ரோஹிணி கனகராஜ் கவிதைகள் 

This entry is part 18 of 19 in the series 25 ஜூன் 2023

ஆணவசர்ப்பம்

___________________

தன்மயக்கம் கொண்டு

எனக்குள்ளே எழுந்து

ஆடுகிறது சர்ப்பம் ஒன்று… 

அதனை அடக்கியாளும்

மகுடியும்கூட என் 

கையில்தான்…. 

ஒருநாள் மகுடியை

உடைத்தெறிந்து வீசினேன்

அது ஒரு தாழம்புக்காட்டைச்

சென்றடைந்தது… 

எனக்குள்ளே இருந்த

சர்ப்பமும் வெளியேறி

தாழம்புக்காட்டில் தஞ்சம்

புகுந்தது… 

நான் இப்போது பியானோ

வாசிக்கக் கற்றுக்

கொள்கிறேன்…. 

சர்ப்பத்தையும்

மகுடியையும் நான் 

தேடுவதேயில்லை…

அவை வேறு 

யாரிடத்திலாவது

இருக்கக்கூடும்…. 

________________________

கண்ணாமூச்சி விளையாட்டு

இரவைப்

போர்த்திக் கொண்டு

வானம் உறங்கும்

வேளையில்

மரங்களிடையே 

ஒளிந்து மறைந்துக்

கண்ணாமூச்சிஆடும்

நிலவுக்கு ஒருபோதும்

வாய்ப்பதில்லை

ஒளிந்து கொள்ள ஓரிடம்

இலையுதிர் காலங்களில்… 

Series Navigationநான் ஒரு மலையாதல் அல்லது என்னில் ஒரு மலை உருவாதல்தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஒரு மகத்தான வாய்ப்பு – 2

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *