ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்-2016

This entry is part 11 of 19 in the series 20 நவம்பர் 2016

அன்பின் ஆசிரியருக்கு, வணக்கம். தமிழின் முக்கியமான சிறுகதை ஆளுமையாக இருந்த எழுத்தாளர் ஜெயந்தன் பெயரில் வழங்கப்படும், ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்-2016 சிறப்பாக நடைபெற உள்ளது.அழைப்பினை அறிவிப்புகள் பகுதிக்கு இணைத்துள்ளேன். வெளியிட்டு ஆதரவு தர கேட்டுக் கொள்கிறேன். அன்புடன் தமிழ்மணவாளன் ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுக் குழு ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்-2016

மிருகக்காட்சி சாலைக்குப் போவது

This entry is part 12 of 19 in the series 20 நவம்பர் 2016

விலங்குகளைப் பார்ப்பதற்கென்று மெனக்கெட்டு மிருகக்காட்சி சாலைக்குப் போவதென்பதே ஒரு பிரத்யேகமான மனோபாவம் அநேகமாய் மனிதர்களைப் பார்ப்பதற்கு மறுதலிக்கப்பட்ட சமூகத்தில் ஐம்பது ரூபாய் நுழைவுச் சீட்டில் அனுமதிக்கப் படுகிறோம் மிருகங்களைப் பார்க்க உள்நுழைந்து இடப்புறம் திரும்பியதும் வண்ணப் பறவைகள் தமக்குள் குறைபட்டுக் கொண்டிருக்கின்றன மனிதர்கள் தம்மை உற்றுநோக்கல் குறித்து வலைபின்னப்பட்ட ஜீப்பில் ஏறி வலம் வரத் தொடங்குகிறோம் நம்மின் வருகையறியா மிருகங்கள் சந்தோஷமாய் இருக்கின்றன வெகுதொலைவில் விபத்தென அருகில் வரும் ஒன்றிரண்டு முறைத்துப் பார்த்துவிட்டு இடம் பெயர்கின்றன தூரத்துக்கு […]

கவிநுகர் பொழுது-13 (இல்லோடு சிவாவின்,’மரங்கொத்திகளுக்குப் பிடித்தமானவன்’, கவிதை நூலினை முன் வைத்து)

This entry is part 13 of 19 in the series 20 நவம்பர் 2016

தமிழ்மணவாளன் இலக்கிய வகைமைகளில் கவிதை தனித்துவமானது; முதன்மையானதும் கூட.ஏனெனில் கவிதையில் தான் மொழிக்குள் மொழி இயங்குகிறது. சொற்களுக்குள் சொற்கள் பிரத்யேகமான அர்த்தத்தைப் பெறுகின்றன. தனக்கு முன்னும் பின்னுமான சொல்லோடு இணைந்தோ அல்லது விலகியோ முற்றிலும் புதிதான பொருளடர்த்தியைக் கொள்கின்றன.வாசிப்பு மனத்தின் அனுபவ வெளியில் பெரும்பயணத்தை நிகழ்த்துகின்றன. நுட்பமான பகுதிகளில் மெல்ல சென்றடைந்து ரசவாதம் செய்கின்றன.நல்ல இசையைக் கேட்கும் போது எவ்விதம் மனசு பித்து நிலையினை அடைகிறதோ அது போலவே நல்ல கவிதையை வாசிக்கிற போதும் நிகழ்கிறதெனலாம்.இன்னும் சொல்லப்போனால், […]

தொடுவானம் 145. அண்ணாவின் வண்டிக்காரன் மகன்

This entry is part 14 of 19 in the series 20 நவம்பர் 2016

டாக்டர் ஜி. ஜான்சன் 145. அண்ணாவின் வண்டிக்காரன் மகன் நான்காம் ஆண்டில் இருந்தபோது எனக்கு ஓர் ஆசை உண்டானது. வேலூர் மருத்துவக் கல்லூரியின் வளாகத்தில் நிறைய மலையாளிகள் இருந்தனர். அவர்களில் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள்,,மாணவ மனைவிகள் அடங்குவர். அதுபோன்றே சி.எம்.சி. மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான தாதியரும், தாதியர் பயிற்சி மாணவிகளும் இருந்தனர். இவர்கள் வருடந்தோறும் ஓணம் பண்டிகையை சிறப்புடன் கொண்டாடினர். எனக்கு அவர்கள்போன்று பொங்கல் தினத்தைக் கொண்டாடவேண்டும் என்ற ஆவல் பிறந்தது. அதை நான் தனிப்படட முறையில் தமிழ் […]

படித்தோம் சொல்கின்றோம் மௌன வாசிப்பில் வெடித்தெழும் சிரிப்பலைக்குள் மூழ்கும் அனுபவம் தரும் நாவல் ஜே.கே.யின் கந்தசாமியும் கலக்சியும்

