author

மல்லித்தழை

This entry is part 1 of 23 in the series 29 ஜூன் 2014

பின்பக்கம் நடுநரம்பிலிருந்து பிரியும் எட்டு நரம்புகள். ஒவ்வொன்றிலும் பிரியும் அடுத்த 8 நரம்புகள். உருப்பெருக்குக் கண்ணாடியில் பார்த்தால் பார்த்துக்கொண்டே இருக்கலாம். எட்டுப்பிரிவுகளாய் இலைகள். ஒவ்வொன்றிலும் இரண்டிரண்டாய் மூன்றுமூன்றாய் என்று நுனிகள். கூர்மையாக அல்ல. சமாதானமாக. வேலாயுதத்தை நினைவுபடுத்தும் சில நுனிகள். கணினியில் சுண்டெலியோடு நகரும் கைவிரல்களை நினைவுபடுத்தும் சில நுனிகள். v என்ற ஆங்கில எழுத்தைக் காட்டி வெற்றி என்று சொல்லும் சில நுனிகள். ஒரே தண்டில் ஏழெட்டு கிளைகள். ஒவ்வொரு கிளையிலும் ஏழெட்டு இலைகள். அகலமாய் […]

என் பால்யநண்பன் சுந்தரராமன்

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

வாழ்க்கையில் சந்தித்த முதல் போட்டி, வெற்றிபெறவேண்டுமென்ற முதல் வெறி, முதலில் அணிந்த செருப்பு இதெல்லாம் உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? எனக்கு ஞாபகமிருக்கிறது. அத்தனையிலும் என் நண்பன் சுந்தரராமன் சம்பந்தப்பட்டிருந்தான். தயவுசெய்து முகம் சுளிக்காமல் பின்னோக்கி 1950 களுக்கு பயணியுங்கள். அதுதான் என் தொடக்கப்பள்ளி காலங்கள். செல்லிப்பாட்டி பள்ளி கேட்டைத் திறக்கும்போது முதலில் நுழைவது நானும் சுந்தரராமனும்தான். சுற்றுச்சுவரின் மூலையில் இருக்கும் பூவரச மரத்துக்குக் கீழே எங்களின் குச்சி விளையாட்டு தொடங்கும். உங்களுக்கு பல்பம் என்றால் புரியலாம். ஆளுக்கு மூன்று […]

உயர்ந்த உள்ளம் உயர்த்தும்

This entry is part 1 of 25 in the series 20 ஏப்ரல் 2014

மண்ணைப் பரப்பி அதில் ஆனா ஆவன்னா எழுதிப்படித்த காலம். எல்லா எழுத்துக்களையும் அப்படித்தான் படித்தேன். எழுதினேன். எங்கள் ஊரில் அப்போதெல்லாம் வெறும் கூரைவீடுகளும் ஓரிரு ஓட்டு வீடுகளும்தான். எங்கள் வீடு மட்டும்தான் மாடிவீடு. ‘மெத்த வீடு’ என்பது எங்கள் குடும்பப் பெயர். எங்க அத்தா மட்டும்தான் சிங்கப்பூரில் சம்பாதித்துக் கொண்டிருந்தார். சிங்கப்பூருக்குப் போனால்தான் மாடிவீடு கட்டமுடியுமென்று கூரைவீட்டுக்காரர்கள் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.  அத்தா இப்போது சிங்கப்பூரிலிருந்து வந்திருக்கிறார். அப்போதெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் பிள்ளைகளை அடிக்க புளியங்குச்சி சீவி வைத்திருப்பார்கள். எங்கள் […]

வாழ்ந்து காட்டிய வழிகாட்டி

This entry is part 1 of 24 in the series 6 ஏப்ரல் 2014

  ‘மரைக்காயருக்கு குழாய் வழிதான் எல்லாமுமாம்.  கடைசியாக தம்பி  பார்த்தபோது நான் எப்போ வருவேன் என்று கேட்டாராம். இரண்டு நாட்கள்தான் தாக்குப்பிடிக்குமாம். உறவினர்களுக்குச் சொல்லிவிடுங்கள் என்று டாக்டர் சொல்லிவிட்டாராம்.’ என்று சொல்லி தம்பி தொலைபேசியை வைத்துவிட்டான். மதியம் உண்ட சோறும் காளாமீன் கறியும் நெஞ்சுக்குழியை விட்டு இறங்காமல் மேலே வரவா என்று கேட்கிறது. மரைக்காயரை இந்த நிலையில்  போய்ப் பார்க்காவிட்டால் அது  மரணதண்டனைக் குற்றம் என்றது மனசாட்சி. மீண்டும் தொலைபேசியை எடுத்தேன். அடுத்த முனையில் தம்பி. ‘நாளைக் […]

சிங்கையிலிருந்து திருச்சி செல்லச் செலவில்லை

This entry is part 1 of 23 in the series 23 மார்ச் 2014

  ‘நாடகங்களின் வளர்ச்சி பற்றிய கருத்தரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். ‘சிங்கையில் நாடகங்கள்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை தரமுடியுமா? எங்களின் கருத்தரங்கில் கலந்துகொள்ள முடியுமா?’ தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் அயல்நாடுகளில் தமிழ்க்கல்வித் துறையிலிருந்து அன்பு அழைப்பு. ஏற்றுக்கொண்டேன். உற்றாரையும் உடன்பிறந்தோரையும் பார்க்கலாம். ஒன்று வாங்கினால் ஒன்று இனாம் என்பது போன்ற வாய்ப்பு. தயாரானேன். பயணச்சீட்டு, விசா, கருத்தரங்கிற்கு கட்டுரை எல்லாம் தயார். முஸ்தபா கடையில் சில பேனாக்கள்,  மிட்டாய்கள், ரொட்டிகள், சில துணிகள் வாங்கிக்கொண்டு வெளியேறினேன். […]

பிச்சை எடுத்ததுண்டா?

