வரும் மனிதருக்கு வழி சொல்ல சிதற விட்டுச் செல்லும் நம்பிக்கை கற்களில் மூதாதையரின் பல்வேறு முகங்கள். பிரமாண்ட பிரமிட்டின் முனை சிதைந்து காலமா யுருண்டு தரைக்கு வரும் கல். அதை உற்று நோக்கும் ஆய்வின் கண்களில், மேலே சிதைந்த பகுதியில் பட்டுச் சிதறும் கதிரொளி. காலத்தை குத்தி நிறுத்த ஒரு மனிதன் எழுப்பிய பிரமிட்டின் முனையில் அவன் மூக்கு மழுங்கியதாய் எண்ணி வருகிற சிரிப்பு பாலைவனத்தில் எதிரொலிக்கும். குளிரூட்டப்பட்ட பெரிய அறையில் உலகப் பொருளாதாரத்தை ஒரு நொடியில் […]
. * மரண மீன் செதிலசைத்து நீந்துகிறது நாளங்களில் மூச்சுக் குமிழ் வீங்கும் நொடியில் உடைந்து வாலசைக்கிறது இதயம் நோக்கி மௌன நீர்மையில் வேர்ப் பிடித்து முளைக்கும் சலனப் பாசி நெளிந்து நெளிந்து கலக்கும் பசலையைத் தின்று தீர்க்க வாய் திறந்து திறந்து மூடுகிறது உயிரின் நித்திரைத் திரட்டுகள்.. ***** –இளங்கோ
கால் இருந்ததால், வாசம் வசமானதென்றாள் கால் உள்ள மது, மாது அவள் கள்ள சிரிப்பால் பேதை அவன் கால் முளைத்து போதைக்கு பலியானான் அ.நாகராசன். பி.கு- கால் என்றால் காற்று , கால் என்றால் உடல் உறுப்பு, கால் என்றால் குறிலை நெடிலாக்கும் தொனை கால் (உ.ம்) மது-மாது
கொடும் மழையினூடே கரைந்தோடும் ஆற்றோர மணல் படுகைகளைப் போல் ஓர் முழு நாளிற்கான மனச் சலனங்களை கழுவித் தூரெடுக்கும் ஆற்றல் மிக்கதாய் மாலைத் தேநீர்கள் உருப்பெற்று விடுகின்றன பின் பிடரி வழியாய் உங்கள் உயிர் குடிக்கும் சில எம காத உருவங்களையோ பாத விரல்களினிடையேயான சேற்றுப் புண் எரிச்சல்களையோ ஓர் தேநீரின் இதமான கதகதப்பில் சில மணித்துளிகளாவது அவைகளையற்று இன்புற்றுக் கிடக்கக்கூடும் நீங்கள் மென்னிருள் கொண்ட ஓர் பொன் மாலைப் பொழுதோ எப்பலன்களுமற்ற உங்களையொத்தாருடையேயான எவ்விஷயங்களுமற்ற வெற்று […]
நீ அறுதியிட்டு உச்சரித்த ஒற்றை எழுத்தில் ரத்தம் கசிகிறது குத்திக் கிழித்த காயத்தின் வலியென இந்த அவமானம்.. ***** –இளங்கோ
பால்கனியில் தொற்றியபடி கண்மறையும் வரை கையாட்டி உள்வந்து படுக்கை விரிப்புகளை உதறிச் செருகும்கணம் இரவு ஊடலில் திரும்பிப் படுக்க முதுகில் பதிந்த முகம் மீசையொடு குறுகுறுக்க வண்டியில் செல்லும் உன் முதுகில் என் மூக்குத்தியின் கீறல் சற்றே காந்தலோடு.
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “நான் அவனுக்குக் கிண்ணம் நிறைய ஆனந்தத்தை அளித்தேன். ஆனால் அவனோ அதைத் தரையில் கொட்டி விட்டான், அவனது அறியாமையால் ! பிறகு இருள் தேவதைகள் அந்தக் கிண்ணத்தில் சோக மதுவை நிரப்பினர். அதை அவன் அருந்தி ஓர் குடிகாரனாய் மாறினான்.” கலில் கிப்ரான். (The Goddess of Fantasy) ++++++++++++++++ ஞானமுள்ள மனிதன் […]
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இசை அரங்குக் குழுவில் எல்லோ ரையும் விட அதிட்ட வாதி யார் ? நாணல் தட்டை தான் ! அதன் வாய் உன்னிதழ் களைத் தொடும் இன்னிசை கற்றுக் கொள்ள ! கன்னல் இலைகள் போல் எல்லா இலைகளும் இந்த வாய்ப்பு தனையே எண்ணிக் கொள்ளும் ! பல்வேறு வழிகளில் எல்லாப் புறத்திலும் கரும்புத் தண்டுகள் அசைந்தாடும் காற்றினிலே […]
என்னை சுற்றி அடுக்கு அடுக்காய் வரிசை கிரமத்தில் புள்ளிகள். கோலம் துவங்கும் நேரத்தில் புள்ளிகள் நகர்கின்றன.. மத்திய புள்ளியாகிய நானும் அடுத்த அடுக்குக்கு,பக்க அடுக்குக்கு கீழ் அடுக்கின் கடைபுள்ளியாகி கோல பலகையிலிருந்து விழுவோமோ என்ற அச்சத்திலிருந்து மீண்டும் நேர்வாட்டில் குறுக்கு வாட்டில்,மேல் அடுக்கு என நகர்ந்து கொண்டே இருக்கிறேன் .. நகர்கிற புள்ளிகளில் கோலமாவது ,ஒண்ணாவது? அசந்து விட்ட நேரத்தில் புரிந்தது – புள்ளிகள் நகர்கையில் மாறி மாறி […]
நகர போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி நகர அனுமதிக்கும் விளக்கின் பச்சைக்காகக் காத்திருக்கயில்… பல வேலை நிமித்தம் சிலர் சாலை கடந்தனர்! கடந்தவர்களில் ஆண்களோ அலைபேசி அடிமைகளாய் தலை சாய்த்து முடங்கி நடக்க பெண்களில் பத்துக்கு எட்டுபேர் எதையாவது சுமந்துகொண்டே நடந்து கடந்தனர்… தோல்பை கைப்பை பணப்பை வழவழ காகிதத்தில் தடிநூல் பிடிகொண்டபை மினுக்கும் அலைபேசிப்பை ஒருமுறை பிரயோகத்திற்கான பாலித்தீன் பை என எதையாவது சுமந்துகொண்டு… எஞ்சிய இருவரும்கூட கர்ப்பினிப் பெண்டிர்! […]