உன் இரவு

This entry is part 50 of 54 in the series 4 செப்டம்பர் 2011

என் இரவுகளும் உன் இரவுகளும் நம் காதல் கனவுகள் சொல்லியே கரைகின்றன… கை கூப்பி காதல் சொல்ல நான் தயார் நீ என்னுடைய காதல் கடவுள் என்பதால்… நீண்ட இரவுகள் சில நேரம் கொடியது.. உன் கனவுகள் இல்லாமல் என் இமைகள் வறண்டு விடுவதால்… மார்கழி குளிரும் சில நேரம் காதல் கனவுகள் சொல்கிறது இருக்கமாய் போத்தி கொள்ளும் என் போர்வை நீ ஆகி போவதால் — ராசை நேத்திரன்

தாகம்

This entry is part 47 of 54 in the series 4 செப்டம்பர் 2011

  குறைந்தது வாரத்திற்கு இரண்டு இலக்கியக்கூட்டங்கள் சின்ன அறையில் எண்ணிக்கைக் குறைவில் வருகையாளர்கள் அவர்களில் அதிகம் எழுத்தாளர்கள் எழுத்தும் வாசிப்பும் தவம் பெரிய அரங்கில் அதிக அளவில் வருகையாளர்கள் சிற்றுண்டி விரும்பிகள் அதிகம் சுட்டுதலும் சுருங்கக்கூறுதலும் குறைவு பெரிய அரங்கில் வழிபாடும் துதிபாடுதலும் அதிகம் அது முகம்காண வந்தக்கூட்டம் வந்து திரும்புவது அதன் வாடிக்கை சிற்றரங்கில் வசைபாடுதலும் கிண்டலும் கேளியும் அதிகம் உட்காருவதில் ஒரு ஒழுங்கில்லை அங்கே எல்லாரிடத்திலும் வெளிப்படுகிறது கோபம் அவர்களின் கோபத்தில் யாரும் தப்புவதில்லை […]

குப்பைத்தொட்டியாய்

This entry is part 46 of 54 in the series 4 செப்டம்பர் 2011

பிச்சினிக்காடு இளங்கோ 1 அட்சயபாத்திரம் அள்ள ஏதுமற்ற வெற்றுப்பாத்திரமாய்… கொட்டிச் சிரித்ததுபோய் வற்றி வதங்கி ஈரமில்லா அருவியாய்… கிளைகளில்லாத மரங்களாய் இலைகளற்ற கிளைகளாய் பச்சையமில்லா இலைகளாய் நிரம்பிய வனமாய்… மலர்களின் இடத்தை முட்கள் அபகரித்துக்கொண்டன வெளிச்சத்தின் தளத்தை இருள் கவ்விக்கொண்டது கரையவேண்டியது இறுகிப்போனது உதிரும் கனிகளின்றி கசக்கும் காய்களோடு நிரந்தரமாய்… சிரிக்காமல் மணக்காமல் நாறிக்கொண்டிருக்கிறது குப்பைத்தொட்டியாய்

கனவு

This entry is part 45 of 54 in the series 4 செப்டம்பர் 2011

வெகு தூரப் பயணம்.. இது… ஆனால் ஒரே இடத்தில் இருந்து கொண்டே பயணம் செய்யும் வினோதம்! இங்கு தான் – கண்கள் இரண்டை மூடினாலும் பார்வை வரும்… ஒளி முதல்கள் இல்லாமலே வெளிச்சம் வரும்… வாய் கூடத் திறவாமலே வார்த்தை வரும்… ஓராயிரம் குண்டுகள் வெடிக்கும் ஆனால் ஒரு சலனமும் இருக்காது… ஒரு மொட்டு மலர்ந்து விட்டால் எத்தனை கோடி சப்தங்கள் இங்கே…! தொலை தூரப் பயணம்… இங்கே தொடுவானில் தொங்கு பாலம் தொங்கும்… அதிலே… “குதி”யிலாமல் […]

நிலா மற்றும்..

This entry is part 43 of 54 in the series 4 செப்டம்பர் 2011

___________ மழை சேமிப்பு திட்டம்.. மொட்டை மாடியில் பொழிந்த மழைக்கென.. நிலா சேமிப்பு உண்டா ? மொட்டை மாடியில் பொழிந்த நிலவுக்கென .. அவசரகதி தட்டுபடாத பிறிதோரு நேரங்களில் ஒன்று கூடி நாங்கள் நிலா சோறு உண்ண.. மின்-விளக்கு காய்ச்சலில் கழிகிறது எங்கள் முன்இரவுகளும் பகல்களும் அவரவர் அறைகளில்.. சேமிக்க தெரியவில்லை நிலா மற்றும் இன்ன பிற .. – சித்ரா (k_chithra@yahoo.com)

