மூன்றாமவர்

புத்தி செய்திகள் படிக்கிறது மனம் அங்கலாயிக்கிறது கேட்டபடி.. எனது வரவேற்பு அறையில். நான் இருவரையும் பார்த்தபடி, தேநீருக்கும் வழியில்லாத விருந்தாளி போல கண்கள் மூடினால் ஓய்கிறார்கள் திறந்தால் மறுபடியும் கூச்சல் ஏதொரு செய்தியுடன் ,விடாமல் !! தெரிந்தவர்களிடம் கேட்டேன்,சொன்னார்கள் - இருவரையும்…

ஒரு வர்க்கத்தின் நிதர்சன சூடுகள்

மேசைமீது ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களில் ஊர்ந்தேறிக் கொண்டிருந்தது வெயில் நுகருமொரு சொற்ப மரநிழல்.. நிழல் துப்பிய குளிருணர்வில் புத்தகங்கள் ஒன்றொன்றும் காந்தப்பிணைப்புடன் இறுக்கமடைய, கிழிசல்கள் வழி எழுத்துக்கள் சில வெப்பமொழியில் ஏதேதோ பிதற்றத் துவங்கின.. என் விரல் நீவிய புத்தகமொன்று…

பறவைகளை வரைந்து பார்த்த ஒரு கார்ட்டூன் சித்திரக்காரன்

நீந்திச் செல்லும் பறவையொன்று அகால வெளியின் எல்லைகளினூடே சிறிதும் களைப்பற்று காற்று எழுதிச் செல்லும் வரிகளைக் கேட்டு மிதந்து திரும்பவும் சிறகாகும் இதயம். விரல்கள் எழுதிய ஓவியம் திரைமீறும் எதிரில்வந்து பேசியது ஓவியப் பறவை நிஜம் எதுவென அறியாத கணங்களில் குழம்பித்தவித்த…

ஆட்டுவிக்கும் மனம்

மண்ணில்  மீண்டும் முளைக்க  புதைத்த பற்கள் விண்ணில் மிளிரும்  வின்மின்களாய்  ஒளிருது உன்னிடம் கதையாய்  சொன்ன என்மனம் மண்ணில் உன்னை புதைத்து விட்டு விண்ணில் தேட அறிவு  மறுக்குது இன்பங்கள்  கனமாகின்றன துன்பங்கள் எளிதாகின்றன ஏழு வயதில்  மறைந்த பெண்ணை இருபது வயதில்   வரைய வண்ணமில்லை தடைபட்ட கனவுகள் எப்படி தொடர்ந்திருக்கும் ஊகிக்க …

கொ.மா.கோ.இளங்கோ கவிதைகள்

திருந்த செய் பிழைகளெல்லாம் பழைய பித்தளை பாத்திர துளைகள் திருத்தங்கள் ளெனும் ஈயம் பார்த்து அடைத்தல் சிஷ்டம் முலாம் பூசி மறைத்தல் கஷ்டம்   அம்மா மழை கொட்டி மலை சொட்டும் அருவியாய் நிலம் தொட்டு கடலெட்டும் நதிகளாய் கடன் பட்டும்…

கடன் அன்பை வளர்க்கும்

‘வேறு எந்தக் கடனும் இப்போது இல்லை.’ புதுக் கடனுக்கு விண்ணப்பிக்க வந்த இடத்தில் வங்கி மேலாளர் கேட்கும் முன்னரே சொன்னான். முந்தைய கடன்களை காலத்தே அடைத்ததற்கான நற்சான்றிதழ்களை பெருமையுடன் முன் வைத்தான். சிணுங்கியது அலைபேசி ‘அப்பா எனக்கு நீ பத்து ரூவா தரணும்’ அறிவித்தாள் அன்பு மகள்.. முன்…

சிறுகவிதைகள்

நள்ளிரவில் கனவு வந்தது சிறு இடைவேளைக்குப்பிறகு மீண்டும் தொடருமென்றது. எப்படி நிகழந்தது என்று தெரியவில்லை. தெரிந்த பிறகும் நிகழந்தது அது. ஆடிய தாண்டவம் ஒய்ந்து பாதங்கள் சிவக்க,வலிக்க நடனத்திலிருந்து நடைக்கு மாறுகிறார் நட ராசர். ரவி உதயன்

சாபங்களைச் சுமப்பவன்

  நேர் பார்வைக்குக் குறுக்கீடென ஒரு வலிய திரை ஏமாற்றுபவனுக்கு இலகுவாயிற்று   பசப்பு வரிகளைக் கொண்ட பாடல்களை இசைத்தபோதும் வெறித்த பார்வையோடு தான் துயருறுவதாகச் சொன்ன போதும் பொய்யெனத் தோன்றவில்லை ஏமாறியவளுக்கு இருள் வனத்திலொரு ஒளியென அவனைக் கண்டாள்  …

தன் இயக்கங்களின் வரவேற்பு

இயற்றப்படும் இந்த பிரபஞ்ச நிகழ்வில் நீங்களும் ஒரு இயக்கம்  . இப்பொழுதே இதுவரையிலும் இல்லாத தன் விடுதலை உணர்வை தேடுவதை போல இதில் இருந்து விலகி ஓட ஆயுத்தமாகுகிறிர்கள். இதுவும் கூட அந்த இயக்கத்தின் சார்பானது என அறியாமலே அறியாமையில் மிதங்குகிறிர்கள். தற்சமயம்…

வினாடி இன்பம்

  மாநகர பஸ்ஸில் ஜன்னலோர பயணம் முன்னால் போனது இரண்டு சக்கர வாகனம் அம்மாவின் மடியில் மூன்று வயது பெண் குழந்தை சிக்னலில் நின்றது வாகனங்கள் குழந்தையை பார்த்து நாக்கை துருத்தினேன் குழந்தை திரும்பி நாக்கை துருத்தினாள் முகத்தை அஸ்ட கோணலாக்கி…