகை!

This entry is part 21 of 41 in the series 25 செப்டம்பர் 2011

பத்து மணி யிலிருந்து பல மணி நேரம் போராட்டம் செய்த பட்டினி வயிறு பாதையோரக் கடையின் பரோட்டா சால்னாவுடனான பேச்சு வார்த்தையில் சமாதானமானது வயிற்றுக்கு ஈயப்பட்டபின் செவிப் பசிக்கு என்பதுகளின் இரைச்சலற்ற இசை வாகனத்தில் விரவ தூக்கம் தொந்தரவானது இராப் பயணங்களில் இரவின் இருப்பை இசையே நிரப்பும் வழுக்கும் தார் சாலை விடுத்து உலுக்கும் கற்சாலை தொடங்க உறக்கமும் கிறக்கமும் சட்டென கலைந்தது மேற்சென்ற வழியெல்லாம் மற்றுமொரு பசிக்கான பரிவர்த்தனை காட்சிகள் பொதி உண்ட கனரக வாகனங்கள் […]

கடவுளிடம் டிஷ்யூம்-டிஷ்யூம்

This entry is part 20 of 41 in the series 25 செப்டம்பர் 2011

”முன் ஜென்ம” கணக்கு காட்டி எனக்கு மறுக்கபட்டிருந்த அன்பை நான் மற்றவர்க்கு கொடுத்து விட்டால், தண்டனையென எனக்கு விதித்ததை எப்படி வசூளித்து கொள்வாய்? உன் செயல்களை அறிய முயன்று நான் தோற்கிற வரை நீ பரம்பொருள் தான்.. நிகழ்வுகளின் மூல கூறுகளை அறிய முற்படுவதையே விட்டுவிட்டால் உனக்கு என்ன பெயர் வைத்துகொள்வாய்? எதிர்காலத்தை கையில் கொண்டு வித்தை காட்டி மகிழ்கிறாய் எதுவாயினும் இருக்கட்டும் என நான் விட்டு விட்டால் உப்புசப்பற்று ஆகிவிடுமோ உனக்கு ? இப்படி ,நீ […]

கடைசி இரவு

This entry is part 17 of 41 in the series 25 செப்டம்பர் 2011

எதிர்பார்த்துக் காத்திருந்து படிக்கும் ஒரு தொடர்கதையின் கனத்த கடைசி அத்தியாயமாய், நீண்டு கொண்டே இருந்த என் நாட்குறிப்பிற்கு “முற்றும்” போட்டு விட்டேன்.. நாளை, அடுத்த வாரம் என்று கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் தேர்தல் அறிக்கைகளாகப் போகின்றன.. ஏளனமும் அலட்சியமும் வந்த இடங்களிலிருந்து மாலைகளும் மலர்வளையங்களும் வரலாம், சில பல துளிக்கண்ணீரும்! பார்த்து ஏமாற இருக்கப்போவதில்லை.. எதெதற்கோ பயந்த பயங்களெல்லாம் வேடிக்கையாய்த் தோன்றுகின்றன.. கனவுகளும் அவற்றை நோக்கிய பயணங்களும், தடைகளும் அது குறித்த போராட்டங்களும் அர்த்தமற்றுப் போன வெளி […]

கனவுக்குள் யாரோ..?

This entry is part 15 of 41 in the series 25 செப்டம்பர் 2011

யாரோ…என் நிழலை மிதித்துப் போனது போல்…ஒரு சிலிர்ப்பு ..! யாரோ…என் இதயத்தை இழுத்துச் சென்றது போல்…ஓர் ஈர்ப்பு..! யாரோ…என் கனவை கலைத்தது போல்…ஓர் உணர்வு..! அதனை போராட்டத்திலும் யாரோ…என்னை அழைத்தது போல்..ஒரு சுகம்..! கண்ணைத் திறந்தேன்… கனவென உணர்ந்தேன்….ஓர் வெறுமை..! ஓசை இன்றி சொல்லிக்கொள்ளாமல் இறங்கிப் போகும் ரயில் பயணி…! உறக்கத்தில் கனவு..! =============================== ஜெயஸ்ரீ ஷங்கர்…

