வால்ட் விட்மன் வசன கவிதை -4 அவனுக்கு ஒரு பாடல் (For Him I Sing) (1819-1892) (புல்லின்இலைகள் -1)

This entry is part 9 of 26 in the series 30 டிசம்பர் 2012

(1819-1892) (புல்லின்இலைகள் -1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா வால்ட் விட்மன் வாழ்க்கை வரலாறு: அமெரிக்காவின் உன்னதக் கவிஞருள் ஒருவரான வால்டயர் விட்மன்1819 ஆம் ஆண்டில் வெஸ்ட் ஹில்ஸ், லாங் ஐலண்டு, நியூயார்க்கில் பிறந்தார். தனது 12 வயது வரை புரூக்லினில் வசித்து வந்தார். அவர் 11 வயதினராய் உள்ளபோது வீட்டில் வருவாயின்றி வேலை செய்து பணம் சம்பாதிக்கப் பள்ளி யிலிருந்து தந்தையால் நிறுத்தப் பட்டார். ஆகவே அவர் சிறு […]

தாகூரின் கீதப் பாமாலை – 46 வீணைக்குள் இன்னிசைக் கானங்கள்

This entry is part 3 of 26 in the series 30 டிசம்பர் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா உன் வீணைக்குள் இனிய கானங்கள் முன்பே ஒளிந்திருந்தன ! பூக்கள்  கொட்டிக் கிடக்கிறது என் கூடையில். அதே வசந்தகாலத் தென்றல் அடித்து அன்றைய தினத்தில் நம்மிருவரையும் ஆட வைத்தது ஒருங்கே  ! அந்த நாளில் எவரும் அறிய மாட்டார் எந்த இன்னிசை அலைகள் இந்த வானை நிரப்பிய தென்று ! உந்தன் மெல்லிசைப் படகு வந்தது என் கடலோரம் எனது பூ மலர்ச்சி வண்ணத்தில் […]

வால்ட் விட்மன் வசன கவிதை -3 வரலாற்று ஆசான் ஒருவனுக்கு (To a Historian) (1819-1892) (புல்லின்இலைகள் -1)

