தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கனவுகள் மொட்டைப் பாறையில் காய்ந்து கொண்டிருக்கின்றன

வசந்ததீபன் ____________________________________________ காப்பிப் பூக்கள் பூத்திருக்கின்றன.. ஒரே கசப்பு மணமாய் காற்றில். முடிவெட்டும் நிலையத்தை மூடிவிட்டு முத்துக் கருப்பன் வறண்டு கிடக்கும் ஆற்றின் நாறும் கஜகெடங்கில் மீன்பிடிக்கிறான். காச நோயில் அவதியுறும் கணவனையும் விபரமறியா…

மழை புராணம்: 26 – இரும்பு வாழ்வு

இரும்பு வாழ்வு************************* அதிக அழுத்தமின்றிவழி நடத்திக் கிடப்பதுவும்வலி மீறி உணர்வதுவும் செய்குது பார்இரவை நனைத்த மழைவிடியற்காலைக் காற்றில் மிச்ச குளிர்சூரியச் சூடு பட்டு காயும் காற்றுசற்று நேரத்தில் கவ்வி இழுபடும்மண்ணில் மாந்தர்க்குஉணர்ச்சியற்ற இரும்புவாழ்வு.- பா.சத்தியமோகன்

மௌனம் பேசும்

கடிகாரமின்றி கதவு தாண்டியதில்லை அன்றும் அப்படித்தான் காலையில் ஒரு திருமணம் பிறகு ஒரு நூல் அறிமுகம் மாலையில் சந்திப்பு இரவில் ஒரு விருந்து எல்லாம் முடித்து  வீடு வந்தேன்  கடிகாரம் பார்த்தேன் அட! அதுவே…

மழை புராணம்: 25

காலடிவிஷம் இந்த இடம் இன்னும்கொஞ்சநேரம் அமைதியுடனிருக்கும்ஆம்இரவை நனைத்து காற்றைத் தடவிகுருடனாய் நடந்த நேற்றிரவு மழையின்மிக விசித்திரமுள்ள மண் கையெழுத்தைமணல் வரிகளை எவரும்கலைக்க வராத கால்களால்இப்பிரதேசம் இன்னும் மெளனம் சூழ்ந்துள்ளதுஅதோ பேச்சு சப்தம் கேட்கிறதுகால் புதைய…

அழகுமீனாட்சியும் அரசனும்

   லாவண்யா சத்யநாதன்  ஒற்றனாயிருந்திருந்தால்  நெற்குதிரில் பொன் நிரப்பியிருக்கலாம்..  உலகைச் சுற்றி வந்திருக்கலாம்.  உல்லாசங்களில் மகிழ்ந்திருக்கலாம்.  அரசவாழ்க்கை வாழ்ந்திருக்கலாம்.  கால்கட்டென்ற பெரியோர் சொல்பொருள்  விளங்காமல் வாய்ப்புகளை தவறவிட்டோமென்று  விரக்தியிலெண்ணாதவன் உலகிலில்லை..  குடும்பத் தலைவன் பதவி…

ஒரு ஏவுகணையின் புலம்பல்

பத்மநாபபுரம் அரவிந்தன் நானொரு ஏவுகணை எனக்கென்று மதமில்லை நாடில்லை மொழியில்லை சதையுடைந்து தெறிக்கின்ற உதிரத்தின் மணம் கூட எனக்கேதும் தெரிவதில்லை நீ நினைக்கும் இடத்திற்கு என்னை இயக்கி பெருவானில் மிகுவேகமெடுத்து நீ தகர்க்க நினைத்த உயிர்களோடு இடத்தினையும் ஒருமித்து அழித்து என்னையும் அழிக்கும் நான் ஏனென்றோ எதற்காக செய்தேனென்றோ ஒன்றுமே புரியாமல் என்னுயிர் அழிந்து கிடக்கின்றேன்.. என்னை எத்தனை பத்திரமாய் இத்தனைநாள் காத்து வந்தாய் நான் வெடித்து சிதறுகையில் பச்சிளம் குருந்துகளும் துகள்களாய் சிதறி அழிகையில்…

செம்போத்து

                        ---வளவ. துரையன்                                               எதிர்வீட்டுப் பலாமரத்தை எதிர்நோக்கி இருந்தேன் ஆயுத எழுத்து போல் அதில் மூன்று காய்கள் எங்கிருந்தோ வந்த ஒரு செம்போத்து ஒரு காயில் உட்கார்ந்தது அத்தி பூத்தாற்போல கோடையின் பெருமழையாய் செம்போத்து…

மழை புராணம் : 24  : வெறுப்பின் குடை

பா.சத்தியமோகன் *********************************************************************** எத்தனை எத்தனை கோடி உயரத்திலிருந்துவானிலிருந்து அத்தனை விரைவாய்மழைக்கட்டி கீழே விழுவதுஒரு கருப்புத் தார்ச்சாலையில் வீணே மோதிசில்லௌ சில்லாக உடையத்தானாஎனும் துக்கத்தில் பெருங்குரலாய்க் கேட்டதுதார்ச்சாலையெங்கும் சிலீர் சிலீர் உடைப்புகளின் ஒலிகள்கேரம் போர்டில்  ஸ்டிரைக்கர்…

உருவமில்லாச் சுவர்

.                                        ----வளவ. துரையன் உனக்கும் எனக்குமிடையில் உருவமில்லாத ஒரு சுவர் விழுந்துவிட்டது, நாம் எய்யும் சொல்லன்புகள் நம்மைத் தாக்காமல் அதன்மீது விழுகின்றன. காயப்பட்டுக் காயப்பட்டு அது தழும்பேறி நிற்கிறது. ஆனாலும் அது…

மழை புராணம் – 23

நேற்றிரவு தேங்கிய மழைக்குட்டையில்மூக்கு நனைக்கும் காகம் குல்மொஹர் மரத் தண்டருகேகுளம்பு பதித்து நிற்கும் வெள்ளைமாடு சைக்கிள் மிதிக்கும் உடலில்வியர்வை புழுக்கும் சூரியன் தடுப்புக் கம்பி குறுக்கில்வாலசைக்கும் தொண்டை சிவந்த கரும் குருவி எவர் இட்டார்…