எழிலன் , கோவை சுப்பு ரத்தினமாகப் பிறந்து பின் பாரதியால் கண்டெடுக்கப்பட்டு பாரதிதாசனாக பரிமளத்த பாவேந்தர், பாரதியின் அடியொட்டி சமூக விடுதலையை அடி நாதமாகக் கொண்ட பல பாடல்களை எழுதியுள்ளார். எவ்வாறு பாரதியின் கவிதைகளில் தேச விடுதலை மையமாக இருந்ததோ அவ்வாறு பாவேந்தரின் கவிதைகளில் தமிழும் பகுத்தறிவும் மையமாக இருந்தன. அவ்வாறு எழுந்த ஒரு குறுங்க்காவியமே சஞ்சீவி பார்வத்ததின் சாரல் என்பது ஆகும். இந்தியத் திருநாட்டின் பெரும் இதிகாசங்களில் ஒன்றான இராமகாதையில் வரும் அனுமன் மருத்துவ […]
குறிப்பு – ஆப்கானிஸ்தானில் பிறந்து, அமெரிக்க நாவலாசிரியராக சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர் காலித் ஹுஸைனி, தனது 15 ஆவது வயதில் ஒரு ஆப்கானிஸ்தான் அகதிச் சிறுவனாக அமெரிக்காவுக்குள் நுழைந்தார். அப்பொழுது அவருக்கு ஆங்கிலத்தில் ஒரு சில சொற்கள் மாத்திரமே தெரிந்திருந்தது. இன்று அவர் ஒரு வைத்தியர், அமெரிக்க சமூக நல அமைப்பின் தூதுவர் மற்றும் சர்வதேச அளவில் வரவேற்பைப் பெற்ற The Kite Runner, A Thousand Splendid Suns ஆகிய நாவல்களை எழுதிய எழுத்தாளராகவும் […]
“கம்பர் போற்றிய கவிஞர்” என்னும் நூலை அண்மையில் கோவையில் நாஞ்சில் நாடனைச் சந்திக்கும்போது அவர் கொடுத்தார். முனைவர் தெ. ஞான சுந்தரம் எழுதிய அருமையான நூல் அது. ஞானசுந்தரம் அவர்களை நான் முன்பே நன்கு அறிவேன். வளவனூர் திருக்குறட் கழகத்திலும், கடலூர் இலக்கியச் சோலையிலும், கிருஷ்ணாபுரம் நடுநிலைப் பள்ளியிலும் அவரை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறேன். நான் எழுதிய “வைணவ விருந்து” எனும் நூலுக்கு அவர்தான் அணிந்துரை எழுதிக் கொடுத்தார். இந்த நூல் அவர் காரைக்குடியில் […]
மார்ச் 5, 2000 இதழ்: கவிதைகள்: காதல் என்பது பலவிதம் – பாரி பூபாலன் மூன்றில் வேம்பு – வ.ஐ.ச.ஜெயபாலன் ஒரு குறிப்பு: தேதிவாரியான பழைய இதழ்களுக்கான சுட்டியின் வழியே பழைய இதழ்களை வாசித்து எழுதி வருகிறேன். ஆனால் சில சமயம் பிந்தைய இதழில் குறிப்பிடப்படும் இதழ்கள் முந்தைய இதழின் வாசிப்பில் கிடைக்கவில்லை. உதாரணத்துக்கு 27 மார்ச் 2000 இதழில் இதாலியோ கால்வினோ பற்றிய முந்தைய கட்டுரையை கோபால் ராஜாராம் குறிப்பிடுகிறார். ஆனால் அதற்கு முன் அப்படி […]
மொழி ததும்பும் மனம் வாய்க்கப் பெறுவது ஒரு பெரும்பேறு. சட்டென்று வெள்ளம் பொங்கிப் பெருகும் நாட்களில் கிணற்றின் மேல்விளிம்புவரைக்கும் உயர்ந்துவந்து ததும்பும் தண்ணீர்போல மொழி மனத்தில் பொங்கித் ததும்புகிறது. அத்தருணம் ஒரு படைப்பாளியின் வாழ்வில் ஓர் அபூர்வத்தருணம். மொழி பழகும் ஒரு குழந்தை கண்ணில் படுகிற ஒவ்வொன்றுக்கும் தன் போக்கில் ஒரு பெயரைச் சொல்லி அடையாளப்படுத்தி அழைக்கத் தொடங்குவதுபோல, அந்த அபூர்வத்தருணத்தில் படைப்பாளி தன் கண்ணில் தென்படும் ஒவ்வொன்றையும் புதிதாகப் பார்க்கிறான். புதிதாக அடையாளப்படுத்த முனைகிறான். புதிய […]
