சொன்னதையே திரும்பத் திரும்ப பச்சை மரம் சொல்வதாக அலுத்துக்கொண்ட நிழல் கறுப்பு வா¢களில் மொழிபெயர்ந்து கிடக்கிறது காலடியில். அனைத்தும் சொல்லிவிட்டாலும் சும்மாவாய் இருக்கிறது நீலவானம் என முணுமுணுக்கிறது மரம். ஒன்றுபோல்தான் என்றாலும் தானே முளைக்கும் புல்போல் மனம் என்ன நினைக்காமலா இருக்கிறது? சொல்லி அலுத்தாலும் எல்லாம் புதியனவாய் இல்லாவிடினும் பழையனவற்றை எப்படிச் சொன்னால் நல்லது என நானும்…. எப்படி ஏற்பது என ‘யாரோ’வுமாய்…. —ரமணி
வெயிலுக்கு கூட பள்ளிகூடம் பக்கம் ஓதுங்க விஞ்ஞானி தான் கண்டறிந்த அழியா மையினால் புள்ளிகளையும் கோடுகளையும் மாற்றிமாற்றி குறிகளிட்டு துணிகளை அடையாளப்படுத்துகிறார் மாண்டரின் போலிகள் லாஜிக்கில் அடங்காது மொழி வல்லுநரால் வாசிக்க இயலாது கணினி வல்லுநரால் டிகோடிங் செய்ய முடியாது பரம்பரையாக தொடரும் குடும்ப ரகசியம் அவரது கழுதைக்கு தெரிந்தாலும் தெரிந்திருக்கும்
நீள் பயணங்களில் நெரியும் சனத்திரளில் பாரம் தாங்கமுடியாமலோ பத்திரமாய் உறங்கட்டுமெனவோ நம் மடிமீது வலிய இறுத்தப்படும் குழந்தையின் எப்போதாவது இதமாய் உந்தும் பிஞ்சுப்பாதம் இதழ்வழியே தவழ்ந்து ஈரமூட்டும் எச்சிலமுதம் கனவுகளில் தேவதைகள் கூட்டிடும் குறுஞ்சிரிப்பென என்னதான் சொர்க்கத்தை மீட்டினாலும் இறுதியாய் எப்போது சிறுநீர் கழித்திருக்குமென நச்சரிக்கும் சிந்தனை நரகத்திலிருந்து தப்பிக்க முடிவதில்லை பல நேரங்களில்!
காட்டிலிருந்து வெட்டிக்கொண்டுவரப்பட்ட மரம் காத்துக்கொண்டிருந்தது தன் கதை தன் மேலேயே அவனால் எழுதப்படும் என்று. வெட்டுப்படுதலும் ,பின் துளிர்த்தலும், மழை வேண்டிக்காத்திருப்பதும் வேண்டாத இலைகளைக்களைவதும் அழையா விருந்தாளிகளைத்தாங்கி நிற்பதும், அண்டி வரும் எவருக்கும், யாரெனத்தெரியாமல் நிழல் தருவதுமான மரத்தின் நினைவுகள் மறக்கடிக்கப்பட்டு எழுதுபவனின் அவமானங்களும் மகிழ்வும்,சோகமும் அப்பிக்கொண்டன எழுத்தாக அதன் மேல். மரமும் அதைக்கொஞ்சம் வாசிக்க முயன்று பின் தன்னைத்தானே தேற்றிக்கொண்டது ஏதோ ஒரு வகையில் அவை தன் கதையை ஒத்திருப்பதாக.
எனக்கு நேரம் சரியில்லை எனக்கணித்த ஜோதிடகளுக்கு நான் நன்றியே சொல்வேன் நேரம் சரியில்லை எனும்பொழுதெல்லாம் நான் கடவுளாகிவிடுகிறேன் ரொம்ப நல்லநேரம் எனும்பொழுதெல்லாம் நான் இயந்திரமாகிவிடுகிறேன் எது நல்லநேரம் என்று குழப்பமாய் உள்ளது கடவுளாய் இருப்பதைவிட இயந்திரமாய் இருப்பதையே மனித மனம் விரும்புவதாலோ. =முத்துசுரேஷ் குமார்
நிலாக்காதலனே நீயும் என்போல் உன் காதலியாம் பூமியை சுற்றி சுற்றி வருகிறாய் அவளை எண்ணி எண்ணி இளைக்கிறாய் அவளோ என் காதலி போன்று பணக்கார சூ¡¢யனை விரும்பி அவன்பின் வருடக்கனக்காய் சுற்றுகிறாள் மனம் தளர்ந்துவிடதே என்னைப்போல் முதிர்கன்னியானயுடன் அவர்களுக்கு நம்மை விட்டால் யார் இருக்கிறார்கள் பா. திருசெந்தில் நாதன்
விளக்குகளிளால் மட்டுமே வெளிச்சம் பெரும் குடிசையில் நிலவு மட்டுமே நீண்ட ஒளியால் சமத்துவம் பேசிவிட்டு போகிறது மாடிவீட்டை கடந்து வரும் என் கால்களிலிருந்து என் கண்களுக்கு அ. இராஜ்திலக்
பூவில் ஒருபூவாய் அழகிற்கோரணியாய் அடியோ தாமரையிதழாய் அகம்பாவம் அறியாதவளாய் குணம் வெள்ளை நிறமாய் குறுநகையால் வெல்வாய்…! மகிழ்ந்தால் மங்கலப்புன்னகையாய்… மதியால் மாநிலம் காப்பவளாய்… அழுதால் ஆற்றிடை ஆம்பல் மலராய்… அதிர்ந்தால் நாற்றிடை நாதஸ்வரமாய்… அயர்ந்தால் தென்னங்கீற்றிடைப் பூவாய் உறைவாய். சீருடைச் சிப்பிக்குள் முத்தாய்… தேரிடைப் பூவுக்குள் தேனாய்… நேர்த்தியாய் பாடசாலையில் பயில்வாய் சீரிய குழந்தாய் சுறுசுறுப்பாய்..! ஜுமானா ஜுனைட், இலங்கை.
____________________ தென்னைமர உச்சி கிளைகள், அடர்த்தியான வெண் மேகம் நீல வான பின்னணியில் .. இயற்கை ஓவியத்தின் கீழ் குறுக்கில் கிறுக்கல் கோடுகள் – கோணல் மாணலாய் தொங்கும் கேபிள் டிவி கம்பிவடங்கள்.. சாலை அமைக்கவே ஒரு துறையும் கொத்தி குதறவே மற்ற துறைகளும் வீட்டு ஜன்னலிருந்து கைநீட்டினால் சாலை தரை தட்டும் – மேன்மேலும் உயர்ந்து விட்ட சாலை-சீரமைப்புகளும்!! அவரவர்களுக்கு உண்டான காரணங்களோடு .. காற்றிலும் , அதிராத அளவான ஒயிலாக கிளையிலை அசைக்கிற அழகியல் […]
அதைப் போலொரு பறவையைப் பலியிட்டு படையலுடன் பிரார்த்தனனகளுடன் அண்ணாந்து வானம் நோக்கி அழைத்த படியிருந்தான். குறித்த நேரத்தில் அவ்விடத்தைத்தினம் வந்தடைகிற அது அன்று வரவே இல்லை. ஆளற்ற வானந்தரத்தில் நாற்றமடிக்கத்தொடங்கியிருந்த அவனை போலொரு அழுகிய ஒன்றை கொத்தி தின்று கொண்டிருந்தது அது . ரவிஉதயன் raviuthayan@gmail.com