கபுசேனபூர் பேருந்து நிறுத்தத்தில் ஒரு நடுக்கம்

This entry is part 22 of 25 in the series 14 செப்டம்பர் 2014

மாதவன் இளங்கோ லூவன் நகர உள்வட்ட சாலையில் அமைந்த கபூசேனபூர் பேருந்து நிறுத்தத்தில் நான் பிடித்திருக்கவேண்டிய பேருந்து அப்போதுதான் கிளம்பியது.   நிறுத்தத்தை ஒட்டி இருக்கும் பத்து அடுக்குமாடிக் கட்டிடத்தில் உள்ள பல பெட்டிகளில், ஒரு சிறு பெட்டி தான் என் வீடு. டச்சு மொழி தெரியாதவர்கள், இந்த இடத்தின் பெயரை கபுசிஜ்னென்வோர் என்று உச்சரித்து இந்த ஊர் மக்களின் ஏளனச் சிரிப்பைப் பரிசாகப் பெற்றுக்கொள்வார்கள். ஆரம்பகாலத்தில் நானும் நிறைய முறை இப்படிப்பட்ட பரிசுகளை வென்றிருக்கிறேன்.   பேருந்து நிறுத்தங்களால் சூழப்பட்ட எங்கள் குடியிருப்பின் மறுபுறம் இருக்கும் ரெடிங்கனாப் நிறுத்தத்தில் என்னுடைய அலுவலகத்திற்கு செல்லும் 7, 8, 9 எண் […]

பாவண்ணன் கவிதைகள்

This entry is part 21 of 25 in the series 14 செப்டம்பர் 2014

    பின்னிரவு வாகனம்   புத்தாடைகளோடும் கொலுசோடும் பேருந்துச் சந்திப்பை அடைந்தபோது பின்னிரவு நேரம் சோர்வை மீறிய நிம்மதி நிறைந்திருந்தது அவன் முகத்தில் குட்டிமகளின் புன்னகையை நினைத்து அவன் கண்கள் சுடர்விட்டன   விளக்குகள் அணைக்கப்பட்டு ஒதுக்கிய வாகனங்களின் வரிசையைப் பார்த்தான் எழுதப்பட்ட ஊர்களின் பெயர்களை ஏமாற்றத்தோடு படித்தான் கழுவப்பட்ட பேருந்துகளையும் கண்ணாடி துடைக்கும் சிறுவர்களையும் மாற்றப்படும் சக்கரங்களையும் பழுது பார்க்கும் பணியாளர்களுக்காக ஒளியுமிழும் விசேஷ விளக்குகளையும் கிண்டலுக்கு ஆளாகியும் தொடர்ந்து கையேந்தும் பிச்சைக்காரியையும் பெருமூச்சோடு […]

நினைவிருக்கும் வரை நிலைத்திருக்கும் பெயர் – சு.கிருஷ்ணமூர்த்திக்கு அஞ்சலி

This entry is part 13 of 25 in the series 14 செப்டம்பர் 2014

1984 ஆம் ஆண்டு. திருமணத்துக்காக விடுப்பெடுத்துக்கொண்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் கர்நாடகத்தில் உள்ள ஹோஸ்பெட்டிலிருந்து புதுச்சேரிக்கு வர ஒரு நாள்முழுக்க பயணம் செய்யவேண்டும். ஹோஸ்பெட்டிலிருந்து குண்டக்கல் வரைக்கும் ஒரு தொடர்வண்டி. அங்கிருந்து சென்னைக்கு ஒரு தொடர்வண்டி. அதற்குப் பிறகு விழுப்புரத்துக்கு ஒரு தொடர்வண்டி. அப்புறம் புதுச்சேரிக்கு ஒரு வண்டி. எனக்கு தொடர்வண்டிப் பயணங்கள் பிடிக்கும் என்பதால் நேரத்தைப்பற்றி கவலைப்படாமல் இப்படி மாறிமாறிப் பயணம் செய்தேன். சென்னையில் சென்ட்ரல் நிலையத்திலிருந்து பூங்கா நிலையத்துக்குச் செல்லும் வழியில் ஒரு […]

“மூட்டை முடிச்சுடன்….”

