கஞ்சி வாடை

This entry is part 1 of 4 in the series 15 செப்டம்பர் 2024

ரவி அல்லது கொளுந்துவிட்டுஎரியும்அடுப்பில்வெந்துகொண்டிருந்ததுபசி. குளிர்ந்த நீர்வயிற்றுக்குள்சூடாகியதற்குபெரும் காரணம்தேவையில்லைஅடுப்புஎரிவதைத் தவிர. புத்தகத்தில்சுருண்டுக்கிடந்தபிள்ளைமதியம் மண்ணில் விழுந்தசாதத்தைசாப்பிட்டிருக்க வேண்டுமெனநினைத்தவாறுஒழுகும்எச்சிலால்காகிதத்தை நனைத்து.வருவது தூக்கமாமயக்கமாவெனதெரியாமலையேகிடந்தது. தட்டியை விளக்கிவெளிவந்தஅம்மாகுப்புறக் கிடக்கும்கணவனைத் தெரியதவாறுகதவுத் தட்டியை மூடிபிள்ளையைஎழுப்ப வேண்டுமென்றபெருங் கவலையோடுஅவசரமாகஅடுப்படிக்குப் போனாள். சோறாகாமல்கூழான கஞ்சிக்குவருத்தப்படும்அம்மா.வாஞ்சையோடுஅணைத்துமுத்தம் கொடுக்கும்போதுஇன்றும்சாராய வாடைவராமலிருந்தால்தேவலாமெனகனவு கண்டதுபிள்ளைகுமட்டும் கொடுமையிலிருந்துதப்பிக்க.வடிக்காத கஞ்சிவாடையைமுகர்ந்தவாறு. -ரவி அல்லது.ravialladhu@gmail.com

யாவிற்குமான பொழிதல்.

This entry is part 3 of 5 in the series 8 செப்டம்பர் 2024

ரவி அல்லது.  சூழும் கருமேகம்  விரைந்தோட வைத்தது யாவையும் அதனதன் காரணங்களுக்கு அச்சம் மேலிட.  பொழிந்து விடும் கன மழைக்கான குளிர் காற்றை வெளியிலிருப்பவர்கள் ரசிப்பதாக இல்லை குளிர்மை கூடியிருந்தாலும். வீழ்ந்து கிடக்கும் விவசாயிகள் சாலையோரம் தானியங்களை கூட்டுவதில் மும்முரமாக இருந்தார்கள் ரவறண்ட வாழ்க்கையில் ஈரப்பதமற்று கண்டு முதலாக்கிவிட.  இரை  எடுத்துச்சென்ற ஏதோவொன்று தவறவிட்ட தட்டைக்கார மீனை சேமிப்பாக்கிக் கொண்டிருந்தது சிற்றெறும்புகள் நிதானமாக.  பிய்தெடுத்த சதைகளற்ற முள் கூடு வசீகர அழகு கூட்டியது மழைக் கணத்தை மறக்க […]

உயிரே!

This entry is part 2 of 5 in the series 8 செப்டம்பர் 2024

நேற்றைய நடைப்பயிற்ச்சியில்  காலில் மிதிப்பட்டது,  ஆல விதை என எனக்கு தெரியாது. ஏதோ ஒரு சமயம்  அவ்வழி நடந்தேன். வா! என அழைத்து விருட்சமாக,   மனதார வாழ்த்தியது  வீசும் தென்றலாய்.       ஜெயானந்தன் 