This entry is part 21 of 27 in the series 23 டிசம்பர் 2012

வால்ட்  விட்மன்  வசன கவிதை -3 வரலாற்று ஆசான் ஒருவனுக்கு (To a Historian) (1819-1892) (புல்லின்இலைகள் -1) வரலாற்று ஆசான் ஒருவனுக்கு மூலம் : வால்ட் விட்மன்   தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா     வால்ட் விட்மன் வாழ்க்கை வரலாறு: அமெரிக்காவின் உன்னதக் கவிஞருள் ஒருவரான வால்டயர் விட்மன்1819 ஆம் ஆண்டில் வெஸ்ட் ஹில்ஸ், லாங் ஐலண்டு, நியூயார்க்கில் பிறந்தார். தனது 12வயது வரை புரூக்லினில் வசித்து வந்தார். அவர் 11 வயதினராய் உள்ளபோது வீட்டில் வருவாயின்றி வேலை செய்து பணம் சம்பாதிக்கப் பள்ளி யிலிருந்துதந்தையால் நிறுத்தப் பட்டார். ஆகவே அவர் சிறு வயதிலேயே ஓர் அச்சகத்தில் பணிசெய்ய வேண்டிதாயிற்று. பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு நாளிதழ் களுக்கு எழுதியும், அவற்றுக்குப் பிறகு தொகுக்கும் ஆசிரியராகவும் பணியாற்றினார். அவரது 17 வயதில் பள்ளி ஆசிரியராகச் சில காலம் வேலை செய்தார். 27ஆவது வயதில் புரூக்லின் தின இதழின் ஆசிரியரானார். புரட்சிகரமான அவரது கவிதைப் படைப்புகள் மிகவும் தனித்துவ முறையில் பாலுறவு உட்பட ஆவேசஉணர்ச்சியில் எழுதப் பட்டவை. அவர் அமெரிக்கக் குடியாட்சியை பேரளவு மதிப்புடன் கொண்டாடியவர். படைப்புகளில் குறிப்பாக அவர் முதலில் வெளியிட்டசிறிய கவிதைத் தொகுப்பு “புல்லின் இலைகள்” [Leaves of Grass] அவராலே பன்முறைத் திருத்தமாகிப் பின்னால் விரிவு செய்யப் பட்டது. வால்ட் விட்மன் தனது கவிதைகளில் ஒளிமறைவின்றி எதையும் வெளிப் படையாக வெளியிட்டதால், அவரது படைப்புகள் ஆபாசமானவை, வெறுக்கத்தக்கவை என்று முதலில் பலரால் ஒதுக்கப் பட்டன ! அவரது கவிதைகள் அனைத்தும் எதுகை, மோனைத் தளை அசையின்றி இலக்கண விதிக்கு அப்பாற்பட்டவசன நடைக் கவிதைகளாய்[Free Verse] எழுதப் பட்டவை. அவரது கவிதைகளை உயர்வாகப் பாராட்டி யவருள் ஒருவர் கவிஞர் எமர்ஸன் [Ralph Waldo Emerson]. 1855 இல் 12 பாடல்களுடன் முதற்பதிப்பு “புல்லின் இலைகள்” புத்தகத்தை வெளியிட்டார். பின்னால் அது 300 கவிதைகளுடன் விரிவானது. அதற்கு ஆரம்பத்தில்அமெரிக்கர் ஆதரவு கிடைக்க வில்லை. 1848 இல் வால்ட் விட்மன் நியூயார்க்கிலிருந்து நியூ ஆர்லியன்ஸ் சென்றார். அவர் அங்கேதான் முதன் முதலில் அடிமைகள் நடுத்தெருவில் ஏலம் விடப்படும்அருவருப்பு வாணிபத்தையும்,அடிமைக் கறுப்பர் படும் கொடுமைகளையும் கண்டு மனவேதனை அடைந்தார். ஆர்வமாய்ப் படிக்கும் வேட்கை மிகுந்த வால்ட்விட்மன் 1848 இல் தனது சொந்தச் செய்தித்தாள் “உரிமைப் பூமி“ [Free Soil] என்பதை வெளியிட்டு அதற்கு அதிபதி ஆனார். மின்சார உடல் பற்றி என் பாடல் [I Sing the Body Electric] & என்னைப் பற்றிய எனது பாடல்[Song of Myself] ஆகிய இரண்டு நூல்களும் மனித உடம்பைப் பற்றியும், உடல் நலம்,பாலுறவு பற்றியும் எழுதப்பட்டவை. தென்னக மாநிலங்களில் கொடுமைப் படுத்தப்படும் அடிமைகளை விடுவிக்க ஆப்ரஹான் லிங்கன் கடுமை யான போர் நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று.அதுவே சகிக்க முடியாத “சிவில் போர்” [Civil War] எனப்படும் உள்நாட்டுப் போரானது. அரசாங்க ஐக்கியப் படைக்கும், “கூட்டு மாநிலங்கள்” என்னும்கன்ஃபெடரேஷன் படைக்கும் யுத்தம் உண்டானது. இறுதியில் இருபுறமும் சமப்போர் புரிந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 30,000 மேற்பட்டது. அப்போது ஐக்கியப்படைகளுடன் போர் புரிந்த வால்ட் விட்மன் சகோதரன் ஜார்ஜ் விட்மன் காய முற்றதால் அவரைக் குணப்படுத்த வால்டயர் வாஷிங்டன். D.C.. வரவேண்டியதாயிற்று. அவர் சுயப்பணி யாளராய்ச் சேர்ந்து காயமுற்ற சுமார் 100,000 நபர்களுக்கு உதவும் வாய்ப்பு கிடைத்தது. வாஷிங்டன் D.C., மருத்துவ மனைக்குபணிபுரிய வால்ட் விட்மன் 600 தடவை வந்ததாக அறியப் படுகிறது. சிவில் போர் வெற்றியில் முடிந்து, ஆப்ரஹாம் லிங்கன் இரண்டாம் முறையாக நின்று, ஜனாதிபதி தேர்வு வெற்றி பெற்ற விழாவில் வால்ட் விட்மன் கலந்துகொண்டவர் என்று அறியப் படுகிறது. போர் முடிந்து சட்ட மூலமாக அடிமை வைப்பு முறை அமெரிக்காவில் நீக்கப் பட்டது. போர் நின்ற ஐந்தாம் நாள், அதற்குஆப்ரஹாம் லிங்கன் பலியானார். லிங்கன் சுடப்பட்டு மரித்ததைப் பற்றி வால்டர் விட்மன் எழுதிய இரங்கற்பா “ஓ காப்டன், என் காப்டன்” படிப்போரை உணர்ச்சிவெள்ளத்தில் ஆழ்த்துவது. 19 ஆம் நூற்றாண்டில் கவிதைப் படைப்புகள் எழுதிய வால்ட் விட்மனுக்கு 20 ஆம் நூற்றாண்டில்தான் அவரது படைப்புகளின்உன்னதம் வெளியாகிப் பரவியது. அவருடைய படைப்புகளின் செல்வாக்கு,மேன்மை புகழ்பெற்ற கவிஞர்கள் பாப்லோ நெரூடா, அல்லன் கின்ஸ்பெர்க், [அமெரிக்கா] ஃபெர்னான்டோ பெஸ்ஸோவா [போர்ச்சுகல்] ஆகியோர் ஆக்கங்களில் தெரிகிறது. வால்ட் விட்மன் கவிதைப் படைப்புகள் சில : அடிமை ஒழிப்புப்போர் பற்றி “டிரம் டாப்ஸ்”, “பீட் பீட் டிரம்ஸ்”, “இரங்கற்பா ஆப்ரஹாம் லிங்கனுக்கு”, குடியாட்சித் திறப்புகள்,” “இந்தியா நோக்கிப் பாதை.” [Drum-Taps, Beat ! Beat ! Drums […]

