நான் தேடியது அன்று திடீரென்று கிடைத்தது. நைந்த என் பழைய கால் சட்டை. வார் (பட்டை) வைத்து தைத்தது. வால்கள் அறுந்து கிடக்கின்றன. ஒரு தீபாவளிக்கு அது புது ஆடை. எண்ணெய்ப்பிசுக்குடன் அதற்குள் இருந்து அன்று ஊசி வெடி வெடித்தது இன்னும் ஊசிப்போகவில்லை. அந்த துணியில் என் சரித்திர வாசனை. பழுப்பு நிறம் இப்போது வெளிறியிருந்தது. ஆற்றங்கரைக்கல்லில் அந்த வாரைப் பிடித்துக்கொண்டு அடித்து அடித்து துவைத்து கசக்கி வைத்து விட்டு சில முக்குளிகள் போட அந்த முட்டளவு […]
மூவர்ணம் நட்டு நீருற்றி 66 ஆண்டுகளுக்குப்பின்னும் தெரிந்தது அது நம் கண்ணீர் என்று. போராடிய தலைவர்களின் தியாகங்கள் எல்லாம் சந்தையில் பழைய பேப்பர்கள் போவது போல் கூட போவதில்லை கிலோவுக்கு என்ன விலை? அவர்கள் ரத்தமும் சதையும் இன்று கருப்புப்பண ஷைலக்குகளின் தராசு தட்டில். சுதந்திரம் என்று மொழி பிரித்தோம். அது நம் விழி பறித்தது. சுதந்திரம் என்று ஒரு மொழி ஆக்கினோம். அதன் சினிமாப்பாட்டுகள் மட்டுமே இனித்தன. நசுங்கிக்கிடந்தவர்களுக்கு நலங்கள் செய்தோம். அது வெறும் […]
===========================================ருத்ரா வெயில் காய்ந்து கொண்டிருந்தது காதலர்களின் நிலவு போல். கந்தல் துணி நடுவானில் சுருட்டிக்கிடந்தாலும் அதற்குள் இருக்கும் சல்லடைக்கண்கள் எல்லாம் கனவு ஊசிகளின் குத்தல்கள் குடைச்சல்கள். வேப்பமரத்தோப்பின் கோடைகால சருகுகளின் குவியலில் காலடிகள் ஊரும் ஓசை. ரயில் எஞ்சின்கள் தட தடத்து நெஞ்சின் மேல் ஏரும் தருணங்கள். எல்லாமாய் பிசைகிறது. உருகிப்போன மெழுகு வர்த்தியை உருட்டிவைத்து உருவம் செய்கிறேன் வெளிச்ச தேவதையாய். இருட்டு முந்தானை விரித்துக்கொண்டு விழி குத்திப்பார்க்கிறது. தாகம் சஹாரா மணல் வயிற்றைக்கிழித்து குளிர் நிலவின் […]
ருத்ரா தீக்கொளுந்து போல தேயிலைக்கொளுந்து துளிர் பிடிச்சு நிற்கையிலே அங்கே ஓம் மனசுக்குள்ளே துடுக்குத்தனமாய் உடுக்கடிக்கும் என் உள் மனசு கேக்கலையா சொல்லு புள்ளே பூவாயி. கேக்கத்தவங்கெடந்து என் நெஞ்சுக்குள்ள தேடிக்கிட்டு கெடக்கேனே தெரியலையா? ஊர்க்காட்டு சாஸ்தாவும் ஊமையாக நிக்கிறாரு. தாம்ரவர்ணி ஆத்துக்குள்ளே ஆவி நிழல் தேடுறேன் அல விரிச்ச முந்தான அமுக்கதடி என்னுயிரை. அம்பாந்த்ர சாலயிலே அண்ணாந்து கெடக்குறாக வண்டி மறிச்ச அம்மன்களும் கோடாங்கி அடிச்சி நாளு குறிக்கப் போனேனே கோடாங்கிக்காரன் கோடாலிய தலமேல போட்டாப்ல […]
அந்த சுவற்றின் நெற்றியைப்பார்க்கும் போதெல்லாம் என் மனசுரங்கத்தில் நீர் கசியும். கண்கள் இன்றி இமைகள் நனையாமல் கண்ணீரின் விழுதுகள் பாம்பு நாக்குகள் போல் கீழிறங்கும். ஆனால் அது அழுகை அல்ல. அவலம் இல்லை புலம்பலின் ஊதுவத்திப்புகை சுருள்கள் இல்லை. ஆனாலும் அந்த குகைக்குள் சுரந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த சுவற்றை கவிந்திருக்கும் நிழல் சுட்டெரித்துக்கொண்டிருக்கிறது. திகு திகு என்று சுவாலைகள் சுழற்றியடிக்கிறது. அங்கணாக்குழியை அடுத்து அடுக்களையை அணைவாய்ப் பொத்தியிருக்கும் சுவர் அது. ஒவ்வொரு பொங்கலுக்கும் வீடு […]
