எனக்கில்லை மத்திய சிறைக்குள்ளே நுழைவதென்றாலே மனத்தில் ஓர் அச்சம்தான். மாறாத ஒரு நடுக்கம்தான். நான்கைந்து தடுப்பு வாசல்களிலும் நல்லமுறைச் சோதனைகள். கோரிக்கைகளை வென்றெடுக்க ஆசிரியர் போராட்டத்தில் அடியேனும் கலந்துகொண்டு அங்கிருந்த நாள்கள் அசைபோட வந்தன. இப்பொழுதும் எதுவும் மாறவில்லை. பார்வையாளர் சந்திக்குமிடம் அதிகாரிகளின் அலுவலகங்கள் மிடுக்கான காவலர்கள் வானளாவிய சுற்றுச் […]
அப்போதுதான் வந்தமர்ந்த புதுப்பறவையை பார்த்தேன். இணைக் காண சோகம் பாடும் தேடலில் கண்டேன். எங்கிருந்தோ வந்த வண்ணத்துப்பூச்சி பறவையின் முகத்தில் அமர்ந்து சென்றது. அது கொடுத்த மகரந்த யாழின் பாடலில் பல்லாங்குழி வாசித்தது புதிய பறவை. தேடி நிதம் சோறு தின்னும் எறும்பின் உரசலில் ஒய்யாரமாக ஆடியது பறவை. கூடு விட்டு, கிளை வந்த காக்கையாரும் ஒரு பிடி அமாவாசை பருக்கைப்போட்டது. கண்ணீரோடு தின்ற புதிய பறவை தன் பாட்டியை நினைத்து கண்ணீர் விட்டது. வந்தமர்ந்த காகம் […]
வளவ. துரையன் வீடு முழுவதும் உன்பெருஞ்சினத்தைஇறைத்து வைத்திருக்கிறாய்அதன் வெப்பம்வீதியெலாம் கனக்கிறதுஎப்பொழுது அதுஅணையுமென்று சிலபுறாக்கள் காத்திருக்கின்றனவிதையே இல்லாமல்பெரிய மரமாக வந்துநிற்கும் மாயம்உன்னிடம் உள்ளதுஎந்த அறைக்குள்நுழைந்தாலும் உன்வெப்ப வாசனைதான்நாசியைக் கருக்குகிறதுஅணைப்பதற்குஅறுசுவை நீர் தேடிஅலைவதே என்வாழ்வின் பெரும்பயணம்எந்த எரிமலையும்தணிந்துதான் தீரவேண்டும்சாம்பல் எப்போது வரும்?
ரவி அல்லது முக்கோணத்தில்முளைத்திருக்கும்கொம்பான வளைவுகளையும்.சதுரத்தில்நெளிந்திருக்கும்பின்னல்கோலங்களையும் பார்க்கும்பொழுதெல்லாம்அம்மாவின்நினைவு வரும்.அவரைப் போன்றஒருவர்இங்கிருப்பதுசற்றேஆறுதலாகத்தான்இருக்கும்.கடக்கும் கணம்நேசத்தில்ஏக்கமாக மனம் எட்டிப்பார்க்கும்.கவனம் பெறாதமாக்கோலத்தைப்போலகண்டுக்கொள்ளப்படாமல்இங்கு இவர்கள்இருப்பார்களோ என்றகவலையோடுகடப்பதுஒவ்வொரு முறையும்நடந்தேறும்இல்லாமையின்இன்னலின்நெருடலாகஎங்கேயும்எப்பொழுதும். -ரவி அல்லது.ravialladhu@gmail.com
சசிகலா விஸ்வநாதன் பதினெட்டு வயது இளந்தாரி பையன் பல வண்ணங்கள் தெறித்து,பழசான ஆங்காங்கே நைந்து போன கால்சராய்; என்றோ மஞ்சள் வண்ணத்தில் இருந்து இன்று பல வண்ண தெறிப்புகளின் கோலம் வண்ணக் கலவையில் அவசரமாய் முக்கியெடுத்து பிழிந்தும், பிழியாமலும் உலர்த்தினாற் போல், மேற்சட்டை அவன் மார்பு கூட்டை மறைக்க;சட்டையின் நீண்டு தொங்கும் பாகம் கையைத் துடைக்க அவன் மேலிழுக்க ஒட்டிய வயிற்றின் வறுமை காட்டியது. சுவரில் பல்லி போல் ஒட்டிக்கொண்டு, பூரான் போல் உரு மாறி கொள்ளையன் […]