அறுவடை

This entry is part 20 of 27 in the series 23 டிசம்பர் 2012

கனவுக்கும் நனவுக்கும் இடையே இருந்தேன் காலக் கணக்குகள் தப்பாகாது வசிப்பது ஏ.சி அறையிலென்றால் இறந்த பின் அரியணையில் உட்கார வைத்து சாமரம் வீசுவோர் உண்டோ விதிக்கு கை விலங்கு போட்டுவிட்டேன் என்று நுனி மரத்தில் உட்கார்ந்து அடி மரத்தை வெட்டுவோர் உண்டோ சமரில் சமரசம் கொள்ளாதே என்று கீதை உரைத்தவன் வேடனடிக்க மாண்டது விநோதமல்லவா கருவறை இருட்டு என்றாலும் வெளியே நடப்பது கர்மாதி கர்மமன்றோ கோடி புரளும் கோயிலெல்லாம் உண்டிங்கே மகசூல் விருத்தியாகி விவசாயி வீட்டில் உலை […]

சீக்கிரமே போயிருவேன்

This entry is part 17 of 27 in the series 23 டிசம்பர் 2012

ஷான் வறண்டு போன வரப்பு கருகுன அருகம் புல்லு காருங்க பறக்குது காத்தாலை கம்பெனிக்கு பஸ்சுங்க பறக்குது பனியன் கம்பெனிக்கு ஐம்பது ஏக்கரா முதலாளி அருமைக்காரர் தோட்டத்த அறுத்தறுத்து வித்தாச்சு அமெரிக்கா போறாரு புள்ள அங்க வேலயில இவருக்கொன்னும் வேலயில்ல ரெண்டு ஏக்கர் முதலாளி ரங்கசாமி எடத்துல ராத்திரி நேரத்துல மஞ்சக் கல்லு நட்டுட்டான் ஐவேசு வருதுன்னான் பூடீசு போட்டுக்கிட்டு வாச்சு மேனா போறாரு பங்காளி பேக்டரிக்கு ஏரிக்கரை இடிஞ்சாச்சு சாயப்பட்றை வந்தாச்சு கரண்ட் இல்லா பூமியில […]

