யார்

யார்

நேற்று பார்த்த முகங்களில் ஒன்று கூட நினைவடுக்குகளில் தங்கவில்லை தோற்றப் பொலிவுக்கு எத்தனை மதிப்பு இவ்வுலகில் எச்சில் இலை பொறுக்கும் பிச்சைக்காரி்க்குத் தான் தெரியும் பசியின் விஸ்வரூபம் குறளி வித்தைக்காரனிடம் பணத்தை பறிகொடுத்து நிற்பார்கள் இரத்தம் கக்குவதற்குப் பயந்து சில அப்பாவிகள்…
பிரதிபிம்ப பயணங்கள்..

பிரதிபிம்ப பயணங்கள்..

விடியல் பயணத்தின் விளிம்பொன்றில் என்னை விலக்கி அருகமர்ந்தான் கருஞ்சிறகுகளுடன் அவன்.. . அவன் யார்? என்னைக் காணும் வேளைகளில் அவனுள் பிறக்கும் குறுநகைப்பிற்கான தகிக்கும் அர்த்தங்கள் யாது? எனக்கும் அவனுக்குமான இடைவெளியின் அலைவரிசை ஒப்பந்தங்கள் உரைப்பது உண்மையில் என்ன? அவன் என்னைத் தீண்டுகையில் பிரதிகள் இடம்மாற்றப்படுவதை இதழ்களும் செவிகளும் உணர…
ஒரு பூ ஒரு வரம்

ஒரு பூ ஒரு வரம்

ஒரு பூ சோலையை கொண்டாடியது. அது மலர்ந்தும் மலராத தருணங்களில் மண் வயசுக்கு வந்தது . அந்தப் பூ ஊசித் தட்டான் ,வண்ணத்து பூச் சிகளை அருகழைத்து முகவரி சொல்லிக் கொண்டிருந்தது . யாரும் விலாசம் மறந்து விட லாகாது .....…
அரசியல்

அரசியல்

கீதங்கள் இசைத்து கிரிக்கட் விளையாடி வெள்ளித் திரையில் சின்னத் திரையில் மேடைகளில் நடித்து கொலை செய்து கொள்ளையடித்து தாதாவாகி மிரட்டி அதுவும் முடியாதெனில் குறைந்த பட்சம் பாலியல் வன்முறையொன்றையாவது பிரயோகித்து பெயரை உருவாக்கிக் கொண்டு உருவத்தை அலங்கரித்து உடலைச் சமைத்து அப்…
அகம்!

அகம்!

இன்று வியாழன்... நேற்றுதான் சென்றது வெள்ளிக் கிழமை, எத்தனை வேகமாய் கடக்கிறது இந்தியனின் இளமை அமீரகத்தில்?!   எத்தனை காலமல்ல குடும்ப வாழ்க்கை எத்தனை தடவை என்றாகிப்போனதே!   ஊரிலிருந்து வந்த நண்பன் உன் நினைவுகள் மொய்க்கும் பெட்டியொன்று தந்தான்.  …
உனை ஈர்க்காவொரு மழையின் பாடல்

உனை ஈர்க்காவொரு மழையின் பாடல்

நான் மழை ஈரலிப்பாக உனைச் சூழப் படர்கிறேன் உன் பழங்கால ஞாபகங்களை ஒரு கோழியின் நகங்களாய்க் கிளறுகிறேன்   எனை மறந்து சிறுவயதுக் காகிதக் கப்பலும், வெள்ள வாசனையும் குடை மறந்த கணங்களும், இழந்த காதலுமென தொன்ம நினைவுகளில் மூழ்கிறாய் ஆனாலும்…
முகபாவம்

முகபாவம்

* முன்னோர்களின் மண்டையோட்டுக்களை மிகக் கவனமுடன் பார்த்துக்கொண்டொரு முகபாவத்தை வெளிப்படையாகப் பத்திரப்பத்துகிறேன் அவர்கள் எல்லோரும் ஒரே முகபாவம் கொண்டிருந்தனர்   அடிக்கடி நானே என்னிடம் சொல்லிக்கொள்வதுண்டு அவர்களை விட நான் மிகவும் வித்யாசமானவன் என்று அவர்களது முகபாவமொன்று என் சதைக்குப் பின்னால் கொடிய…
சாலைக் குதிரைகள்

சாலைக் குதிரைகள்

சூர்யா   சாலையில் சிங்கமாய் சீறி இயந்திரக் குதிரைகளில் பறந்தவர்களை காவல் துறை கேமிராக் கண்களில் பார்த்து கைகளில் விலங்கை மாட்டியது.   சிறையின் கம்பிகளுக்குள் இருந்து கண்ணயர்ந்தவர்களின் கனவில் ஒரு தேவதை வந்து சொன்னாள்..   போட்டிகளுக்கென்றே களங்கள் இருக்கின்றன..…
முள்ளால் தைத்த நினைவுகளுடன்…..

முள்ளால் தைத்த நினைவுகளுடன்…..

முள்ளால் தைத்த முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் கடந்தோடிவிட்ட இரண்டு வருடங்கள் கனவாகவே இது இருந்திருக்கக் கூடாதா என்றவொரு ஏக்கம் இன்றும் என் மனதில் தவியாய் தவிக்கிறது எம் உறவுகளின் சாம்பல் மேடுகளில் பட்டு வரும் காற்றை சுவாசிக்கும் கொடுமை அழுகுரல்கள் நிறைந்த அந்த…

உதிரமெழுதும் தீர்ப்பின் பிரதிகள்

இறுதி யுத்தத்தின் இறுதி போராளியை விழுங்கிய வாளில் இன்னமும் ரத்தக் கறை காய்ந்திருக்கவில்லை.   வெந்தழல் மேகங்களில் நீதித்தேவதைகளைக் கண்டதாக வாக்குமூலம் அளித்தவர்கள் கொலைகளனிற்கு அனுப்பப் படுகிறார்கள்.   பிசாசெழுதும் வரலாற்றினில் நம்பிக்கையின் பெயரால் சிந்தப்படும் கண்ணீர்த் துளிகளுக்கு கோமாளிகளின் முகமூடி…