ஊதா நிற யானை

This entry is part 33 of 46 in the series 26 ஜூன் 2011

சுத்தமாய் வெள்ளைத்தாள் சிதறிய கிரெயோன் கலர்கள் இரண்டு கோடுகள் ஒரு கோணல் வட்டம் நம்பிக்கையோடு யானைக்கும் தும்பிக்கையும் ஆயிற்று குழந்தைக்கோ கர்வம் ஊதா நிற யானையுடன் ஊர்ந்து போயிற்று. யானைக்கு ஊதாநிறமா? அதிருப்தியோடு கேட்டார் ஆசிரியை இரண்டு கால் யானை எங்குள்ளது அடித்துத் திருத்தினார் குழந்தையின் ஊதா யானை ஊனமுற்றுப்போக அதன் மனசின் மேலே தன் செருப்பு சப்திக்க நடந்து போனார் ஆசிரியை. சமீலா யூசுப் அலி மாவனல்லை இலங்கை

வாழ்தலை மறந்த கதை

This entry is part 32 of 46 in the series 26 ஜூன் 2011

அவளிடம் சொன்னேன் அடுப்படி தாண்டு .பருப்புக்கு வெங்காயம் தாளிப்பதை விட அனேக விஷயங்கள் இருக்கின்றன வா உன் சொந்தக்கால் கொண்டு பூமிப்பந்து சுற்றும் வித்தை சொல்லித் தருகிறேன் அவள் வந்தாள். சுமக்க முடியாத சங்கிலிகளையும் முடிவற்ற சந்தேகங்களையும் சுமந்து கொண்டு மிகுந்த பிரயாசையோடு அவள் சங்கிலிகளை ஒவ்வொன்றாய் களைந்தேன் சந்தேகங்கள் முடிவுறாது ஒடும் நதியை ஒத்தனவாய் நீண்டு நெடித்தலைந்தன. இனி என்ன களைப்போடு கேட்டாள். இனி நீ வாழத் துவங்கு வாழ்தல் என்றால் அயர்வோடு நோக்கினேன். அவள் […]

கவிஞனின் மனைவி

This entry is part 31 of 46 in the series 26 ஜூன் 2011

அபூர்வமான சொற்களைப் பின்னும் பொன்னிற சிலந்தி அவன் ஆறும் தேநீரை மறந்து இரவிரவாய் நூற்காடுகளுக்குள் மல்லாந்து கிடப்பான். திடும் மென அவள் தாகித்தெழும் நடுநிசி பொழுதுகளில் அவன் விரல்கள் தாளில் முளைத்துக்கிடப்பதைப் பார்த்தவாறே உறங்கிப்போவாள். அவன் எழுதும் எதையும் அவள் வாசித்ததில்லை அவனது விசாரங்களும் தனித்துவமான சிந்தனைகளும் அவளுக்குப் புரிந்ததேயில்லை. அதிகம் பேசுவது அவனை ஆத்திரமூட்டும். அவள் மொழி மறந்தவள் ஆயினள். கிராமத்துக்கிளி மொழிகள் மட்டுமே தெரிந்த அவள் அந்த நாலுசுவர் கூட்டுக்குள் அடங்கியிருந்தாள். சமைப்பதும்,துவைப்பதுமாய் அவள் […]

மேலதிகாரிகள்

This entry is part 28 of 46 in the series 26 ஜூன் 2011

உறங்கத் தாமதமாகும் ஒவ்வொரு இரவும் சுமந்து வருகிறது உழைப்பின் களைப்பை அலுவலகம் உறிஞ்சிச் சுவைத்த நேரத்தை பார்களில் அமர்ந்து பீராக உறிஞ்சியபடி அதிக வேலை பற்றியும் அதிகப்படியாயோ குறைந்தோ கிடைத்த போனஸ் பற்றியும் கடுகடுத்த மேலதிகாரியை கிண்டலடித்தபடியும் சக ஊழியனை ஜால்ராக்காரனாகவும் ஐஸ்துண்டங்கள் கரைய கரைய மனதைக் கரைத்தபடி வண்டியில் ஏறும்போது தூக்கமற்று முறைக்கும் மனைவி முகம் எதிர்கொள்ள கரைந்த கவலையெல்லாம் திரும்ப வயிற்றைக் கலக்கியபடி..

காகித முரண்

This entry is part 25 of 46 in the series 26 ஜூன் 2011

ஒரு மரம் விடவில்லை ஒரு சுவர் விடவில்லை ஊரெல்லாம் விழா பற்றி ”காகித” போஸ்டர்ஸ் முதல்வர் கலந்து கொள்கிறாராம் ஊரே விழாக்கோலம் பூண்டது சிறுவன் படித்துக்கொண்டிருந்தான் காகிதம் மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது விழாவின் பெயர் ஏதோ “மரம் நடுவிழாவாம்”. அ.லெட்சுமணன்.