This entry is part 15 of 19 in the series 20 நவம்பர் 2016

முருகபூபதி நவீன படைப்பிலக்கியப்பிரதிகளை நான் வாசிக்கத்தொடங்கிய 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் ஒரு எழுத்தாளர், “இலக்கியம் படைப்பவர்களுக்கு கம்பராமாயணமும் கல்குலசும் ஓரளவாவது தெரிந்திருக்கவேண்டும்” என்றார். அவுஸ்திரேலியாவில் எமக்கு கணினி அறிமுகமானதன் பின்னர், எழுத்தாளர்களுக்கு கம்பராமாயணம் முதல் கம்பியூட்டர் வரையில் தெரிந்திருத்தல் வேண்டும் என்ற நிலை வந்தது. ஜே.கே. எழுதியிருக்கும் கந்தசாமியும் கலக்சியும் படைப்பை படித்ததும், மேலும் ஒரு படி சென்று கலக்சியும் தெரிந்திருக்கவேண்டியதாயிற்று. ஒரு ஓவியக்கண்காட்சியில் பால்வீதியை சித்திரிக்கும் படத்தை பார்த்திருக்கின்றேன். பால்விதியில் கலக்சி வருகிறதாம். […]

கோபப்பட வைத்த கோடு

This entry is part 16 of 19 in the series 20 நவம்பர் 2016

கிருஷ்.ராமதாஸ் ரப்பர் கொண்டு அழிக்க – இது பென்சிலால் வரைந்த கோடு அல்ல வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று வள்ளலாரை வருத்தப்பட வைத்த கோடு. தனியொரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜெகத்தினை அழித்திடுவோம் என்று என் மீசைக்கார கவிஞனை கோபப்பட வைத்த கோடு. ரத்தமும் சதையும் கலந்த மானுடத்தின் இடுப்பை ஒடிக்க வந்த கோடு. இதய நாளத்தின் ஆனி வேரை அசைத்து என் இந்திய குடிமகனை கண்ணீரால் நனைத்த கோடு. இறையாண்மை பேசும் இதயமில்லா […]

சந்ததிக்குச் சொல்வோம்

This entry is part 17 of 19 in the series 20 நவம்பர் 2016

செரித்தது சேர்த்தது வந்தது வாழ்ந்தது இருப்பது தொலைந்தது இன்னும் தொப்புள் கொடிச் சேதியும் அடையாள அட்டை அறியும் உடம்புச் சேதிகள் ஊசிமுனை இரத்தம் அறியும் சல்லடைகள் இத்தனைக்கும் சிக்காத சங்கதிகளான நாம் மறைத்த உண்மையையும் தொடுத்த அநீதியையும் இரகசிய ரொக்கத்தையும் நம் சந்ததிக்குச் சொல்லிவிட்டு மரணிப்போம் நிராயுதபாணியாய் மடிகிறோம் நிரபராதியாய் மடிகிறோமா? அமீதாம்மாள்

இரு கோடுகள் (முதல்பாகம்) தெலுங்கில் : ஒல்கா

This entry is part 18 of 19 in the series 20 நவம்பர் 2016

இரு கோடுகள் (முதல்பாகம்) தெலுங்கில் : ஒல்கா தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com ஆழ்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் சாந்தா. யாரோ வந்தாற்போல் இருக்கவே நிமிர்ந்து பார்த்தாள். மோகன்! தனக்குக் கீழே வேலை பார்க்கும் ஆராய்ச்சி அதிகாரி. சாந்தாவுக்கு எரிச்சலாக இருந்தது. சாந்தா ஹைதராபாதுக்கு வந்து, இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்து நான்கு மாதங்கள்தான் ஆகிறது. இந்த நான்கு மாதங்களிலும் யாருடனும் நட்பு ஏற்படவில்லை. ஆனால் மோகன் போன்ற சிலபேருடன் அறிமுகம் கூட நீடிக்காது என்று […]

புத்தகப் பார்வை. கொமறு காரியம் – கீரனூர் ஜாகிர் ராஜா.

This entry is part 19 of 19 in the series 20 நவம்பர் 2016

புத்தகப் பார்வை. கொமறு காரியம் – கீரனூர் ஜாகிர் ராஜா. சந்திய பதிப்பகம் 2016 – விலை – 110/= தமிழ் முஸ்லீம் சமூகத்தின், அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை,கீரனூர் ஜாகிர் ராஜா, தனது எழுத்துத் திறமையால், மிக துல்லியமாக தனது சிறுகதைகளின் வழியாக நமக்கு காட்டுகின்றார். கொமறு காரியம்.… பள்ளிவாசலில் ஊழியம் செய்து, வயோதிகத்தில், பெண் பிள்ளையை வைத்துக்  கொண்டு, அவர் படும் அவஸ்தையை,  முஸ்ஸிம் மக்களின் கலாச்சார வாடையோடு, கதை உலா வருகின்றது.  அதே நேரத்தில், அந்த பெண் பிள்ளையின், […]