மின்சாரக்கோளாறு

This entry is part 13 of 41 in the series 25 செப்டம்பர் 2011

மின்சாரக்கடத்தியாய் திகழ்வது ஒரு காலம் மினசாரம் கடந்து வாழ்வது ஒரு காலம் வானம் தெளிவாய் இல்லாத ஒரு காலமும் உண்டு அது எச்சரிக்கையாய் இருக்கவேண்டிய காலம் அதை பதுக்கிவைத்திருந்தால் ஏமாற்றமில்லை அது பதுங்கியிருந்தால் ஏமாற்றம்தான் இரவில் இரைதேடும் எலிகளைப்போலவும் எலிகளைத்தேடும் பாம்புகளாகவும் தலைகாட்டும் தருணங்கள் அத்துபடிதான் பெருங்காயப்பெட்டியை திறந்துவைத்துவிட்டு ஊதுபத்தியைக் கொளுத்திவிட்டு காற்றின்மீது கறைபூசமுடியுமா? அது வெங்காயத்திற்கும் கண்ணீருக்குமான பந்தம் என்னைமீறி எதுவுமில்லை என்றிருந்ததுதான் தவறு என்னைப் பலமுறை வென்றது வென்றிருந்தால் நான் இளங்கோ அடிகள் வெல்லாததால் […]

இரவை வென்ற விழிகள்

This entry is part 9 of 41 in the series 25 செப்டம்பர் 2011

துஞ்சாத கண்களும் துயிலாத இரவும் உருட்டிய பகடையில் விழுந்தது முதல் தாயம் ஆட்டத்தை துவங்கியது இரவு. உறங்காத இரவிற்குள் சலனமின்றி உறங்கிய கனவு ஏணிகள் வழியாய் அசுரப் பாய்ச்சலில் நகர்வு. எதிவந்த அரவங்களின் வாய்தனில் அகப்படாமல் தாண்டித் தாண்டி தொடர்ந்தன கண்கள் மூன்றாம் யாமத்தைத் தாண்டியும் வெற்றி தோல்வியின்றி தொடர்ந்த உருட்டல்களில் எல்லாப் பிடிகளுக்கும் நழுவிய இரவு இறுதியாய் வைகறையின் வாயில் சிக்குண்டது. – வருணன்

ரமணி கவிதைகள்

This entry is part 1 of 41 in the series 25 செப்டம்பர் 2011

அன்பின் வலி இறுகப்பிடித்திருந்த அம்மாவின் சுட்டுவிரல் வழி வழியும் அன்பின் அதீதம் தாங்காது போயிருக்கிறது பல நேரங்களில்… பள்ளிக்கூட வாசலில் அழுதுவிடுவேனோ எனத் தயங்கி நின்றவளைக் கையசைத்துப் போகச் சொன்னதும் உண்டு. மொழி தொ¢யாத ஊ¡¢ல் வேலை கிடைத்துப் போகும் நாளின் முன் இரவில் மடி சாய்த்துத் தலை கோதி வார்த்தையற்று இருந்தவளை விலக்கி நகர்ந்த போதும் மண நாளில் யாருக்கோ என்னைத் தாரை வார்த்ததாய்த் தனியளாய் நின்று யாருமறியாமல் மருகிய போதும் அன்பின் இரு எல்லைகளை […]

பந்தல்

This entry is part 5 of 41 in the series 25 செப்டம்பர் 2011

  கல்யாண வீடு களைகட்டியிருந்தது வெளிநாட்டு மாப்பிள்ளை கட்டிக்க கசக்குதா என்றார்கள் நான் இன்னும் படிக்கணும் என்றாள் அவள் அம்மாஞ்சி சேகரை மனதில் வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டி மணவறையில் அமர வைத்தார்கள் காதல் பறவைகளில் ஒன்றை கவண்கல்லால் அடிப்பது சமூகத்திற்கு புதிதல்ல தன் வாழ்க்கையை பிறர் தீர்மானிக்க வைத்து தலை குனிந்து தாலி ஏற்கும் பெண்கள் இன்னுமிருக்கிறார்கள்.