ப.மதியழகன் கவிதைகள்

This entry is part 21 of 46 in the series 26 ஜூன் 2011

மணல் வீடு   வானக்கூரையை தொட்டுக் கொண்டு நிற்கும் கலங்கரை விளக்கம் படகுகளைத் தாலாட்டும் கடலலைகள் கடலில் நீந்தும் மீன்கள் வலையில் அகப்பட்டால் பாத்திரத்தில் பதார்த்தமாய் கிடக்கும் கடலின் ஆழத்தில் பனித்துளி முத்தாக உருமாறும் கடலலைகள் எழுப்பும் ஓசை ஆர்மோனியத்திலிருந்து வெளிவரும் சுதியைப் போலிருக்கும் பால்யத்தில் கிளிஞ்சல்கள் பொறுக்கிய நாம் தான் கடற்கரையிலும் கைபேசியில் உரையாடுகிறோம் கட்டிய மணல் வீட்டை அடித்துச் சென்ற கடலலையைப் பார்த்து குதூகலித்தனர் குழந்தைகள்.             […]

காலம் – பொன்

This entry is part 20 of 46 in the series 26 ஜூன் 2011

பொன்னை துரத்தும் பந்தயம் காலம்-நான்-பொன் ஒருவர் பின் ஒருவர் துரத்தியபடி . ஓடினால் அள்ள முடியாதென குதிரை மேல் சவாரி . ஏறியதும் தெரிந்தது – இது பொன் இடும் குதிரை மட்டுமல்ல பொன் தேடும் குதிரையும் கூட . தலை தெரிக்க ஓடுகிறது அது பாய்கிற பாய்ச்சலில் கழுத்திலிருந்த பிடி நழுவி சவாரி வாலை பிடித்தபடி அது போகிற இடமெல்லாம் … கழுத்தில், குதிரை சலங்கைகளுடன் ! மன்னிக்கவும் – மென்பொருள் தொழிலக அடையாள அட்டையுடன். […]

பிறந்த மண்

This entry is part 19 of 46 in the series 26 ஜூன் 2011

மணல் குன்றில் விளையாடுகின்றன குழந்தைகள். மலை ஏற்ற வீரர்களைப்போல் அதன் உச்சியில் ஏற நெகிழ்ந்து மண் சரிய சிரிக்கின்றன . மணலில் மலை செய்து அதில் குகைகளைக்குடைந்து கூழாங்கற்களை வாசலுக்குப்பதிக்கின்றன மணலில் சித்திரங்களை,பெயர்களை வரைந்து அழிக்கின்றன. மணலில் செடியை நட்டு நீர் வார்க்கின்றன. அதட்டும் அழை குரல் அவசரத்தில் எழும் குழந்தைகளின் மடியிலிருந்து கொட்டங்குச்சி ஈரமண் இட்லிகள் வீழந்து உடைகின்றன. குழந்தைகளின் கால்களை மணல் அலைகள் தழுவிக்கொள்கின்றன. வீடு மீளும் குழந்தைகளின் உடலில் பிரிய மறுத்த மணற்த் […]

வினா ….

This entry is part 15 of 46 in the series 26 ஜூன் 2011

இருளை உள்ளடக்கியே பரவிக்கொண்டிருக்கின்றன வெளிச்சக் கீற்றுக்கள் எங்கும் துளை போட இயலாமல் காற்றுவெளியில் இறுகி கோளங்களாய் உருண்டு வீசப்படாத எரிபந்துகளாய் அந்தக் கோள்கள்… வழி எனும் விடை தெரிந்தோ தெரியாமலோ திசை எங்கிலும் விரவிக் கொண்டே தனித்தொரு பாதையமைத்து எதிலும் படாமல் விலகியே செல்லும் என்றும் விடை தெரிவதே இல்லை சில கேள்விகளுக்கு மட்டும் ஷம்மி முத்துவேல்

நானுமொரு கருவண்டாகி சுழன்றேன்.

This entry is part 12 of 46 in the series 26 ஜூன் 2011

தலையால் நடந்து கொண்டிருக்கும் ஒரு வினோத பட்சியின் பின்னே துரத்தப்பட்டு அலைக்கழிக்கப் படுகிறேன் கைகால் முளைத்த மரங்கள் ரத்தம் சிதறும் நரம்புகளின் வேதனையை பூமியில் வரைந்து செல்கிறது எனக்கென தென்பட்ட திசையெங்கும் வருடிப் புணர்ந்த கனவின் துளிகள் ஒன்றின் மேல் மற்றொன்றாகி சமாதிகளில் புதைக்கப்பட்ட உடல்களின் பெருங்கூட்டம் எங்கும் அலையடித்து கிளம்பும் பரவெளியில் மூங்கில் காடெங்கும் சாய்ந்தலைந்து அறுபட்ட காதுகள் தொங்க விழிகளற்ற கொடிமர வேலிகள் உமிழ்நீர் துப்பல் சிதறல்களில் துருப்பிடித்து கருகி சாம்பலாகின. பேராறுதல் சொல்ல […]

புறமுகம்.

