கற்றுக்குட்டி கவலை பாழாய்ப்போன அணில்! நான் வியர்வை சிந்தி நட்டு, நீரூற்றி வளர்த்து, நாளும் பார்த்துப் பூரிக்கும் பப்பாளி மரத்திலிருந்து அரைப் பழமாக இருக்கும்போதே பறித்துக் கொறித்துப் போடுகிறது. எனக்கிரண்டு பழம் வாய்த்தால் அது மூன்று பிடுங்கிக்கொள்கிறது. நகரத்து அணில், பகலிலும் தைரியமாக வருகிறது. என் கம்பும் கூச்சலும் பொருட்டில்லை. என் வருகை கண்டால் நிதானமாக இறங்கி, மதிலிடுக்கில் ஓடி அடுத்த வீட்டுக் காம்பவுண்டில் அடைக்கலம். இப்போது இரண்டு பழங்கள் […]
எழுத்தாளர் திரைப்படப்பாடலாசிரியர் கவிஞர் நெப்போலியனின் ” காணாமல் போன கவிதைகள் ” நூலுக்கு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் – ஆனந்தபவன் மு.கு. இராமச்சந்திரா 2014ம் ஆண்டுக்கான புத்தகப்பரிசு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆனந்தபவன் உணவகத்தோடு இணைந்து வருடந்தோறும் வழங்கும் ஆனந்தபவன் மு.கு. இராமச்சந்திரா 2014ம் ஆண்டுக்கான புத்தகப்பரிசு எழுத்தாளர் திரைப்படப்பாடலாசிரியர் கவிஞர் நெப்போலியனின் ” காணாமல் போன கவிதைகள் ” நூலுக்கு வழங்கப்பட்டது. சிங்கப்பூர் வெள்ளி 2000ம் மற்றும் சான்றிதழுடன் வெற்றியாளரை கெளவரவப்படுத்தும் இந்நிகழ்வில், […]
படைப்பிலக்கியவாதியும்பத்திரிகையாளருமானதிரு. லெட்சுமணன்முருகபூபதியின் 20 ஆவது நூல் சொல்லமறந்த கதைகளின்வெளியீட்டு அரங்கு கடந்த சனிக்கிழமை23-08-2014ஆம் திகதிமெல்பனில் Dandenong Central Senior Citizens Centreமண்டபத்தில்நடைபெற்றது. இலங்கைகம்பன் கழகத்தின்ஸ்தாபக உறுப்பினரும் இலக்கியஆர்வலருமான திரு. கந்தையா குமாரதாசன்இந்நிகழ்வுக்குதலைமைதாங்கினார். அண்ணாவியர் இளையபத்மநாதன் – எழுத்தாளர்கள் திருமதிபுவனாஇராஜரட்ணம் – டொக்டர் நடேசன் – திரு. ஜெயராமசர்மா -சமூகப்பணியாளர்கள் திருவாளர்கள் இராஜரட்ணம் சிவநாதன் – நவரத்தினம் இளங்கோ – டொக்டர் சந்திரானந்த் – ஜனாப் ரஃபீக்முருகபூபதியுடன் வீரகேசரி நிறுவனத்தில் முன்னர் பணியாற்றியதிரு. சுப்பிரமணியம் தில்லைநாதன் […]
தாயின் கருவறையிலிருந்து விட்டு விடுதலையாகும்போதும் மழலையர் பள்ளியில் சேர்க்கைக்கான பெரும்கனவுகளுடன் நிற்கும்போதும் படித்தவற்றையெல்லாம் தேர்வு அறையில் கொட்டி விட்டு முடிவுக்காக காத்திருக்கும்போதும் ஊரே கூடியிருக்கும் இடங்களில் அன்புக்குரியவரின் வருகைக்காக ஏங்கித்தவிக்கும்போதும் வேலைவாய்ப்பிற்காக ஆண்டுக்கணக்கில் கிடைக்குமென்று நம்பிக்கொண்டிருக்கும் போதும் திருமணச்சந்தையில் வரன்தேடி இளமை அழிந்தொழிந்து உழைத்து ஓடாக தேயும்போதும் பிள்ளைவரம் வேண்டி கோவில்கோவிலாக அலைந்துதிரியும்போதும் என்னுள் உண்டாகும் வலி நீ உணர வாய்ப்பில்லை ஏனென்றால் நீதான் இன்னும் இம்மண்ணில் வந்து பிறக்கவில்லையே! அமுதாராம்
ஒரு அரிசோனன் நான்தான் பாஞ்சால நாட்டின் இளவரசியான பாஞ்சாலி; துருபத மன்னனின் மகளான திரௌபதி; கருப்பாக இருப்பதாலும், கார்மேக வண்ணனான கண்ணனால் உடன்பிறப்பாக ஏற்கொண்டதாலும், கிருஷ்ணை என்றும் அழைக்கப்பட்டவள். பெண்மையைப் போற்றும் பெருந்தகையாளர்களே! நீங்கள் ஏன் என் பக்கம் பேசுவதில்லை? ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதியா என்று பேசும் உங்கள் கூற்றை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்று, ஐந்து கணவர்களைக் கொண்டேனே, அதை ஏன் நீங்கள் பாராட்டிப் பேசுவதில்லை? ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்த […]
