தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 6 ஜூன் 2026

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

மழை புராணம் – 32 -யோசித்தால் வாழும் மழை

************************************ வாழ்வுமழையில் நனைகிறது அழகாகிறதுவெய்யிலில் காய்கிறது மீண்டும் அழகாகிறதுவயதாகி நரைத்த பூமிப் பந்தைபுதுப்பிக்கப்பட்ட கண்ணால் பார்மரத்தின் கீழ்சிவப்புமலர் வீழ்ந்துபச்சை வயலை பனித்தூள் கவ்விவெளிச்ச ஆறு பாய்ந்துவார்த்தை தாண்டிக் கூறுகிறேன் வார்த்தையால்இவ்வுலகுகடவுளின் கனவு.   - பா.சத்தியமோகன்

மழை புராணம் : 31

***************************** வாழ்வது அவசியம்************************** “உயிர்த்திரு உயிர்த்திரு” என்கிறதுஎன் மேல் மோதும் காற்று “உரமுள்ளது உரமுள்ளது” இந்த விதைஎன்கிறது உள்ளே ஒரு எண்ணம் “உனது நீதி வெல்லும்” என்றுமழையிலிருந்து செய்தி வந்துஒரு துளிச் சொட்டென மீண்டு கொள்ளத்தான்…

அட!

தொட்டால்தான் புரிகிறது அந்த ரோஜா செடியில் பறித்ததா செயற்கையா என்று *** பெயரே முகவரியான தலைவர்களை முகவரியற்றோர் வென்றனர் *** பரம்பரை பரம்பரையாய்ய் கட்டிக்காத்த வீட்டை பேரர்கள் விற்றுவிட்டனர் *** சுற்றியுள்ளதைத் தெளிவாய்க் காண…

தவம்

வசந்ததீபன்   _______ தனிமை சுரந்தொழுகும் நடுநிசியில் மெளனம் வீற்றிருக்கிறது த்யானத்தில். கடிகார ராட்டினத்தின் காலச் சுழலில் தொங்கியபடி பென்டுலமாக இடமும் வலமுமாக நில்லாது அலைவுறுகிறேன். மணித்துளிகள் அருந்திய இரவின் இறப்பானது மெலிதான ஆற்றலாக…

கவிதை

ஆலமரம்  காத்திருப்பதில்லை  எந்த காவி வேட்டிக்கும்.  எவனோ என்றோ  வருவான், போவான்.  எறும்புகள் ஊறும்  நிரந்தரமாக.  கன்னிமூலை கணபதி தான்  காத்திருப்பார் என  ஊர் கூடி  தேர் இழுத்தாலும்  கணபதிக்கு கிடைக்கப்போவது  மண்ணும், காற்றும்…

வானிலை அறிக்கை

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)புயல் மையங்கொண்டிருக்கிறது.புயலின் மையத்திலிருப்பவர்களின்பீதியைஅயல்மண்ணிலிருப்பவர்களால் உணர முடியாது.கோப்புக்காட்சிகளிலிருந்து புயலின் பேரழிவுப் படங்களை‘லைவ்’வாகக் காண்பித்துக்கொண்டிருக்கும் ஊடகங்களுக்குபுயல் ஒரு செய்தி மட்டுமே.கரையைக் கடப்பதற்கு முன்னும் கடந்த பின்னும்இன்னுமின்னுமாய் சேதங்களைக்கண்முன்னம் காண்பது ஒரு வலி யெனில்காற்றில் முறிந்துவிழுந்த மரங்களின்…

மழைபுராணம் 30

   மழையம்மா மழையம்மா                                  -- பா.சத்தியமோகன் மழையம்மா! உனக்குப் படையல் எடுக்கிறேன்'கொஞ்சம்…

கவிதை

முல்லைஅமுதன் கூட்டை குரோதத்துடன் அகற்றியிருந்தோம்..ஆனாலும் குயிலின் ஈனக்குரல்இன்னும் சிதைந்த கூட்டைச் சுற்றி அலைகிறது. எனக்காக அவன் சாட்சியாய்ப் போனவனைஇப்படித்தான்சுமந்தேன்.அம்மா சொன்னாள்..மௌனமாக இரு..எதையும் எழுதாதே..கோபங்கொள்ளாதே.. வில்லைகளை இப்படித்தான் அழுத்தவேண்டும் என தோழனும் சொன்னான்..குறி பிசகியது..தோழர்கள் சுமக்கிறார்கள்.இடுகாட்டின் கனதி அனைவரின் கண்ணீரில் தெரிந்தது..இப்போது…

‘ரிஷி’ [லதா ராமகிருஷ்ணன்]யின் கவிதைகள்

ரிஷி’ 1. மண்ணோடு மண்ணாய்….. ஒவ்வொரு உறவிலும் ஒருவருக்கொருவர் சாயமடித்துக்கொண்டே யிருக்கிறார்கள் _ இரண்டு வண்ணங்களின் சேர்க்கையில் தாம் நினைக்கும் மூன்றாவது நிறம் அத்தனை துல்லியமாக வந்துவிடும் என்ற நினைப்பில்.. பெரும்பாலும் மண்ணே விழுந்தபோதும் ’அவர்களிருவரின் உறவில் விழுந்தது அழுக்குப் பிடித்த உலர்மண் - எங்கள் விஷயத்தில் விழுந்தது ஈரமண் ’ என்று பெருமைபீற்றிக்கொள்கிறார்கள். விழுந்த மண் விழுந்தபடியிருக்க விளையாட்டாக ஒருவர் மீதொருவர் அவரவர் கையகப்பட்ட மண்ணை எறிகிறார்கள். இவர் எறியும் மண் அவர் சட்டையை அழுக்காக்கிவிட அவர் எறிவது இவர் கண்ணுக்குள் விழுந்துவிட நெருங்கியிருந்தவர்கள் தொலைவாகி வேகவேகமாய் வீசத் தொடங்குகிறார்கள்…