காரைக்குடி கம்பன் கழகத்தின் டிசம்பர் மாதக் கூட்டம் – 3.12.2011 (சனிக்கிழமை )

This entry is part 6 of 37 in the series 27 நவம்பர் 2011

காரைக்குடி கம்பன் கழகத்தின் டிசம்பர் மாதக் கூட்டம் வரும் 3.12.2011 (சனிக்கிழமை ) அன்று கம்பன் மணிமண்டபத்தில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் கம்பன் காட்டும் ஆசிரியப் பெருமக்கள் என்ற தலைப்பில் ஒக்கூர் சோம சுந்தரம் மேல்நிலைப்பள்ளியின் தமிழாசிரியர் நாச்சம்மை கண்ணன் அவர்களும், கம்பன் கூறும் இசை நுட்பங்கள் என்ற தலைப்பில் தமிழ்ப்பல்கலைக்கழக இசைத்துறைப் பேராசிரியர் முனைவர் செ. கற்பகம் அவர்களும் உரையாற்ற உள்ளனர். நிகழ்வு மிகச் சரியாக மாலை ஆறுமணிக்குத் தொடங்கும். நிகழ்ச்சி ஏற்பாடு எம்.கே சுந்தரம் […]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 17

This entry is part 5 of 37 in the series 27 நவம்பர் 2011

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “இல்லை, இல்லை !  கடவுள் கைகொடுப்பார் உனக்கு.  நீங்கள் பணத்தை ஏற்றுக் கொண்டது நியாயமே ! நமது சல்வேசன் சாவடியை நீங்கள் காப்பாற்றினீர் !  ஆனால் என் மனது அதை ஏற்கத் தயங்குகிறது.  போ போ அணி வகுப்புடன் !  இன்று உன் சொற்பொழிவைக் கேட்கப் பெரிய கூட்டம் வந்திருக்கும் !” ஜார்ஜ் பெர்னாட் ஷா (மேஜர் பார்பரா) மேஜர் […]

கவிதைகள்: பயணக்குறிப்புகள்

This entry is part 4 of 37 in the series 27 நவம்பர் 2011

16 செல்வழியெங்கும் பாய்ந்தோடிக்கொண்டிருக்கிறது சிந்தா நதி யொன்று! படகில்லை, நீந்தத் தெரியாது, சிறகில்லை, பறக்கமுடியாது…. ஆனாலுமென்ன? ஏழு கடல் ஏழு மலை தாண்டி அந்தப் பச்சைக்கிளியைக் கண்டடைவதுதானே வழிச்செலவின் வரவு என்று சுழித்தோடியவாறு அறிவுறுத்துகிறது ஆறு! 17 தெம்மாங்குப் பாட்டு தெரியாது. கர்நாடக இசை படித்ததில்லை. இந்துஸ்தானி, ஜாஸ், ராக், கஸல் என்று எத்தனையெத்தனை உலகில்! எதிலுமே பயிற்சியில்லை. ஆனபோதும், குரலெடுத்துப் பாடவேண்டுமாய் எழும் இந்தத் திருத்தினவை என்செய்ய….? மெய்யோ பொய்யோ உளதாம் குரல்வளம்; உறுதியாய் கிளம்பும்தான் […]

மலேசியாவில் டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசளிப்பு விழா 2011

This entry is part 3 of 37 in the series 27 நவம்பர் 2011

மலேசியாவில் டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசளிப்பு விழா 2011: சை.பீர் முகமதுவின் “சந்ததிகளும் ரப்பர் உறைகளும்” கவிதைத் தொகுப்புக்குப் பரிசு. (கே.எஸ்.செண்பகவள்ளி மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்) மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அக்டோபர் 4ஆம் நாள், டான் ஸ்ரீ கே.ஆர்.சோமா மண்டபத்தில் 12ஆம் ஆண்டாக “டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசளிப்பு” நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6.00 மணிக்கு தேநீர் உபசரிப்புடன் தொடங்கிய நிகழ்ச்சியில் மேலும் பல முக்கிய பிரமுகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், […]

ஜென் ஒரு புரிதல் – பகுதி 20

This entry is part 2 of 37 in the series 27 நவம்பர் 2011

வறட்டுத் தன்மை மிகுந்த அன்றாட வாழ்வில் ஒரு சாரல் மழையைப் போன்றதா ஒரு கவிதையை வாசிக்கும் அனுபவம்? சிந்தனை எந்த அளவு இருண்டிருந்தது என்பதைப் புரிய வைப்பது போன்ற ஒரு மின்னலா கவிதை? ஒரு படிமமாகும் சிறு பொருள் அல்லது கருவி அல்லது நிகழ்ச்சியின் மூலம் ஒரு தரிசனத்தை நிகழ்த்தும் அற்புதமா? சொற்களின் சாத்தியத்தை பல பரிமாணங்களை வாசகருக்குக் காட்சியாக்கும் ஓவியமா? சிக்கல்கள் மிகுந்த மனித உறவுகளின் பிடிபடா முடிச்சுகளை அப்படியே காட்டும் நிதர்சனமா? அக உலகும் […]

நேர்காணல் இதழ் நான்கு இப்போது வந்துள்ளது

This entry is part 1 of 37 in the series 27 நவம்பர் 2011

அன்புமிக்க திண்ணை இணைய இதழ் ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். நேர்காணல் இதழ் நான்கு இப்போது வந்துள்ளது. தமிழ் நவீன நாடகத்துறைக்கு முக்கியப் பங்காற்றி வரும் ந.முத்துசாமி , நவீன இலக்கியத்திற்கு மிகச்சிறந்த கொடைகளைக் கொடுத்துள்ள வண்ணநிலவன், திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் நாசர் பற்றியும் இதுவரை வந்துள்ளது. இதில் வண்ணநிலவன் மற்றும் நாசர் பற்றிய நேர்காணல் இதழ்களை vallinam.com.my இணைய இதழின் 27,28 இதழ்களில் படிக்க முடியும். பிரெஞ்சிலிருந்து முக்கிய நூல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ள தனித்துவமான மொழிபெயர்ப்பாளர் […]

பஞ்சதந்திரம் தொடர் 19 ஆமையும் வாத்துக்களும்

This entry is part 34 of 37 in the series 27 நவம்பர் 2011

ஆமையும் வாத்துக்களும்   ஒரு ஏரியில் சம்புக்ரீவன் என்றொரு ஆமை இருந்தது. அதன் சிநேகிதர்களாக சங்கடகன் விகடன் என்று இரண்டு வாத்துக்கள் இருந்தன. ஏதோ கால வித்தியாசத்தால் பன்னிரண்டு வருஷகால மழை தவறிப்போய் நீர் வறட்சி ஏற்பட்டுவிட்டது. இந்த நிலையில் வாத்துக்கள் இரண்டும் யோசிக்கத் தொடங்கின. ஒரு யோசனை தோன்றியது. ‘இந்த ஏரியில் நீர் வற்றிவிட்டது. வேறு ஏதாவது ஏரி குளம் பார்த்துக்கொண்டு போகவேண்டியதுதான். நண்பன் சம்புக்ரீவனிடம் விடை பெற்றுக் கொண்டு போய்விடலாம்’ என்று தீர்மானித்தன.   […]