தலைமுறை இடைவெளி

எனக்கும் என் மகனுக்குமிடையே அரைநூற்றாண்டு இடைவெளி அப்பா-மகன், குரு-சீடன் இப்படித்தான் நாங்கள் குருவாக அப்பாவாக என்மகன் எங்கள் மல்லிப்பூ உரையாடலில் முட்கள் இருந்ததில்லை கின்னஸ்களில் அவர் வாழ்க்கை கிண்ணத்தில் என் வாழ்க்கை போயிங்கில் அவர் பயணம் பொட்டு வண்டி என்பயணம் அவரின்…

ஒப்பீடு ஏது?

முகில்கள் மறைத்த பாதி நிலா உன் கவச முகம் இடைவெளி தேவையாம் பறவையின் சிறகுகளாய் நாம் இனி அவர்கள் பார்ப்பது உடல் உஷ்ணம் காதல் உஷ்ணம் பார்த்திருந்தால் தெறித்திருக்கும் வெப்பமானி தூறலும் வானவில்லும் தனித்தனி அல்லவே ஒன்றும் ஒன்றும் இரண்டு சிலருக்கு…

பாலா

எஸ் பி பி மூன்றெழுத்தா? முத்தமிழா? ஆயிரம் நிலாக்களை அழைத்து வந்தாய் அத்தனைக்கும் எப்படி அமாவாசை? பொத்தி வச்ச மல்லிகை மொட்டு கருகியது நியாயமோ? என் மின்னல் எங்கே? தேடுகிறது இடி என் வானவில் எங்கே? தேடுகிறது தூவானம் ஒரு தாலாட்டு…

தொலைத்த கதை

விதையிலிருந்து பிறந்தோம் உமிகளைத் தொலைத்துவிட்டோம் நம் மரப்பாச்சி பொம்மைகளைக் கறையான் தின்றுவிட்டது மழலையைத் தொலைத்துவிட்டோம் புத்த்க மூட்டைகளில் நம் மயிலிறகைத் தொலைத்துவிட்டோம் ‘ஒரே ஒரு ஊருல ஒரே ஒரு ராசா.......’ நாம் சொன்ன கதைகளின் ராசாராணிகள் எங்கோ அனாதைகளாய் அலைகிறார்கள் பாரம்பரியம்…

பேச்சுப் பிழைகள்

சில பேச்சுக்கள் கருக்களைக் கலைக்கும் கரும்புக்காட்டை எரிக்கும் என் பேச்சு கூட பல சமயங்களில் மணவீட்டில் அழுதிருக்கிறது மரணவீட்டில் சிரித்திருக்கிறது நிராயுதபாணியைத் தாக்கியிருக்கிறது சிலரை நிர்வாணமாக்க முயன்று என்னையே நிர்வாணமாக்கியிருக்கிறது என் நாட்காட்டியின் இன்றைய தாளையே கிழித்திருக்கிறது என் எழுத்தையே அமிலமாய்…

ஒரு சொல்

என் கவிதைகளின் விதையாக ஒரு சொல் சூரியனிடம் கைகுலுக்கிவிட்டு சாம்பலாகாமல் திரும்பியது ஒரு சொல் என் தூக்கம் தின்று உயிரை மென்று உதிர்ந்த நட்சத்திரமாய் வந்து உட்கார்ந்தது ஒரு சொல் நிலவின் கரைகளைக் கழுவிவிட்டு வந்தது ஒரு சொல் கடலின் ஆழத்தோடு…

ஆசைப்படுவோம்

விழிகள் நாடாக இமைகள் நாமாவோம் தேசியநாள் இன்று இப்படித்தா னென்று ஆசைப்படுவோம் ஆகும் பொருளாதாரங்கள் புடைத்து நிமிரும் நாள் பாச வீணைகள் பந்தம் இசைக்கும் நாள் சூழும் பகையாவும் சொடுக்கில் விலகும் நாள் தனிமை முகில்களை விமானத் தோழிகள் தழுவும் நாள்…

சூம்

முகத்துக்கு நேரே முகம் பார்க்கும் கண்ணாடி இது என்ன இடமாறு தோற்றப் பிழை சுயம் உள்ளே பிம்பம் வெளியே சிறகு முளைத்தது பிம்பத்துக்கு பொம்மையானது சுயம் பிம்பங்கள் சேர்ந்து தேசம் கண்டது அது ‘சூம்’ என்றானது சூமின் கைதியாய் சுயம் ஆனது…

மறதி

அட மழை அவசர வேலை ‘க்ராப்’ ஐ அழைத்தேன் வந்தார். சென்றேன் சேருமிடம் சேர்ந்தேன் சேர்ந்ததும்தான் புரிந்தது காசுப்பையும் மறந்தேன் கைப்பேசியும் மறந்தேன் காசு தருவ தெப்படி? காகிதம் ஒன்றில் கைப்பேசி எண் எழுதி ஓட்டுநர் தந்தார் பின் சொன்னார் ‘பேநௌ’…

வீட்டில் இருப்போம்

மரத்தின் வாழ்க்கை மகத்தானது ஊன்றிய இடமே உலகம் உலகம் அங்கு ஒடுங்கும் கொடியையும் தாங்கும் இடியையும் தாங்கும் மண்ணும் மழையும் காற்றும் கதிரவனும் கைகட்டி நிற்கும் அளந்து பெறாது அளந்து தராது கேட்டுப் பெறாது கேட்டுத் தராது விடியலை இருளை தளிரால்…