எங்கோ தலைசாய்த்து பார்க்கின்றது சிட்டுக்குருவி. துணையை தேடுகின்ற காலத்தில் வேதனையை முழுங்கிவிடுகின்றது. ஒற்றைக்குருவியாய் சுள்ளிகள் பொறுக்கி கூடும் கட்ட உடல் வேதனை. மனம் இன்னும் துணை வராமல் காத்திருக்க. பக்கத்து கூட்டில் கொஞ்சி குலாவி மகிழ்ந்து உயிரோடு உயிர் கலந்து சில்லிட்டுப்பறந்தன ஜோடிக்குருவிகள். சிட்டுக்குருவியின் ஏக்கத்தில் என் அக்கா தடவிய ஜன்னல் கம்பிகள் தேய்ந்தே போயின பல வருடங்கள் துணைக்காக காத்திருப்பு வாழ்வின் பெரும் சோகம். ஜாதகக்கட்டில் பல்லாங்குழி விளையாடினார் புரோகிதர் சிகாமணி. சர்ப்ப தோஷம் செவ்வாய் […]
ஜெயானந்தன் அந்த நவீன பாத்திரக்கடையில் நுழைந்து, தேடித்தேடி பாத்திரங்களை ஆராயும் படிகளை தாண்டிவிட்டேன். எல்லா நவீன பாத்திரங்களும் அதனதன் தன்மைகளை கூற. ஏனோ எனக்கு என் பழையப்பாத்திரங்களே போதும்போல்தான் தோன்றியது. புதுசோ, பழசோ கையில் உள்ளதுதானே வயிற்றை நிரம்பும். ஜெகதாம்மாளுக்கு இது தெரியாதா, எனக்கு தெரியாது. அவளுக்கு நவீன சட்டி வேண்டும் எனக்கோ பழைய, மண்பாண்டம் போதும். எப்படியும் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு தோண்டப்போகும் அகழ்வராய்ச்சியில் கிடைக்கப்போவது சட்டியும், பானையும் தானே. தேடித்தேடி அலையும் உடலும் […]
ஜெயானந்தன் ஒரு போதி மரத்தின் கீழ் நான்கு சந்நியாசிகள் . ஒருவர் தியானம். அடுத்தவர் தூக்கம். மூன்றாமவர் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டருந்தார் . நான்கமவர் மரத்திற்கு தண்ணீர் விட்டார். வரும்போகும் சம்சாரிகள் தியான சந்நியாசி காலில் மட்டும் விழுந்து எழுந்துச்சென்றனர். மற்ற மூன்று சந்நியாசிகளும் அவரவர் பணிகளை அவரவர் செய்துக்கொண்டிருந்தனர். -ஜெயானந்தன்.
ரவி அல்லது தேக்க முடியாதென தெரிந்து பார்த்துக் கொண்டிருக்கின்றேன் எப்பொழுதும். மொண்டு குடித்த நீங்கள் அவரவர் விரும்பிய பானத்தையொத்திருப்பதாக சொல்கிறீர்கள் எப்பொழுதும். பூரிப்பில் லயித்து அப்படியே அதுவாகவே இருக்கின்றேன் துலக்கிய அன்பின் பிரவாகமாகமெடுத்தோட யாவையும் நேசித்து எப்பொழுதும். *** -ரவி அல்லது. ravialladhu@gmail.com
ரவி அல்லது வரப்பைத் தலையணையாக்கி வானத்தை உள் நோக்கிக் கிடக்கும் பொழுது வருடுகின்ற கொப்பின் இலைகள் பறக்க வைக்கிறது பாரிய சுகத்தில். தேங்கி இருந்த பனிச் சொட்டொன்று சிரமப்பட்டு பயணித்து சிரசுக்குள் புகுந்து சிந்தை கலைத்து சிறையில் தள்ளியது பூமிக்கு அழைத்து. *** –ரவி அல்லது. ravialladhu@gmail.com