This entry is part 10 of 46 in the series 26 ஜூன் 2011

என்றுமே தோன்றிடாத பல புன்னகையை இன்று இக்கணம் சுமக்கிறேன் . இது எவ்வளவு மிகைமை உடையவையாக இருந்தும் இன்னுமும் சிரிக்கப்படுகிறது. மீண்டுமொரு தடவை இந்த நிகழ்வு வராமல் போகவும் கூடும் அதன் பொருட்டே ஏற்று கொள்கிறது புறமுகம். புன்னகையின் சிதறல் வெளியே செல்லாமல் இருக்குமாறு கவனமாக்குகிறது. அவையும் மீறிய சிதறிய துளி வெள்ளமென பாய்கிறது எந்நிலை உடையவர்கள் பிரதியை போல பொய்மை கொண்டு மேலும் மேலும் பொழிவை கூட்டுகின்றனர். -வளத்தூர் .தி.ராஜேஷ் .

சமன் விதி

This entry is part 9 of 46 in the series 26 ஜூன் 2011

பிடிகள் தேடி கைகளும் ஆதாரங்கள் தேடி கால்களும் அலையும். உயிர்வளிக்காய் பிதற்றும் நுரையீரல்கள்… வெள்ளி மறைந்து நாளை குறித்த ஐயங்கள் முளைக்கையில் எங்கோ தூரத்தில் ஓர் ஊர் குருவி தனக்கான கூட்டை கட்டி முடித்திருக்கும். பெருவேதனைக்குப் பின்னே பிரசவித்த மகவு கண்டு வலி மறந்து புன்முறுவல் பூப்பாள் சில நொடிகளுக்கு முன் பிறந்த அன்னை. – வருணன்.

ஓர் இரவின் கீழ் சில நிலாக்கள்..

This entry is part 8 of 46 in the series 26 ஜூன் 2011

வானெங்கும் கருந்திரள்கள் நிறைத்திடும் இரவொன்றின் நேர்க்கோட்டில் அசையும் வளைவுகளென நெளிகின்றன இதயத்துடிப்புகள்.. நெற்றி வகிடின் இறுக்கத்தினில் செவ்வானம் ஒன்றை எழுதிடச் சொல்லி நிற்கையிலே அறைமுழுதும் வெளிர்மஞ்சள் ஒளியில் சிறகு விரிக்கின்றன வண்ணத்துப்பூச்சிகள் சில.. வானவில்லின் நீளத்தில் பேசி தீர்க்க ஆயிரம் இருப்பினும் ஒற்றை வெட்கம் சூடும் உன்னழகினை யாதென்று எழுதி வார்க்க? ஒவ்வொரு வார்த்தையையும் கோர்த்தெடுத்து உறக்கத்திற்கு பதில் உரைக்கிறேன் நான்.. நிலாக்களைச் சிதறடித்து விளக்குகளைத் தனிமையின் இருப்பில் விட்டு அருகருகே அமர்ந்திருக்கிறோம், இரு இணை விழிகளில் […]

காற்றும் நானும்

This entry is part 7 of 46 in the series 26 ஜூன் 2011

ஆழ்ந்த உறக்கத்தினிடையே அடித்த காற்றில் வெளியே பறந்த தெருத்தூசுகளோடு அடித்து கொண்டிருந்த சன்னல் கதவின் அகண்ட வெளிகளோடு தொலைந்து போயிற்று தூக்கமும். விழிகளை அடைத்து இருண்ட வெளியில் புரண்டு புரண்டு காற்றோடு மிதந்து போன தூக்கத்தை இமைகளின் முடிகளால் கட்டி இழுக்க எத்தனித்தேன்… என்னையே இழுக்கிற காற்றில் எதுவுமே நடக்கவில்லை. சுழலும் காற்று சூழ்ந்த இரவில் பற்பல பகற் கனவுகளோடு புரளும் நான்… குமரி எஸ். நீலகண்டன்

நிர்பந்தங்களின் தீப்பந்தங்களால்….

This entry is part 5 of 46 in the series 26 ஜூன் 2011

திரிபு வார்த்தைகளும் தத்துவார்த்த பிழைகளும் தின்மச் சொற்களும் தந்த ரணங்களை சுமந்து இடர் சூழ்ந்த இவ்வுலகில் பொருள் தேடி அலைகிறேன்…. துயரம் சொல்லொணாத் தவிப்புடன் உடல் நிறைக்க இறுகிப்போன சக்கையாய் மனம்…. நிர்பந்தங்களின் தீப்பந்தங்களால் தன்னந்தனியாய் தவிக்கும் அழுகையின் நிறம் மீளாத்துயருடன் பின் தொடரும் நிழலாய் நினைவுதிர்த்து போகின்றது……