கனடா, ரொறன்ரோவில் கலைஞர்களுக்கு மதிப்பளிப்பு

This entry is part 3 of 3 in the series 12 மே 2024

குரு அரவிந்தன் முத்தமிழ் என்று அழைக்கப்படுகின்ற இயல், இசை, நாடக வடிவங்களைக் கட்டிக் காப்பதில் புலம் பெயர்ந்து கனடா வந்த ஈழத்தமிழர்கள், வேலைப் பளுவுக்கு மத்தியிலும் மிகவும் ஆர்வத்தோடு அத்துறையில் ஈடுபட்டார்கள். தொடக்கத்தில் பொருளாதார ரீதியாகத் தங்களைத் தாங்களே நிலை நிறுத்திக் கொள்வதில் கஸ்டங்களை அனுபவித்தாலும், தங்களுடன் ஒன்றாக இணைந்த கலை வடிவங்களைப் புலம் பெயர்ந்த மண்ணில் வெளிக் கொண்டுவருவதில் அவர்கள் தயக்கம் காட்டவில்லை. அந்த வகையில் தமிழரின் கலை வடிவங்களை ஆரம்பத்தில் முன்னெடுத்துச் சென்றவர்களில் நடிகர், […]

முன்னொரு காலத்துல…

This entry is part 2 of 3 in the series 12 மே 2024

ஜெயானந்தன் முன்பெல்லாம் சாப்பாட்டு நேரம் ஆனந்தமாய் இருந்தது. அம்மா ,அவித்தசோறு சட்டியை ஆவிபறக்க, பெரிய கூடத்தில்  வாழைத்தண்டு சாம்பாரும், கத்திரிக்காய் கூட்டோடு  கூப்பாடு போடுவாள்.  காக்கை கூட்டம்போல்,  நானும்,அண்ணாவும், அக்காவும் தம்பியுமாய்,  அத்தை பிள்ளைகளோடு,  பதினான்கு உருப்படிகள், தட்டில்தாளமிட,  பாட்டி அன்போடு பரிமாறுவாள்.  கடைக்குட்டி தம்பிக்கு, கதைசொல்லி, அன்பையும் பால்சோறு அன்னத்தை, ஆடிப்பாடி ஊட்டிடுவாள்.  இன்று, வயதான பருவத்தில், புதுமைப்பித்தன் துணையாக  காலம் என்னை நகர்த்த, ஆர்டர் கொடுத்த,  ஐந்து நிமிடத்தில்,  ஸ்வக்கி சோமட்டோ, டப்பாவில் பீட்சா […]

விழிகளிலே வெள்ளோட்டம்

This entry is part 1 of 3 in the series 12 மே 2024

17 ஆண்டுகால வகுப்பறை வாழ்க்கையின் கடைசி நாள். 30 ஏப்ரல்,1971.  முதுகலை. மாநிலக் கல்லூரி. சென்னை. பொறுப்பாசிரியர், ஜேபிஎஸ் என்கிற ஜே. பாலசுப்ரமணியம். அவர் சொன்னார் ‘நாளை முதல் விடுமுறை. ஆனாலும் மே 15வரை செய்முறை தேர்வுக்கு நீங்கள் தயாராக, சோதனைக்கூடம் தினமும் திறந்திருக்கும். உதவியாளர்கள் இருப்பார்கள். நாங்களும் இருப்போம். நீங்கள் வந்து எல்லா சோதனைகளையும் எப்பொழுது வேண்டுமானாலும் செய்துபார்த்துக் கொள்ளலாம். கல்லூரிக்குப் பக்கத்திலேயே உள்ள நல்லதம்பி முதலித் தெருவில்தான் என் இருப்பிடம். ஓர் அறையில் நான்கு […]