தாகூரின் கீதப் பாமாலை – 23 பிரிவுக் கவலை

This entry is part 17 of 37 in the series 22 ஜூலை 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பிரிவுக் கவலை இனிப்பாய் மாறலாம் தேனான இந்த மாலையில் ! கானம் ஆழ்மனதில் எழலாம் சோக மோடு நெடிய வேதனைக்குள் உன்னைக் காணாத இழப்பு உண்டாக்கும் துன்பத் தவிப்பு ! முழுமதி பூத்த இரவு நேரத்தில் எழுந்திடும் மோகம் ! கனிவான கானல் நீர் கண்களில் மாய வித்தை செய்யும். தூரத்தி லிருந்து காற்று நறுமணப் படர்வைத் தூக்கி வரும். என் இதயம் பாதை […]

குற்றம்

This entry is part 16 of 37 in the series 22 ஜூலை 2012

ஜாசின் ஏ.தேவராஜன் செக்கன்டரி ஸ்கூலுக்குப் போய்ட்டாலே நாங்க கெட்டுக் குட்டிச்சுவராகிப்போய்ட்டோம்னு பண்றதெல்லாம் பண்ணிட்டு ஆளாளுக்கு எங்களைப் புடிச்சி நொங்குறாங்க. உண்மைதான் கெட்டுத்தான் போறோம். நாங்க சின்னப் பசங்கதான். ஆனா, மூக்குக்குக்கீழ அரும்பு மீசை கறுங்கோடு கிழிச்ச மாரி மொளைக்குதே. அங்க மட்டுமா மொளைக்குதுங்கிறீங்க ?அது மொளைச்சா என்னன்னா பண்ணும்… யேன் பண்ணுது… எதுக்குப் பண்ணுது தெரியுங்களா? இதெத் தெரியாம சும்மா பேசக்கூடாது. இது மொத குத்தம். தொண்டைக்குழிக்குப் பக்கத்தில் முண்டுபோல் கண்டம் முட்டிக்கிட்டு நிக்கிது. நாங்களே கண்ணாடியில […]

முள்வெளி அத்தியாயம் -18

This entry is part 15 of 37 in the series 22 ஜூலை 2012

இன்று “பாயி த்வஜ்”. அதனால் இப்போதே (மதியம் மணி மூன்று) கிளம்புகிறேன்”. சதானா கிளம்பி விட்டாள். காலை முதல் அவள் எதையும் செய்து கிழித்திருக்க வாய்ப்பில்லை. கை நிறைய மருதாணியும் ‘மேக் அப்’பும் உயர்ந்த ரக பருத்திப் புடவையும் அதை விட விலையுயர்ந்த பூ வேலை செய்த ‘ஷால்’ என அவளும் அவள் தோழிகளும் ஒருவரை ஒருவர் சந்தித்து சமூக உறவுப் பகட்டை நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருந்தார்கள். சங்கரன்னுக்கு ‘பாயி த்வஜ்’ என்றால் என்ன என்று விளக்கினார் […]

குடத்துக்குள் புயல்..!

This entry is part 13 of 37 in the series 22 ஜூலை 2012

பாலகுமாரானின்   ” இதற்குத்தான் ஆசைப்பட்டாயா  ? ”  படைப்பைப் ரகசியமாகப் மறைத்தபடியே  அடுப்பில் பாலை வைத்துவிட்டு, பால் காயும்வரையில் கதையைப் படிக்கலாமே…என்ற எண்ணத்தில் படிக்க ஆரம்பிக்க , மனது கதையோடு ஒன்றிப் போய் படித்துக் கொண்டிருந்தவளை  தனது பின்னாலிருந்து  திடீரென ஒரு கை இடது கையில் இருந்த புத்தகத்தை வெடுக்கெனப் பிடுங்கி வீசி எறிய தூக்கிவாரிப் போட்டுத் திரும்பியவள் அத்தை நின்றிருப்பதைப் பார்த்ததும் திடுக்கிட்டு விழித்தாள்  தீபா. பால் பொங்கி வழியறது கூடத் தெரியாமல் அப்படி […]

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -4

This entry is part 12 of 37 in the series 22 ஜூலை 2012

  ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா   பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன. பெர்னாட் ஷா […]

பூமிதி…..

