சுமந்த போழ்தும் சும்ந்த பின்னும் சுமப்பது – தாயின் தியாகம் ஊருக்கு விருந்து வைக்கவும் ஊரையே விருந்தாக்கவும்- ஒற்றைத் தீக்குச்சி மானம் காப்பதும் மானமிழந்தால் கோர்ப்பதும் – ஒன்றே முடிச்சு மணந்தால் மறப்பதும் மணக்காவிடில் மறக்காததும்- அதே காதல் உணவின் முடிவு மறுவுலகின் துவக்கம் – அதுவே மரணம் ஊரை இணைப்பதும் ஊரைப் பிரிப்பதும் – அதே தெருக்கள் பிறரைக் காப்பதால் தன்னைக் காப்பது – அதே தர்மம் குழந்தைக்கு வந்து பொம்மை நிறுத்தியதும் பெரியதாய் வளர்ந்ததும் […]
தண்ணி யடிசசு வந்தா தடாவாமே அண்ணாச்சி பாக்கிவச்சார் ஆகாரம் மண்ணாச்சு போய்யா அதுகிடக்கு பாயா கவிச்சிதுண்ண நாயுடு மெஸ்படி ஏறு.. வாசல் எருமைங்க வால்தூக்கு தேவிலகு ஏசாதே நீமெர்சல் ஆவாதே – ராசால்லே ஓரமாய் ஆம்லெட்மேல் ஓடுதுபார் மாட்டுஈ காரம்போர்ட் காய்கணக்கா சுண்டு. ஈமூ கறி’பா எடுத்து ருசிபாரு ஏமி முளிக்கறே ஏனத்தக் காமி தயிர்வடை ஓணும்னு தம்பிவந்து நிக்கறான் அய்ர்ர்வூட்டுப் புள்ள அனுப்பு. (ஈமு Emu – நெருப்புக்கோழி […]
பழக்கப்பட்ட உடல்களைப் போலிருந்தன அவை செய்கையும் செய்நேர்த்தியும் எத்தனை சிற்பியோ.. விரிந்தும் குறுகியும் அகண்டும் பருத்தும் ஆதிமூர்க்கங்களின் விலாசங்கள் அறிகுறிகளின் கையெழுத்தோடு. நிராசையோ., நிரந்தரச் சுவையோ., நேர் நேர் தேமாவென ஒற்றைச் சாளரம் வழி வழிந்து பெருகியது காற்றில் ஓரிதழ் தாமரையென. ஒன்றிணைந்து மிதந்து கொண்டிருந்தன.. நிறை நேர் புளிமாவிலிருந்து முற்றிலும் ஒதுங்கி.
மிக உன்னதமான ஒன்றைப் போன்ற பாவனைகளுடன் எழுதப்படுகின்றன. ஒவ்வொரு வார்த்தைகளும் மிக எளிமையான ஒன்றைப் பற்றி. புரிந்து கொள்ளவும் உணர்ந்து கொள்ளவும் அயற்சி ஏற்படுத்தும் ஒவ்வொரு நிமிடங்களும்’ அதன் மதிப்பை அதிகப்படுத்துகின்றன. அயர வைப்பதுபோல் தோன்றினாலும் மலையிலிருந்து ஒரு கல் மடுவிலிருந்து கொஞ்சம் சேறு பனியிலிருந்து சிறு பாறை காட்டிலிருந்து ஒரு சுள்ளி என பொறுக்கிச் சேர்க்கும் கலவை பல் நீட்டிக் கொண்டிருக்கிறது. சரளமற்ற ஒன்றை சர்வதேசத்தரம் என்ற சங்கப்பலகை போன்றதான மிதக்கும் பீடத்தில் சுமப்பவர்கள் சாதாரணரர்களைக் […]
அகம் சார்ந்த வாழ்வை பழித்து விடப்பட்டிருக்கிறது ஆதலால் முன்னோர்களின் வழியின் திறவுக்கோல் வைத்து சரிப்பார்த்துக்கொள்ள முடிகிறது நான் எதிர் கொள்ளும் அனைத்தின் விளைவுகளும் . இதில் திறவுக்கோல் அளவுகள் பரிசோதிக்க அவசியம் இருக்கவில்லை அனைத்துக்குமான நிறைவை உள்ளடக்கியது இவை . என் அகம் பிரபஞ்ச தொன்மையில் தொலைந்து போயிந்த ஒன்று வார்த்தையின் தேடல்களில் அவை சிக்குவதில்லை மன உணர்வின் அதிர்வுகளும் அறிவதில்லை . கிடைக்க பெறாத எதுவுமே நம்பிக்கையாக்கப்படுவதால் அவ்வண்ணமே நானும் ஆக்கப்பட்டேன் . கொடுர நம்பிக்கை […]
பேச வேண்டுமென நினைக்கும் வார்த்தைகள்.. உள் மடங்கி குறைப்பிரசவமாய்! ஜீரணிக்க முடியா நிகழ்தலில்.. காதலுக்கான குறியீடுகள்! கவிதையின் உப்பில் உள்ளளவும் நன்றி மறவா கண்ணீர் படிமங்கள்!!! -மணவை அமீன்.
ஊரைவிட்டு விலக்கி வைத்தனர் என்னை நீரைவிட்டு நிலத்தி லிட்டனர் மீனை ஊரினம் யாவரும் ஓரின மாயினர் எனக் கெதிராய் காரண மாயிரம் தோரண மாயின சீர்திருத்தம் சொன்னவரை பெரியார் என்றனர் சிறுதிருத்தம் சொன்ன எனை பிரிந்துபோ என்றனர் பஞ்சாயத்தில் புலிவேஷத்துடன் பத்தாயத்து எலிகள்… படிப்பறிவு இன்றியே ஒரு பிடி பிடித்தன பிஞ்சுகள் இருவர் பிழை செய்தனர் விடியோ விளையாட்டென வாழ்க்கயை எண்ணினர் வாழத் தலைப்பட்டு வீடுகள் துறந்தனர் ஓடிப் […]
மழைக்கால இரவு கொசுக்களின் படையெடுப்பில் உடலிலிருந்து அரை அவுன்ஸ் இரத்தம் குறைந்தது வெள்ளத்தில் மூழ்கிய வாகனத்தின் உள்ளே இரண்டு சடலங்கள் பயங்கரத்தை ஞாபகப்படுத்தும் மேகத்தின் கறுமை நிறம் காற்றின் வேகத்தால் மரங்கள் பேயாட்டம் போடும் இடி தாக்கியதில் கோயில் மதில் சுவரில் விரிசல் விழுந்திருக்கும் ஆளரவமற்ற வீதியை மின்னல் படமெடுக்கும் ஆறு உடைப்பெடுத்ததை அறியாமல் ஊருசனம் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும்.
___ ரமணி நானறிந்த நிகரற்ற நட்சத்திரங்களின் ஞாபகத்தோடு வானின் தொலைதூரத்திலெரியும் சூரியனை என் ஒளியிழந்த கண்கொண்டு பார்க்க விழைகிறேன். நீண்ட வெளியின் மையத்தையும் முடிவையும் காணத்துடிக்கும் மனதின் வீண்முயற்சியின் அடித்தளத்தில் தகிக்கும் அடையாளமற்ற வெற்றுப்பார்வையில் என் சிறகுகள் கட்டவிழ்கின்றன. ஆனந்தத்தின் அடர்த்தியில்லாது கடந்துபோன வாழ்வை எரித்து என் கல்லறையாகக் காத்துக்கிடக்கும் பள்ளத்தாக்கிற்கு என் பெயரைச் சூட்ட நினைக்கிறேன்.
__ ரமணி இரவின் மிச்சம் இன்னும் ஜன்னல் கண்ணாடிகளுக்குப்பின் மயங்கிக் கொண்டிருக்கிறது. எது எரிந்து இப்படி சாம்பலாய்ப் பூத்துக்கொண்டிருக்கிறது? கண்களுக்குள் இன்னும் கனவு முட்டைகள் உடையாதிருக்கின்றன. முட்டைகள்! துராக்ருத முட்டைகள்! ஒரு கோப்பை காப்பித்திரவத்தால் அவற்றைக் கலைத்துவிடமுடியாது! பகலின் நெரிசலில் வாழ்க்கை வர்த்தகங்கள் சிதறடித்து விரட்ட எங்கோ மாயமறைவில் ஓடி ஒளிந்தாலும் இருளின் பதுங்கு குழிக்குள் எப்படியோ மீண்டும் சூல்கொண்டுவிடும் ஒவ்வொரு பொழுதிலும் மனக்கண்ணாடி உடைந்து அவஸ்தையாய் உயிர்த்திரவம் பெருகும்.