This entry is part 1 of 24 in the series 9 மார்ச் 2014

‘பிச்சை எடுத்ததுண்டா?’ என்று உங்களைக் கேட்டால் கையில் கிடைத்ததை எடுத்து சாத்து சாத்து என்று சாத்துவோமா என்று நீங்கள் ஆத்திரப்படுவீர்கள். ஆனாலும் கேட்கிறேன். ‘பிச்சை எடுத்திருக்கிறீர்களா?’  இப்போது பதில் சொல்ல வேண்டாம். இந்தக் கதையை படித்து முடித்துவிட்டுச் சொல்லுங்கள். 70 களில் அறந்தாங்கியிலிருந்து புதுக்கோட்டைக்கு பயணச்சீட்டு 1 ரூபாய் 10 காசு. நீங்கள் 1.25 கொடுத்தால் பயணச்சீட்டுக்குப் பின்னால் 1.25 என்று எழுதிக் கொடுத்துவிடுவார் நடத்துநர். அவர் ஞாபகமாகக் கொடுத்துவிட்டால் ஓர் அதிசய நிகழ்ச்சியாக நிச்சயம் உங்கள் […]

குலப்பெருமை

This entry is part 2 of 20 in the series 23 பெப்ருவரி 2014

  கிழக்கு மேற்காய் 120- அடிக்கு 18 அடி அளவில் நீண்டு கிடக்கும் ஓட்டுக் கட்டிடம்தான் த.சொ.அ. தனுஷ்கோடி நாடாரின் வீடு. நான்காவது தலைமுறையாக அதில் வாழ்கிறார். கிழக்கு முனையில் இரண்டு தடுப்புகள் பூட்டியே கிடக்கின்றன. மேற்கு முனையில் மூன்று தடுப்புகளில்தான் புழக்கம். ‘த.சொ.அ. தனுஷ்கோடி நாடார் மரம் ஓடு வியாபாரம்’, ஏழெட்டு ஏக்கர் விவசாய நிலம் இவைகள்தான் வருமானம் தரும் சொத்து. மனைவி காமாட்சி அம்மாள். அவரின் ஒரே கொள்கை. ‘யார் எங்கு போனாலும் சாப்பிட […]

முப்பது ஆண்டுகளாகப் பேசவில்லை

This entry is part 2 of 27 in the series 19 ஜனவரி 2014

எங்கள் வீடுதான் நடு. இடப்பக்கம் சித்தப்பா வீடு.. வலப்பக்கம் பெரியப்பா வீடு. சித்தப்பா வீட்டில் இரண்டு தம்பிகள் பெரியப்பா வீட்டில் இரண்டு அண்ணன்கள், நான் என் தம்பி ஆக  ஆறு பேரும் ஒரே துவக்கப்பள்ளியில்தான் படிக்கிறோம். காலை 8.30க்கு எங்கள் தெருவில் இருக்கும் மின்கம்பத்தின் கீழ் கூடிவிடுவோம். வேறு இரண்டு பையன்களும் சேர்ந்துகொள்வார்கள். நாங்கள் ஏழெட்டுப்பேர் ஒன்றாக பள்ளிக்குச் செல்வோம். எங்கள் தெரு தாண்டி பட்டுநூல்காரத் தெரு தாண்டி பழைய ஆஸ்பத்திரி தாண்டினால் எங்கள் பள்ளிக்கூடம். கிட்டத்தட்ட […]

திண்ணையில் எழுத்துக்கள்

This entry is part 26 of 29 in the series 12 ஜனவரி 2014

வணக்கம் திண்ணையில் எழுத்துக்கள் பழைய வடிவமைப்பில் குறியீட்டில் இருப்பதை மாற்றமுடியாதா.? இன்றைய தலைமுறையில் பல பேருக்கு விளங்காமல் போகலாம் உதாரணமாக     ணை, னை, லை, மற்றும்          றா, னா,ணா, நன்றியுடன் யூசுப் ராவுத்தர் ரஜித்

இவரைப் பார்த்தா இரக்கப்பட்டேன்?

This entry is part 3 of 29 in the series 5 ஜனவரி 2014

காலையில் எழுந்தவுடன் முதலில் விழிப்பது இந்த திரைச்சீலையில்தான். திரைச்சீலை என்றால் புரியும் என்று நினைக்கிறேன். இருந்தாலும் தூய தமிழில் சொல்லிவிடுகிறேன். ‘ஸ்க்ரீன்’. அதன் காதுகள் கழன்றுகொண்டு அரைக்கம்பத்தில் பறந்து துக்கத்தைச் சொல்லும் தேசியக்கொடிபோல் தொங்குகிறது. எழுந்து மீண்டும் அந்தக் காதுகளை ஒழுங்காக வைத்து அமுக்கிவிட்டால் இரவு படுக்கைக்குப் போகும்போது மீண்டும் அரைக்கம்பத்தில் பறக்கும் கொடியாகிவிடும். காலை எழுந்ததும் பல் தேய்த்து முகம் கழுவுவதுபோல் இந்தத் திரைச்சீலையைச் சரிசெய்வது வாடிக்கையாகிவிட்டது. ஒரு திரைச்சீலைக்கு ஏழு காதுகள். அந்தக் காதுகளின் […]