உடைக்கவில்லை நொறுக்கவில்லை உள்ளே நுழைந்தேன். துண்டு துண்டாய் உள்ளே வந்தேன் அப்புறம் ஒட்டிக்கொண்டேன். சதுரகற்களில் குளித்து விளயாடினேன். கன்னங்களில் மஞ்சள் பூசினேன். மாடத்து காமாட்சிவிளக்கின் எண்ணெய்க்குளத்தில் தாமரைகள் பூத்தேன் காண்டாமிருகங்கள் கன்றுக்குட்டிகள் மயில் தோகை அசைவுகள் எல்லாம் நிழல்களில் வந்தன. பக்கத்தில் ஆலிங்கனத்துக்கு கை நீட்டும் பாதிரிமர கிளைகளின் கைகளில் வளையல்களாக குலுங்கின பாதிரிப்பூக்கள். அப்போதும் நிழல்கள் கரு மணிகளாய் பரல்கள் இறைத்தன. கேட்கவில்லையா அந்த “கேளா ஒலி”அதிர்வுகளின் கேவல்கள்? புல்லைத்தடவி கல்லை வருடி கடலின் உடலை […]
(இன்னிசைச்செல்வர் டி.எம்.ஸ் அவர்கள் மறைவிற்கு அஞ்சலி) குரல் தந்து குரல் மூலம் முகம் தந்து இம்மக்களை ஆட்சி செய்தீர். முருகன் எனும் உந்து விசை அத்தனையும் உன்னிடம் தேனின் மழை. “அன்னம் இட்ட வீட்டிலே” அந்த முதல் பாட்டிலிருந்து “கணீர்”க்குரல் தேயவில்லை மாறவில்லை. கோடித் தமிழ் நெஞ்சுக்குள்ளும் ஊடி ஊடி பாய்ந்ததில் ஊன் உருக்கி என்பு உருக்கி ஊழி இசை வெள்ளம் தான். உன் குரலுக்கு உதடு அசைத்தவர்கள் உயரம் போனார்கள். அவர்களை கீழே விழாமல் […]
எம்புட்டு உசுரு ஓம் மேலெ. ஒனக்கு அது புரியாது. பூப்போட்ட ஏங் கண்டாங்கி பூதோறும் தீப்பிடிக்கும் நான் பொசுங்க பாக்கலையா கொண்டயிலெ செருகிவெச்சேன் சம்பகப்பூங் கோத்தோட. ஓ(ன்) நெனப்புக் கொத்து தான் என்னெ இப்போ கொத்துக்கரி போடுதய்யா. ஓட ஓட வெரட்டி என்ன? வருசம் தான ஓடுது பரிசம் போட வந்துருய்யா உரிச்சுத் திங்கி ஓ(ன்) நெனப்பு. பேய்போல எரியுதய்யா ஒந்நெனப்பு எனக்குள்ளெ மூட்டை நெல்லு அவிச்சிரலாம்…அது கோட்டை அடுப்பைய்யா ஒல கொதிச்சு அடங்கினாலும் அரிசியெல்லாம் […]
“எலெ சொள்ள மாடா என்னத்தலெ சொல்லுதது? ஓம் மாடு ஏ(ம்) வயப்பக்கம் தாம்லெ வாய வைய்க்கிது. பெரவு ஏங்கிட்ட எதும் சொல்லப்டாதுலெ. ஓம் மாடே கசாப்புக்கு போட்டுரலாமா? இல்ல ஓம் கால ஒடிச்சுடலாமா?” அவர் உறுமி விட்டு சென்றார். சொள்ளமாடனுக்கு என்னண்ணே வெளங்கலெ. அவன் மாடு பின்னெ வாலப் புடிக்காத கொரயாத்தான் மேச்சுகிட்டு வாரான். “மெனக்கிட்டு வந்து ஏசிட்டு போராரே. ஏ(ன்) வாய்ல என்னத்த வெச்சிருந்த? ஒண்ணுமே கேக்கல?” தாத்தனின் பேரன் சீறினான். “எல ஓஞ்சோலியப்பாருல” […]
அம்மா உனக்கு ஒரு பரிசு வாங்க கடை கடையாய் ஏறி இறங்கினேன். என்ன வாங்குவது? இறுதியாய் கிரிஸ்டலில் இதயம் வாங்கினேன். உள்ளே பச்சை நரம்புகளில் சிவப்புக்கடல். அந்த உன் கருப்பையை ஈரம் சொட்ட சொட்ட என் கைப்பையில் நான் திணித்துக்கொண்டேன். அந்த பத்துமாத இருட்டுக்குள் சூரியப்பிழம்பாய் நான் உருப்பிடிக்க நீ உன்னை உலைக்களமாய் காய்ச்சிக்கிடந்ததை எந்த மெமரி சிப்பில் இட்டு வைக்க முடியும்? மலட்டு டிஜிடல் கர்ப்பப்பையை மடிப்பொறியாய் சுமந்து சுமந்து பன்னாட்டுகம்பெனியின் பணங்காட்டு க்யூபிகிள்களில் […]