This entry is part 12 of 25 in the series 14 செப்டம்பர் 2014

எஸ். ஸ்ரீதுரை எருது பூட்டிய ஏழெட்டு வண்டியில் அரிசி மூட்டை ஒரு ஐந்தாறும், பருப்புவகை மூட்டைகள் பத்தும் பித்தளையும் வெண்கலமுமாய் பாத்திரக் கடையையே கிளப்பிவந்த சீர்வரிசைப் பண்டங்களும் காய்கறி அடைத்த கோணிகளும் பட்சணவகைகளை அடைகாத்த பலவகை சைஸு மூங்கில் கூடைகளும் நகைப்பெட்டிகளும் பட்டுப்புடவைகளும் நிரம்பினதால் மூச்சுத் திணறிக் கொஞ்சம் கூட நகர முடியாமல் மூச்சுமுட்டிக்கொண்டிருந்த பீரோவும் எதற்கும் இருக்கட்டுமென்று ஒரு ஏழெட்டு டிரங்குப் பெட்டிகளும் பாக்கு வெற்றிலை பழங்களும் பூவுமாய் புகுந்தவீடு வந்துசேர்ந்த பொன்னம்மாள் ஐம்பது வருசம் […]

“கையறு நிலை…!”

This entry is part 5 of 25 in the series 14 செப்டம்பர் 2014

  ”நீங்க போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போயிட்டு வந்திருக்கலாம்…. – எதிர்வீட்டில் அவர்கள் வந்து இறங்குவதைப் பார்த்துவிட்டு, சடாரென்று தன்னை மறைத்துக் கொள்வதுபோல் உள்ளே வந்த சந்திரா என்னிடம் சொன்னாள். மனசுக்குள் இரக்கம். முகத்தில் தெரிந்தது. நான் அமைதியாயிருந்தேன். இப்டியே ரூமுக்குள்ளயே அடைஞ்சிக்கிட்டு புஸ்தகமே படிச்சிட்டிருங்க…..எல்லாம் வெறும் ஏட்டுச் சுரைக்காய்தான்…..என்றாள் மீண்டும். என்னைச் சீண்டுகிறாள். நன்றாகவே தெரிகிறது. கறிக்கு உதவாதுங்கிறதில்லை…..எப்டி உபயோகப்படுத்தறோம்ங்கிறதைப் பொறுத்தது… ஏன்னா இந்த உலகத்துலே எல்லாவிதமான அனுபவங்களும் ஒரு மனுஷனுக்குக் கிடைச்சிடுறதில்லை…வாழ்க்கைல அடிபட்டு, அனுபவப்பட்டு, […]

பெண் எழுத்தாளர்களுக்கான திருப்பூர் அரிமா மு.ஜீவானந்தம் இலக்கியப் போட்டியில் ஜெயந்தி சங்கருக்கு 2 பரிசுகள்

This entry is part 4 of 25 in the series 14 செப்டம்பர் 2014

பெண் எழுத்தாளர்களுக்கான திருப்பூர் அரிமா மு.ஜீவானந்தம் இலக்கியப் போட்டிகள் 1)  இரண்டாம் பரிசு – திரிந்தலையும் திணைகள் – நாவல் 2)  மூன்றாம் பரிசு — ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் முழுத்தொகுப்பு

உல்லாசக்கப்பல் பயணம் (ஆசிரியர் கிருத்திகா)