சின்னப்பயல் கவிதைகள்

This entry is part 24 of 46 in the series 26 ஜூன் 2011

ஆள்காட்டி மழை ஜன்னல் கம்பிகளில் தொற்றிக்கொண்டிருந்த மழை நீரை ஆள்காட்டி விரல் கொண்டு ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை அழுத்தி வடித்து விட்டேன். மறு நாள் மழை வரவில்லை. ஆள்காட்டி விரல் காரணமாயிருக்குமோ ? அஞ்சறைப்பெட்டி அஞ்சறைப்பெட்டியில் அம்மா போட்டு வைத்த மீதக்காசில் சீரகத்தின் மணமும் கடுகின் வாசமும் வெந்தயத்தின் நெடியும் மஞ்சள்பொடியின் கமறலும் மிளகின் காரமுமாக அடித்த வாசம் இன்னும் என் மனதினுள் வட்டமடிக்கிறது அந்தக்காசில் வாங்கித்தின்ற மிட்டாயின் மணம் ஏனோ நினைவில் இல்லை. சின்னப்பயல் […]

காட்சியும் தரிசனமும்

This entry is part 22 of 46 in the series 26 ஜூன் 2011

பூகோள வரைபடங்கள் இல்லாமல் திசையை அவதானித்து தேசங்களைக் கடப்பதாய் பறந்தும் மிதந்தும் மின்னல் வேக இறக்கத்தில் ஒரு மீனைக் கொத்திச் செல்வதாய் வளாகங்களின் சாளர மேற்புறத்து வெயில் மறைப்புகளில் ஒடுங்கிப் பெருகுவதாய் மலரினுள் நுழைந்து தேனெடுத்து மரத்தைக் கொத்தி இரை தேடி ஜீவிப்பதாய் வணங்கப் படுவதாய் உண்ணப் படுவதாய் ஒரு வலையை விடவும் நுண்ணிய கூடு கட்டும் திறனாளியாய் இன்னும் பலவாய் அறியப்பட்ட பறவையின் நாள் முழுதுமான இயங்குதல் அனைத்தும் காணக் கிடைப்பதில்லை உதிர்ந்த சிறகுகளும் சிதறிய […]

ப.மதியழகன் கவிதைகள்

This entry is part 21 of 46 in the series 26 ஜூன் 2011

மணல் வீடு   வானக்கூரையை தொட்டுக் கொண்டு நிற்கும் கலங்கரை விளக்கம் படகுகளைத் தாலாட்டும் கடலலைகள் கடலில் நீந்தும் மீன்கள் வலையில் அகப்பட்டால் பாத்திரத்தில் பதார்த்தமாய் கிடக்கும் கடலின் ஆழத்தில் பனித்துளி முத்தாக உருமாறும் கடலலைகள் எழுப்பும் ஓசை ஆர்மோனியத்திலிருந்து வெளிவரும் சுதியைப் போலிருக்கும் பால்யத்தில் கிளிஞ்சல்கள் பொறுக்கிய நாம் தான் கடற்கரையிலும் கைபேசியில் உரையாடுகிறோம் கட்டிய மணல் வீட்டை அடித்துச் சென்ற கடலலையைப் பார்த்து குதூகலித்தனர் குழந்தைகள்.             […]

காலம் – பொன்

This entry is part 20 of 46 in the series 26 ஜூன் 2011

பொன்னை துரத்தும் பந்தயம் காலம்-நான்-பொன் ஒருவர் பின் ஒருவர் துரத்தியபடி . ஓடினால் அள்ள முடியாதென குதிரை மேல் சவாரி . ஏறியதும் தெரிந்தது – இது பொன் இடும் குதிரை மட்டுமல்ல பொன் தேடும் குதிரையும் கூட . தலை தெரிக்க ஓடுகிறது அது பாய்கிற பாய்ச்சலில் கழுத்திலிருந்த பிடி நழுவி சவாரி வாலை பிடித்தபடி அது போகிற இடமெல்லாம் … கழுத்தில், குதிரை சலங்கைகளுடன் ! மன்னிக்கவும் – மென்பொருள் தொழிலக அடையாள அட்டையுடன். […]

பிறந்த மண்

This entry is part 19 of 46 in the series 26 ஜூன் 2011

மணல் குன்றில் விளையாடுகின்றன குழந்தைகள். மலை ஏற்ற வீரர்களைப்போல் அதன் உச்சியில் ஏற நெகிழ்ந்து மண் சரிய சிரிக்கின்றன . மணலில் மலை செய்து அதில் குகைகளைக்குடைந்து கூழாங்கற்களை வாசலுக்குப்பதிக்கின்றன மணலில் சித்திரங்களை,பெயர்களை வரைந்து அழிக்கின்றன. மணலில் செடியை நட்டு நீர் வார்க்கின்றன. அதட்டும் அழை குரல் அவசரத்தில் எழும் குழந்தைகளின் மடியிலிருந்து கொட்டங்குச்சி ஈரமண் இட்லிகள் வீழந்து உடைகின்றன. குழந்தைகளின் கால்களை மணல் அலைகள் தழுவிக்கொள்கின்றன. வீடு மீளும் குழந்தைகளின் உடலில் பிரிய மறுத்த மணற்த் […]