அன்புடையீர், வணக்கம். 12வது உலகத்தமிழ்ப் பண்பாட்டு மாநாடும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 40வது ஆண்டு நிறைவு விழாவும் 2014 அக்டோபர் 4,5 ஆம் தேதிகளில் ஜெர்மனியில் நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான அறிவிப்பு மடல் இணைப்பில். உலகத் தமிழர் பண்பாடு, கலை, கலாச்சார, வாழ்வியல் மேம்பாடு, தமிழ்க் கல்வி போன்றவற்றைப் பற்றிய பதிவுகளாக உலகளாவிய தமிழ்க்கல்வி புலம் பெயர் தமிழர்கள் தமிழர் சமயமும் வழிபாடும் தமிழர் நாகரீகமும் தமிழ்க் கலைகளும் தமிழ் மரபுகள் தமிழ் வளர்ச்சியின் அறிவியல் மேம்பாடுகள் […]
2014ஆம் ஆண்டிற்கான ’பால சாகித்ய அகடமி’ விருது இரா.நடராசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. பால சாகித்ய அகடமி விருது என்பது சிறுவர் இலக்கியத்திற்காக வழங்கப்படும் சாகித்ய அகடமி விருது. ’விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள்’ தொகுப்பிற்காக (வெளியீடு புக்பார் சில்ரன் 7, இளங்கோ சாலை சென்னை 18 044 24332924 ரூ.50) வழங்கப்பட்டுள்ளது. இரா. நடராசன் பற்றிய முழுவிவரம் ஆயிஷா இரா, நடராசன் (பி,1964) தமிழில் சிறுகதை. நாவல். மொழிபெயர்ப்பு அறிவியல் நூல்கள் என அனைத்து தளங்களிலும் இயங்கிவரும் முன்னனி எழுத்தாளர் […]
எம்.ஜெயராமசர்மா – மெல்பேண் நாடறிந்த நல்ல தமிழ் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள்கதைகள் எழுதினார்.கட்டுரைகள் எழுதினார் விமர்சனங்கள் எழுதினார்.நாவலும் எழுதினார். செய்திகளையும் தொகுத்து எழுதிவந்துள்ளார். ( எம்.ஜெயராமசர்மா) இப்பொழுது எங்களுக்காக தமிழிலே புதிய ஒரு வடிவத்தில் தனது எழு த்தைத் தந்திருக்கிறார். அந்த முயற்சிதான் ” […]
செந்தில் (முகவுரையாக ஒரு கருத்தையும் கவிதையையும் முன்வைத்து இக்கட்டுரையை தொடங்குகின்றேன். இந்தியாவின் மத ஆன்மிக நூல்கள் குறிக்கும் இறை தத்துவங்களும், தெய்வங்களும், மக்கள் வழிபாட்டு முறைகளும் பண்டய இந்திய துணகண்டத்தில் தோன்றிய அறிவியல், தத்துவ புரிதல்களின் குறியீட்டு (Metaphors) வெளிப்பாடே எனலாம்). உண்மை யாது? (ஐம்பெரும் காப்பியங்களின் பெயர்களினால்) வளையாத பதி எது? சிலம்பு சொல்லும் அதிகாரம் எது? குண்டு அலகேசி எது? மேகலையும் மணி எது? சீவகத்தில் உள்ள சிந்தாத மணி! மேற்சொன்ன வரிகளில் […]
– இரா.உமா “எந்நாடு போனாலும் தென்னாடுடைய சிவனுக்கு மாதவிலக்கான பெண்கள் மட்டும் ஆவதே இல்லை” & கவிஞர் கனிமொழி மாதவிலக்கு எனப்படும் மாதவிடாய் குறித்து ஓர் ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது. கீதா இளங்கோவன் அந்த ஆவணப்படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். புனிதங்களும், தீண்டாமைகளும் உடைத்து நொறுக்கப்பட்டுக் கொண்டிருக் கின்ற சூழலில், பெண்ணின் மீது இந்தச் சமூகம் ஏற்றி வைத்தி ருக்கின்ற தீண்டாமையான மாதவிடாய் பற்றிய கருத்தாக்கங் களையும், மருத்துவர்களின் அறிவியல் சார்ந்த ஆலோசனை களையும் இப்படத்தில் பதிவு […]