This entry is part 3 of 25 in the series 14 செப்டம்பர் 2014

    பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)   பயணம் உல்லாசமானது. கப்பல் பயணம் இன்னும் உல்லாசமானது. உல்லாசக்கப்பல் பயணம் சொல்லவேண்டுமா?’சந்தோசா தீவுக்குப்போகும்போதெல்லாம் சில நேரங்களில் இந்த உல்லாசக்கப்பல் நிற்பதை பார்த்திருக்கிறேன். ஒருமுறை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குடும்பத்தோடு சென்னையிலிருந்து சிங்கப்பூர் மாலையில் வந்து நேரடியாக உல்லாசக்கப்பலில் சென்றது அவரை தமிழ்வள்ளல் நாகை தங்கராசு அவர்களுடன் சென்று விமான நிலையத்தில் வரவேற்றது , பின் உல்லாசக்கப்பலில் அனுப்பிவைத்தது எல்லாம் நினைவுக்கு வந்தன. எப்போது? சிங்கப்பூர் எழுத்தாளர் திருமதி கிருத்திகா அவர்கள் எழுதிய […]

தினம் என் பயணங்கள் -33 என்னால் ஒரு நல்ல காரியம்

This entry is part 1 of 25 in the series 14 செப்டம்பர் 2014

  ஜி. ஜே. தமிழ்ச்செல்வி   பகுதி : 1 திடீரென்று ஒரு நாள்  அவளை நான் சாலையில் சந்தித்தேன்.  அது முற்றிலும் எதிர்பாராத சந்திப்பு. என்னைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டாள்.  அவள் கண்கள் என் கன்னங்களில் ஏதோ ஆறுதல் வேண்டி ஓய்வெடுத்தது போல் பதிந்தன.  அவற்றிலிருந்து கண்ணீரின் ஈரம் என் கன்னத்தில் பட்டு நான் அவள் முகத்தை நிமிர்த்தினேன். என் கண்களைச் சந்திக்கக் கூச்சப்பட்டு அவளது இமைகள் தாழ்ந்தன. என் கவிதை உள்ளம் […]

பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பா, பூமியைப் போன்று நில நடுக்க அடித்தட்டு நகர்ச்சி [Plate Tectonics] உள்ளது.

This entry is part 2 of 25 in the series 14 செப்டம்பர் 2014

.  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=rJtkPzShN3Q http://www.space.com/17820-europa-jupiter-s-icy-moon-and-its-underground-ocean-video.html http://www.nbcnews.com/science/space/jupiters-moon-europa-may-have-plate-tectonics-ice-n198796   பூதக்கோள் வியாழன் துணைக்கோளில் பீறிட்டெழும் நீர் எழுச்சிகள், பூமியின் நில நடுக்கம்போல் பூகம்பம் சீறியெழும் அடித்தட்டு ஆட்ட நகர்ச்சியால் ! நீர்முகில் ஆவி, வாயுக்கள், பனித்துளித் துகள்களும் எரிமலை போல் விண்வெளியில் வெடித்தெழும் ! அடித்தட்டு நகர்ச்சி  அவசியம் உயிரின விருத்திக்கு ! நீர் எழுச்சி வேகம் தணியும் ! பிறகு விரைவாகும் ! சனிக்கோளின்  துணைக்கோளில் நீர்முகில், பனித்தூள்கள், […]

கடவுளும் வெங்கடேசனும்

This entry is part 6 of 25 in the series 14 செப்டம்பர் 2014

அமுதசுரபி – மே 2013 “வெங்கடேசா… வெங்கடேசா…” “இதோ வந்துட்டேன்ப்பா…” வந்த மகனிடம் காசை கொடுத்தார் சுதர்ஸன், வெங்கடேசனின் அப்பா. “ரேஸர் ஒண்ணு வாங்கிட்டு வாப்பா…” காசை வாங்கியவன் முதுகுக்கு பின்னாடி அம்மாவோட குரல் கேட்டது “அப்டியே பொட்டுக்கடலை அரைக்கிலோ வாங்கிட்டு வந்துடுப்பா…” வீட்டுக்கு பக்கத்திலேயே பெட்டிக்கடை இருப்பது ரொம்ப சவுகரியமாக போய் விட்டது. “நேத்து இட்லிக்கு மாவு அரைக்கலைன்னு தங்கச்சி சொல்லுச்சு… இந்தாப்பா… இட்லி மாவு ஃபிரெஷ்ஷா இருக்கு.. எடுத்துட்டு போப்பா…” உரிமையோடு இட்லி மாவு […]