மேவிய அன்பில் திளைக்கும் கருணை

This entry is part 1 of 5 in the series 8 செப்டம்பர் 2024

ரவி அல்லது கைகளசைத்தஇடப்பக்கம் நின்றுருந்தஇரு சிறுவர்களின்கையிலிருந்ததுஇனிப்பாக இருக்குமெனநினைத்தேன்.வேகமாகவாகனத்தில்வந்தபொழுதுஅவதானிக்க தவறியதால். கூப்பிடு தூரத்தைகடந்துவிட்ட போதும்திரும்ப நினைத்ததுபிறந்த நாளுக்குஇனிப்பு கொடுக்கநினைத்திருக்கும்.அவர்களின் அறச் சிந்தனையைஉதாசீனம் செய்யலாகாது.ஆட்களைப் பார்த்துவருவது இல்லைஅறமென்பதனால். முன்பொரு முறைசுட்டெரிக்கும் வெயிலின்மதியப்பொழுதில்கல்லூரி மாணவர்கள்கரும்பு பானம்வாங்கிக் கொடுத்தார்கள்தாகத்தணிதலாககடந்து செல்கிறவர்களுக்கு.பிறந்த நாளுக்கென்றுசொன்னாலும்கைபேசியின்விருப்பு எண்ணிக்கை கூடலின்ஆசையென்பதைமறுக்கவியலாதுநற்பயனாகவந்தவர்களின்உள்ளம் குளிர்ந்தாலும். திரும்பிச் சென்றபிறகுதான்தெரிந்தது.வீதியோரவழிபாட்டு பாடல்களால்விளைந்ததுஇச் சிறுவர்களின்மகிழ்ச்சி பொழுதுகளென்பதுநம்பிக்கையைபாலத்தின் திண்டில் வைத்துபூக்கள் தூவி இருந்ததால். மீச்சிறுநிகழ்வு கூடஆழப் புரிதலுக்குள்தள்ளுகிறது.புறங்களை மறக்கவைக்கும் படியாக.வீதியோரங்களில்விண்ணதிரபாடல்கள் ஒலித்தாலும்சிந்தயைச்சிதைக்காத பயணமாகவாய்க்கிறது. இப்போதெல்லாம்யாவரின்மீதான கரிசனமாக. பிறகொரு நாள்வரும்பிறந்த நாளில்பிரித்து எடுத்துக்கொள்ளுங்களெனஐம்பது ரூபாய் கொடுத்தேன்ஆதுரச் சிரிப்பில்.‘டேய்…ஆளுக்கு இருபத்தஞ்சிடா’ […]

வலி வாங்குதல்

This entry is part 2 of 3 in the series 1 செப்டம்பர் 2024

வளவ. துரையன் நேற்று அவள் பேசியஒரு வார்த்தைதான்பிடரி பிடித்து என்னைஉந்தித்ள்ளுகிறது.அழைக்காதவள் அழைப்பதுஇந்த முடவனுக்குக்கொம்புத்தேன்.என்னை உற்று உற்றுப்பார்ப்பவர்க்கு என் அவசரம்நிச்சயம் புரியாது.ஏனென்று யாரும்கேட்கவும் முடியாது.காலச்சக்கரம் மிகமெதுவாகச் சுழல்வதுபோலக்கனத்த என் மனத்துக்குத்தோன்றுவது உண்மையா?அவளிடம்போய்சேர்ந்துஅன்புமொழி பேசிப்பிரியும்போதுவலி வாங்கவேண்டுமேஅதற்காகத்தான்போய்க்கொண்டிருக்கிறேன்

நீதி வழுவா நெறி முறையில்.

This entry is part 1 of 3 in the series 1 செப்டம்பர் 2024

ரவி அல்லது பேச்சற்ற பின்னிரவு நேரத்தில்விழுங்கியஉணவு கவலத்திற்குஅம்மாவின் கேவல்தெரியாது. சிருங்காரித்துசேர்ந்தமர்ந்துசெல்லும்வாகனத்தின்டமா டமாவின்கரும்புகையோடானமல்லிகை வாசனைவியக்க வைப்பவர்களுக்குஅம்மாவின்விசும்பல்தெரியாது. பிறிதொரு சமயம்மூன்றாம் வகுப்பில்சாயலொத்த ஒருவன்இருக்கிறானென்றவியப்பில்சொன்னதற்குஅம்மாஅழுததுஅப்பொழுதுஅதன் காரணம்எனக்குத் தெரியாது. ஆள் காட்டி விரலுக்குஅசைந்தாடும்கூட்டத்திற்குஅறக்கூற்றானஅப்பாநீதியாகஎனக்குள்நின்றிருந்ததைபொட்டழிக்காமல்புறப்பட்ட அம்மாபொசுக்கிவிட்டுபோனது அவருக்கே தெரியாது. நடு நிசிகனவெனநான்நினைத்தஒரு கேவல்…ஒரு அறை…ஒரு கெஞ்சலின்…பொருட்டாகசிறாரில் தொடங்கிவிடுதி மாறிவிடுதியாகவேலையெனவெகு தூரம்வந்தவனிடம்அக்காஅழுதுகொண்டேகெஞ்சினாள்அப்பாவைகடைசியாககாணொளியிலாவதுபாருடாகல் நெஞ்சக்காரவென்று. காரணமறியாமலையேபோகும்அப்பாவுக்கும்கடுஞ்சினமானவீட்டாருக்கும்அம்மாவின்சாயலொத்தஎன் மாற்றம்அறியாததுதான். -ரவி அல்லது.

