குருட்டு ஆசை

    பார்க்காதே என்கிறாள் கண்டிப்பான குரலில் அம்மா. கண் இருண்டு போய்விடும் எனப் பயம் சொடுக்கும் அதிர்வில் கண்மூடிச் சொல்கிறாள் அக்கா.   மழைகூட இரண்டாம் பட்சமாய்ப் போகச் செய்யும் அந்த மின்சாரப் பாம்பை எப்படித்தான் பார்க்காமல் இருக்கமுடியும்?  …

ஓவியம் தரித்த உயிர்

பாராட்டாகத்தான் உனைப் பட்டாம்பூச்சி என்றேன். தாவும் குணமென்று சொன்னதாய் நீ கோபம் கொண்டிருக்கிறாய். ஒருகால் பெயரை மாற்றி வண்ணத்துப் பூச்சியென்று உனைச் சொல்லியிருந்தால் உன் கோபம் சிவப்பு நிறம் கொண்டிருக்காது ஓவியம் தரித்துக்கொண்ட உயிர் நீ என சந்தோஷமடைந்திருக்கலாம். ஆனால் நீ…

மழைக்குப்பின் பூக்கும் சித்திரம்

  பெய்யெனப் பெய்யும் மழை என்பது போல் சொல்லெனச் சொன்னவுடன் வெடித்து வடிக்க என்னிடம் ஒன்றும் கவிதைக் கற்பு இல்லை. குளிர்ந்து இறங்கும் மேகத்தாரை காற்றுடன் மோகித்துச் சல்லாபிக்கும் ஆனந்தக் கூத்தை ரசிப்பது மட்டுமே மழைத் தருணங்களுக்கு நான் தரும் மரியாதை…

முதுமையின் காதல்

ரமணி எவ்வளவு நாட்கள் என்று தெரியவில்லை. ஆனால் அதிக நாட்கள் இல்லை என்வசம். உயிருக்கு வயதில்லை எனினும் வயதான உடலைத்தான் போர்த்திக்கொண்டிருக்கிறது என் உயிர். அது சரி முதுமையின் ஆரம்பம் எந்த வயதில் என்று தீர்மானித்தாகிவிட்டதா? அரசாங்கம் வகுத்த எல்லைகள் தாண்டியும்…

பள்ளியெழுச்சி

  நந்தகோபாலன் மகள் நந்தாவே ! மார்கழி போய் தையும் வந்தாயிற்று ! மூன்று நாட்கள் விடுமுறை முடிந்து திங்களும் விடிந்துவிட்டது ! பள்ளி செல்லவேண்டாமா ? எழுந்திரு ! இந்த அப்பார்ட்மெண்ட் ஒன்றும் நம் அரண்மனையல்ல ! நம் ஃப்ளாட்டோ…

மெய்ப்பொருள்

சத்ய தாரையில் ஒரு துளியாய் தெய்வம் கண்ட தருணம். ஆத்ம அரவத்தின் ஒய்யாரத்தில் கவிதையின் சயனம். கிடந்த பெரிய வீணையிலிருந்து எழுந்த புலப்படாத ராகத்தின் உயரத்தில் லயித்துப் பறக்கிறது மனப்பட்சி! கூப்பிய கைவிரல்களுக்கு இடையில் ஏந்திய மௌனம் துளசியின் ஈரம்பட்டு விழித்துக்…

தலைநகரக் குற்றம்

குடியரசு தின அணிவகுப்பின் போது பனிமூட்டத்திற்குக் கட்டுப்பட்ட வாயிலாகக் காட்டப்படும் இந்தியா கேட் கடந்த இரண்டு நாட்களில் வேறு வகையான அணிவகுப்பைக் கண்டது. இளம் இந்தியா கோபக்கனலைக் கக்கிக்கொண்டிருக்க , அரசு இயந்திரமோ தன் பாட்டுக்குத் தடியடியையும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும்…

சீமைத் தரகர்களும் ஊமை இந்தியர்களும்

" இந்தியனாக இரு. இந்தியப்பொருட்களையே வாங்கு ! இந்தியனாக இரு. இந்தியப் பொருட்களையே வாங்கு ! " " டேய் யார்றா அது. நேரம் காலம் தெரியாம கூவறது ? " " ஏனப்பா ? தேச பக்திச் சாரம் மிக்க…

அடங்கி விடுதல்

  சில நாட்கள் நமக்கானதே அல்ல என்போதுபோல் ஆகிவிடும். ஒன்றும் சரியாக நடக்காது. எல்லா வேலைகளும் நம் தலையிலேயே விழும்.  நம்மை எல்லோரும் அன்று  நாம் ஒரு தவறும் செய்யாதிருந்தாலும்  திட்டித் தீர்ப்பார்கள்.   அன்று மாட்டுக்கு புல் வாங்கி வரவேண்டியது…

கடவுள் உண்டு

மகேஷின் வாழ்க்கையில் நடந்ததெல்லாம் ஏதோ காலம் தவறாமல் புறப்பட்டுக் காலத்தோடு போய்க்கொண்டிருந்த நிச்சயிக்கப்பட்ட சொகுசு ரயில் பயணம் மாதிரிதான் இருந்தது. " அவன் பொறந்தப்பறந்தான் அவுங்கப்பாவுக்கு ப்ரோமோஷன் வந்துச்சு. கேசுபோட்டு இளுத்துக்கிட்டிருந்த எங்க பூர்விக சொத்து, பங்காளிங்ககிட்டேந்து எங்களுக்கு வந்துச்சு. எங்கம்மாளுக்கு…