சில்ல‌ரை

This entry is part 42 of 54 in the series 4 செப்டம்பர் 2011

சில்ல‌ரை நாண‌ய‌மே நீங்க‌ளும் பெண்க‌ளோ ஒன்றாய் இருந்தால் க‌லக‌லப்புச் ச‌த்தந்தான் பெண்க‌ள்போல் வ‌ட்ட‌மான‌ அழ‌கிய‌ முக‌முட‌ய‌ உங்க‌ள் த‌லைக்குப் பின் தானே பூ இருக்கிற‌து ம‌ங்க‌ய‌ர்போல் ம‌க‌த்தான‌ ப‌க்திகொண்ட‌ உங்க‌ள் காணிக்கையால் கோவில் உண்டிய‌ல் நிரைகிறது மாதர்க‌ள்போல் இர‌க்க‌ குண‌முட‌ய‌ உங்க‌ளால்தான் பிச்சைக்காரர்க‌ள் வாழ்க்கையும் உருள்கிற‌து ஆனால் சிறுவிச‌ய‌த்துக்காக‌ பெரிதாக‌ ச‌ண்டையிட்டால் சில்ல‌ரைத்த‌ன‌ம் என்று சொல்லுவதேன்? இதுவும் பேதைய‌வ‌ர் குண‌ம்தானோ! பா. திருசெந்தில் நாதன்

மன்னிப்பதற்கான கனவு

This entry is part 41 of 54 in the series 4 செப்டம்பர் 2011

இப்படியாக தான் வாழ்வியல் கனவு அமைக்கப்படும் என்று போதிக்கப்பட்டது . இதில் இன்னும் நீ வந்திருக்கவில்லை . கலைந்து போன கனவை என்றேனும் சந்திக்க இருப்பாய் வன்மம் கொண்ட காலம் எச்சரித்து கொண்டிருக்கிறது அப்பொழுதும் நீ கண்டிப்பாக வந்திருக்கவில்லை . காத்திருக்கும் அடுத்த நொடி அனைத்துமாக நீயாக இருப்பதற்கு இன்னும் ஒரு வாரம் கடக்க வேண்டிருக்கிறது .. ஆதலால் நீ இன்னும் வந்திருக்கவில்லை . நம்மை காலம் இணைத்திருக்குமாயின் இதையே என் அன்பாக எற்றுகொள் இல்லையெனில் இருக்கவே […]

அந்த ஒரு விநாடி

This entry is part 40 of 54 in the series 4 செப்டம்பர் 2011

அந்த ஒரு விநாடியைத்தான் தேடுகிறேன்.. உன் நாட்குறிப்பிலும் என் நாட்குறிப்பிலும், நம் எழுதுகோல்கள் அழுதிருக்கவில்லை என் விழிகளைப் போல்.. ஏதோ ஒரு கடிகாரம் அந்த நொடியோடு நின்றிருக்கும் என்றெண்ணி கண்பதிக்கிறேன், எந்த கடிகாரமும் துடிப்பதை நிறுத்திக்கொள்ளவில்லை, என் இதயத்தைப்போல்.. சிவந்த கண்களோடும் கனத்த இதயத்தோடும் தேடுகிறேன், பரஸ்பர நம்பிக்கையும் அன்பாலான நம் நட்பில் சந்தேக விஷத்துளி வீழ்ந்த அந்த நொடியை, நம் வாழ்வுகளிலிருந்து நிரந்தரமாக அழிக்க எண்ணி… -கயல்விழி(kayalkarthik91@gmail.com)

திரும்பிப் பார்க்க

This entry is part 39 of 54 in the series 4 செப்டம்பர் 2011

இரத்தின மூர்த்தி நிறையக் கனவுகள் அதில் புதிய புதிய பரிமாணங்கள் உன்னை சந்திக்க வருகின்ற எனக்குள் என்னைப் பற்றியும் என் இருப்பிடம் பற்றியும் ஒரு நிமிடம்கூட நினைத்தறியாத உன்னைப்பற்றியே நினைத்திருக்கும் எனக்குள் எப்போதும் உன் உலகம் சுழன்றபடியே இருக்கும் கால மாற்றத்தில் நான் பெரிய ஆல மரமாய் வளர்ந்து நின்ற போதும் பால்ய காலத்தில் எனக்குள் நட்பை விதைத்துச் சென்ற உன்னை தாலாட்டி மகிழ விழுதுகளை வளர்த்து காத்திருந்து தவித்துப் போனது உண்டு உன் பாராமுகத்தால் ஏமாற்றங்களை […]

மானும் கொம்பும்

This entry is part 38 of 54 in the series 4 செப்டம்பர் 2011

மண்ணுக்கு மேலே ஒரு மான் கொம்பு தெரிய மண்ணை தன் கூரியக் கொம்பால் தோண்டித் தோண்டி எறிந்தது இளமான். தோண்டித் தோண்டி மண்ணுள் புதைந்த மானைக் காப்பாற்றும் முயற்சியில் மானின் கொம்புகளே ஒடிந்து போக உள்ளே வாடி இலை உதிர்ந்த ஒரு சிறு மரத்தின் வேர்களேத் தெரிந்தன. தன் இழந்த கொம்புகளுக்காய் வருந்தாத மான் புதைந்த மானுக்காய் வருந்திச் சென்றது. சூர்யா நீலகண்டன்