மழை மேகக்கவிதை

This entry is part 7 of 7 in the series 25 ஆகஸ்ட் 2024

ஜெயானந்தன்  உடைந்து போன மேகங்களை பார்த்து, பார்த்து பூரித்தது பூமி. இறுகிப்போன மனங்களில் கூட  ஈரம் சுரந்து ராகம் பாடின. பூமியிலே விழுந்த அமிர்த மழை காட்டாறாய் கவிதை பாடி,  ஆடிக்கு போட்ட விதை  அறுவடைக்கு ஆடின. ஆதிலெட்சுமி கல்யாணத்துக்கு மாப்பிள்ளை வீடு வந்தாச்சு.  கோடீஸ்வரன் கோவிலுக்கு  பூசைகள் போட கிளம்பியாச்சு  தவிலுக்கும்,நாதஸ்வரங்களுக்கும் தூசிதட்டினார் வளையப்பட்டி.  ஆடு மேய்க்கும் அன்னத்துக்கும்  ஷீட்டி பாவாடை தச்சாச்சு.  கரந்தை மூனிஸ்வரனுக்கு படையல் போட்டாள் அன்னக்கிளி.! ஆறு குளம் நிரம்பியாச்சு அயிரை […]

வௌவால் வந்துவிடும்

This entry is part 5 of 7 in the series 25 ஆகஸ்ட் 2024

வளவ. துரையன் இந்தக் குளிர்காற்றுஇன்று வீசிய வெப்பத்திற்குஇதமாகத்தான் இருக்கிறது.இன்னும் கொஞ்சநேரம்சென்றால் இரவும் குளிரும்இன்பமும் திகட்டுமன்றோ?உச்சந்தலையில் உறைக்கும்வெப்பத்தின் சுவடுகள்உள்ளங்கால் வரைஊடுருவிப் பார்க்கின்ற்ன.இதுவே பழகிவிடும்போலிருக்கிறது.துன்பத்திலும் இன்பமா?பகல்முழுதும்எல்லாச் சாலைகளும்பாலையாகித்தலைவனைப்பிரிந்ததலைவியாகத் தவிக்கின்றன.மாலையில் கூட வரும்மஞ்சள் வெளிச்சமும்அச்சமூட்டுகிறது.இன்னும் சற்று நேரத்தில்வௌவாலும் ஆந்தையும்வட்டமிட வந்துவிடும்.

ஆய்ச்சியர் குரவை – பாகம் ஒன்று

This entry is part 3 of 7 in the series 25 ஆகஸ்ட் 2024

நா. வெங்கடேசன்  [ஶ்ரீம.பா.10.29.1]ஶ்ரீ ஶுகர் கூறுகிறார்:குதிர் கால இரவில் பூத்துக் குலுங்கும் மல்லிகைச் சரங்களைமுகில்வண்ணர் கண்ணுற்று காதல் வயப்பட்டு,திருவிளையாடல் புரிய திருவுளம் கொண்டார்தன் யோகமாயையினாலே![ஶ்ரீம.பா.10.29.2]அச்சமயம், கீழ்வானம் ஶிவக்கஅழகுற்ற தணொளிக்கரங்கள்தனைப் பரப்பிவெய்யக் கதிரோன் வெயிலில் வாடியவிரஜ மக்கள் தாபம் தீர திங்களுதித்தனன்.அஃது, நீண்டு வெளியூர் ஏகித் திரும்பும்மணாளன் தன் அன்பு மனையாளின்ஆசை முகந்தனில்கப்பிய காதலுடன்அப்பிய குங்குமப் பூக்குழம்புபூச்சு போலாச்சே![ஶ்ரீம.பா.10.29.3]குமுதமலர்ந்து பூரணகலை ஒளிசிந்தகுமுதவல்லி திருமுகப்பொலிவாய் சீருடன் புதியகுங்குமப்பூ ஶிவப்பில் சந்திரனவன்இன்னொளியால் வனம் முழுதும் ஶிவந்து கண்ட கோவிந்தன் குழலூதினாரே!கோகுலத்து கோபியர்கள் […]

அழிவுகள்

This entry is part 2 of 7 in the series 25 ஆகஸ்ட் 2024

அமீதம்மாள் வெட்டுக்கிளிக் கூட்டம்சிட்டுக்குருவியைத்தின்றுவிட்டனநெகிழி ஆப்பிள்கள்அசல் ஆப்பிளைஅழித்துவிட்டதுகற்பூரத்தில்கருவாட்டின் வாசம்பாலையும் இரத்தத்தையும்மென்பொருள்செய்கிறதுசெயற்கை நுண்ணறிவுநெய்த ஆடைநிர்வானம் மூடவில்லைபுணர்தலின்றிபிள்ளை குட்டிகள்ஊடகங்களில்பொய்களுக்கேபூமாலைகடல்களுக்குமேய்ச்சல் நிலமாய்பூமிமண்ணை வெல்லமனிதக் கொலைகள்விவசாய நிலங்களில்வெடிகுண்டு விதைகள்பற்றி எரிகிறதுமொத்தக்காடும்உதிக்கிறது சாம்பலில்புதிய காடுஅமீதாம்மாள்