ப. லட்சமி முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதிநேரம்), தமிழாய்வத்துறை பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி, (தன்னாட்சி) திருச்சிராப்பள்ளி படைப்பாளன் படைப்புகளில் தான் வாழும் காலத்தையும் பதிவு செய்கிறான். தனக்கு முந்தைய காலத்தையும் மதிப்பிடுகிறான். அதே நேரத்தில் எதிர்காலம் பற்றிய பதிவுகளையும் அவன் உணர்த்திநிற்கிறான். இம்முக்காலத்தையும் பதிவாக்கும் இலக்கியம் நல்ல படைப்பாக உயர்ந்து நிற்கிறது. முக்காலத்தையும் உணர்த்துதலே படைப்பாளனின் கடமையும் ஆகின்றது. ஒவ்வொரு படைப்பாளரிடத்திலும் இத்தகைய மூன்று காலத்தின் இயல்புகளைப், பண்புகளைக் காணமுடிகின்றது. புதுக்கவிதை உலகில் தனித்த இடம் […]
வியாளம் என்றொரு புத்தகம் சமீபத்தில் என் நெடுநாளைய நண்பர், பேராசிரியர், தமிழறிஞர் செ.ரவீந்திரனிடமிருந்து வந்தது. வியாளம் என்றால் என்ன பொருள் என்று தெரியவில்லை. தமிழறிஞர் எனக்குத் தெரிந்தவர் சிலரிடம் கேட்டுவிட்டேன். தெரியவில்லை. இதைப் படிப்பவர் யாராவது சொல்லக் கூடும். மிகுந்த சோகத்துடனும் இழப்பின் வலியுடனும் பாச உணர்வுடனும் இளமையில் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட ஒரு கலைஞனுக்கு அவரது தோழமையும் உடன் செயலாற்றும் வாய்ப்பும் பெற்றவர்கள் தங்கள் நினைவுகளை அஞ்சலியாகத் தந்துள்ளதன் தொகுப்பு இது. மறைந்த கலைஞனின் ஆளுமையையும் […]
அவள் ஒரு பௌதிக மாணவி.அவளது வீட்டின் கடிகாரம் திடீரென வினோதமாக பின்னோக்கிச் செல்கிறது.அவளுக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, பதினொரு மணி ஆறு நிமிடங்கள் இருக்கும் போது தான் அவள் கடிகாரத்தை கவனித்தாள். அவளது வாழ்வில் அது மிக முக்கியமான நேரம் என்பதால் அதனை அவள் தனது மனதில் குறித்தும் கொண்டிருந்தாள். அதன் பின் மிகப் பதட்டமாகவும் பயங்கரமாகவும் நகர்ந்த நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் இப்போதுதான் கடிகாரத்தைக் கவனிக்கிறாள்.நேரம் பின்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.அதனை அவள் உறுதிப்படுத்த கடிகாரத்தை உற்று […]
மரணவெளி.. அழகானது. எப்போதும் எல்லா உயிரினங்களுக்கும் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கும் மரணவெளி. மரணவெளி மாறாதது என்பதுடன் மாற்றங்களுக்கு அப்பாற்பட்டதும் கூட. மரணம் காலத்தை வென்ற காலச்சூத்திரம். புத்தனும் ஏசுவும் சித்தர்களும் மரணவெளியில் நட்சத்திரங்களாக இருந்தாலும் நிகழ்காலத்தின் முன் அவர்கள் கடந்தகாலமாக இருப்பது மட்டுமே மரணம்’ காலத்தை வென்று நிற்கும் காலச்சூத்திரத்தின் முதல் விதி. பூமியைப் போல உயிரினங்கள் வேறு எந்த கிரஹத்திலாவது இருக்கிறதா என்பதைத் தேடும் அறிவியல் உலகம், அங்கெல்லாம் மரணத்தின் சுவடுகள் இருக்கிறதா என்பதையே […]
திருவரங்கப்ரியா மனவெளி என்றதலைப்பைவிட இந்த மணல்வெளி என்னும் தலைப்புஅனைவருக்குமானதாக தோன்றியது. மனவெளியின் பதிவு தனிமனித அனுபவச்சாயல் படர்வதற்கு வாய்ப்பு இருக்கலாம். மணல்வெளி பொதுவானதாக இருக்கிறதல்லவா? மேலும் வெளி அனைவருக்கும் சொந்தமானது. உள் என்பது பிரத்தியேகமானது அவரவர்க்கானது. உள் என்பதிலிருந்துதான் உள்ளம் என்ற சொல் வந்திருக்கவேண்டும். உள்ளம் இருக்கிறது ஆனால் கண்ணுக்குத்தெரிவதில்லை. இல்லாத ஒன்றுடனே நமக்கான உறவு பலமானது. உள்ளத்தின் உட்ச்செல்ல ஒருவரால்தான் முடியும். இதயச்சுரங்கத்தில் ஒற்றையடிப்பாதைமட்டும். உள் என்பதன் எதிர்ச்சொல் வெளி என்றாலும் பொருள் எனப் பார்த்தால் இரண்டும் […]