கோசின்ரா கவிதைகள்

This entry is part 14 of 27 in the series 23 டிசம்பர் 2012

கோசின்ரா   இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறாய் இன்னும் என்ன செய்துக் கொண்டிருக்கிறாய் எதையும் பறிக்காமல் இந்தக் காற்றில் தேவதைகளின் வாசனைகள் பறக்கின்றன கடவுள் துகள்கள் மிதக்கின்றன காதலின் அலைகள் மலர்ந்திருக்கின்றன உன் உதட்டிற்கும் பொருந்தும் முத்தங்கள் பட்டாம் பூச்சிகளாய் திரிகிறது இன்னும் என்ன செய்துக்கொண்டிருக்கிறாய் உன்னை கனவிலிறங்கி  முத்தமிட்டவள் இந்த வழியாக போய்க்கொண்டிருக்கிறாள் தனியாக அவள் உதிர்க்கும் வாசனைகளில் உன் கனவின் பிம்பங்கள் தெரிகிறது அதில் நீயே அதிசயக்கும் படி தன் உடலின் ஒளியை ஆயிரம் […]

தாகூரின் கீதப் பாமாலை – 45 கானம் பாட வேண்டும்

This entry is part 10 of 27 in the series 23 டிசம்பர் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ஏனிங்கு வரச் சிரமப் படுகிறாய் நேரமில்லை என்றால் ? சிறிது கணம் வந்து தங்கியதும் செல்ல வேண்டு மென நீ சொல்லாதே ! என் ஆத்மாவிடம் ஓர் அறிவுரை உள்ள தென்று எனக்குத் தெரியும்; எல்லை யின்றி ஆழமானது. என்றும் நிரந்தர மான ஒன்றைப் பற்றி உனக்கு எடுத்துச் சொல்ல எனக்கோர் வாய்ப்பு கிடைக் கட்டும் ! பூங்காவைச் சுற்றி வீசும் தென் திசைத் […]

அசிங்கம்..

This entry is part 41 of 41 in the series 23 செப்டம்பர் 2012

ஜே.பிரோஸ்கான்- நேற்று ஒரு நாள் நானும் அவனும் நண்பர்கள் அசுசியான வார்த்தை அறுத்தல்கள் என்றும் எமக்குள் இருந்ததில்லை நட்பாகிய பொழுதுகளில். என் வெளியில் விஸ்த்தீரணம் பிரபஞ்சம் தாண்டி பேசப்படுவதாய் அவனுக்குள்ளாடிய சலசலப்பில் தானே தோற்றுப் போனதாய் கவலையாகி கண்கள் கசக்கி உறவுகள் உடைத்தெரிந்து வெட்கித்து தவிக்கிறான். எனக்கு கிஞ்சித்தும் கவலையில்லை இன்று அவனது உறவுழப்பதில். –

முனகிக் கிடக்கும் வீடு

This entry is part 29 of 31 in the series 16 டிசம்பர் 2012

  கதவு காத்துக் காத்து தூர்ந்து கிடக்கும்.   இரவு பகல் எட்டி எட்டிப் பார்க்கும்.   அறை ஜன்னல்களின் அனாவசியம் காற்றடித்துச் சொல்லும்.   அறைக்குள் சிறைப்பட்ட வெளியைக் குருவிகள் வந்து வந்து விசாரித்துச் செல்லும்.   நடுமுற்றம் நாதியற்றுக் கூச்சலிடும்.   வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் காலத்தின் மொழியை அது கற்றிருக்கும்.   ஒற்றையடிப் படிக்கட்டு உச்சியில் நாய்க்குட்டி போல் ஆகாயம் காத்துக் கிடக்கும்.   முழுநிலா வெளிச்சத்தில் இறந்து போன மனிதர்கள் […]

தாகூரின் கீதப் பாமாலை – 44 உன்னுள்ளே கலந்து விட்டது என்மனம் !

This entry is part 21 of 31 in the series 16 டிசம்பர் 2012

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நீ யிங்கு வர இயலாது  போயினும் அது ஓர் காரண மாகுமா நீ என்னை ஒதுக்கிட ? என் உள்ளத்தில் நீ இல்லையா என்முன் நீ நில்லா திருப்பினும் ? உன்னுள்ளே கலந்து விட்டது என்மனம் எப்படி நீ எனை நீக்கி விட முடியும் ? வெறுப்பு மௌனத்துடன் நான் வெளியேறி விட்டாலும் வஞ்சிக்கப் படாது  என் காதல் ! ஊசியால் குத்துவதை […]