This entry is part 11 of 37 in the series 22 ஜூலை 2012

தேவையில்லாத எதிர்பார்ப்புகளே ஒருவரை வாழ்க்கையின் அடிமையாக்குகிறது.. இரவு படித்து முடித்து வைத்த புத்தகத்தின் சில வரிகள் பளிச்சென்று நினைவிற்கு வந்தது தூங்கி முழித்தவுடன்…. அழகாக குளித்து முடித்து நார்மலான காலை வழிபாடு முடித்து மதிய உணவிற்கு இரண்டு சப்பாத்தியும் கொஞ்சம் சன்னாவும் ஒரு சிறிய ஆப்பிளும் எடுத்து பேக் செய்து வைத்துவிட்டு காலையில் கார்ன் ஃபிளேக்ஸ் ஒரு பவுல் அதிவேகமாக விழுங்கிவிட்டு உடை மாற்றி லேசான ஒப்பனையுடன், ஏதோ ஒரு டாப்ஸ் ஒரு ஜீன்ஸ் என்று மாட்டிக் […]

‘பினிஸ் பண்ணனும்’

This entry is part 10 of 37 in the series 22 ஜூலை 2012

கார்த்திக் வழக்கமாகச் செல்கிற அதே வழியில் தான் அன்றைக்கும் சென்று கொண்டிருந்தான். இன்னும் ஒரு மாதத்திற்குத்தான். அதன் பிறகு அவன் வேலை எங்கே எப்படி விதிக்கப்பட்டிருக்கிறதோ? அவன் வேலை செய்கிற ஸ்டார் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை அடைய இன்னும் இரண்டு புளோக்குகளுக்குள் புகுந்து பேருந்து நிறுத்தத்தில் சற்று நின்று திரும்பிப் பார்த்துவிட்டுச் சாலையைக் கடக்க வேண்டும். ‘புளோக்’குகளுக்கிடையே இருந்த முதியோர் உடற்பயிற்சி செய்கிற இடத்தில் பெரிசுகள் சிலர் கைகளைக் கால்களை நீட்டி மடக்கித் தங்கள் வாழ்நாளைக் கூட்டிக்கொண்டிருந்தார்கள். அங்கே […]

பூசாரி ஆகலாம்,! அர்ச்சகராக முடியாது?.

This entry is part 9 of 37 in the series 22 ஜூலை 2012

இந்தியா ஜனநாயகநாடு இந்திய அரசியலமைப்பு சட்டப்படி எல்லோருக்கும் சம உரிமை. இந்திய அரசியலமைப்பில் நால்வருணப் பாகுபாடு இருக்கிறதா? இல்லை. தமிழ்நாட்டில் எல்லோரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் இயற்றப்பட்டிருக்கிறதே, தெரியுமா? தெரியும். சட்டத்தை நடைமுறை படுத்த முடியுமா? முடியாது! !பிறகு என்னய்யா வெங்காயம்!! நீங்களும் உங்கள் சட்டங்களும். **** எல்லோரும் தமிழ்நாட்டில் அர்சகராகலாம் என்று சட்டமியற்றப்பட்டதை தங்களின் மகா ம்கா சாதனையாக எழுதியும் பேசியும் என்னவோ பெரிய புரட்சி நடத்திவிட்டதாக அரசியல் கட்சி சொல்லிக்கொண்டிருக்கும்போதே விட்டேனா பார் என்று […]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பெரு வெடிப்புக்கு முன்பே பிரபஞ்சத்தில் கருந்துளைகள் சில இருந்துள்ளன (கட்டுரை 81)

This entry is part 8 of 37 in the series 22 ஜூலை 2012

  (கட்டுரை 81) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா காலக் குயவன் ஆழியில் பானைகள்  செய்ய களிமண் எடுத்தான் முன்னோடிக் கருந்துளைச் சுரங்கத்தில் ! பெரு வெடிப்பில் பிரபஞ்சம் பிறந்த தென்றால் பெரு வெடிப்புக்கு மூலமான கரு எங்கே கர்ப்ப மானது ? கரு இல்லாது உருவம் உண்டாகுமா ? அருவமாய்க் கருமைப் பிண்டம் அணு உருவில் அடர்த்தியாக இருந்ததா ? பெருவெடிப் பில்லாமல் பிரம்மா படைத்தாரா பிரபஞ்சத்தை ? கருவை வடிவாக்கச் […]